Friday, July 16, 2021

GEETHANJALI


 கீதாஞ்சலி  -  நங்கநல்லூர்  J K  SIVAN  --தாகூர் 


88    அழிந்த கோவிலில் அழிவற்ற  நீ.


88.  Deity of the ruined temple! The broken strings of Vina sing no more your praise.
The bells in the evening proclaim not your time of worship.
The air is still and silent about you.
In your desolate dwelling comes the vagrant spring breeze.
It brings the tidings of flowers, the flowers that for your worship are offered no more.
Your worshipper of old wanders ever longing for favor still refused.
In the eventide, when fires and shadows mingle with the gloom of dust,
he wearily comes back to the ruined temple with hunger in his heart.
Many a festival day comes to you in silence, deity of the ruined temple.
Many a night of worship goes away with lamp unlit.
Many new images are built by masters of cunning art and carried to the holy stream of oblivion when their time is come .
Only the deity of the ruined temple remains unworshipped in deathless neglect.

கிருஷ்ணா,  சொல்லட்டுமா, இது எனக்கு பழக்கமானது தான். எத்தனை கோயில்களில் நீ  எந்தெந்த ரூபத்திலோ இருக்கிறாய். கோயில் என்றால் ஒரு காலத்தில் எல்லோராலும் வழிபடப்பட்டவை. இன்று  அண்டமுடியாமல் புதர்கள் நடுவில், சிதிலமடைந்து,  உடைந்து சிதைந்த   அனாதையாய்  கண்ணில் ரத்தம் சொட்ட வைப்பதாக உள்ளவை.ஒருகாலத்தில் செவிக்குணவாய்  இசைத்த கீதத்தை  காற்றில் நிரப்பிய  வீணைக்  கம்பிகள். இன்று  அறுந்து, சிதைந்த  நிலையில் உன் புகழ் பாட இயலாதவை.
மாலையில்  டாண்  டாண்  என்று ஒலித்து எங்கும்  எதிரொலித்து  எல்லோரையும்   உன்னிடத்தில் அழைக்கும்  அந்த ஆலயமணிகள் ஊமையாகி பல யுகங்கள் ஆகிறதோ?
இந்த மயான அமைதியில் காற்றும்  வீசுவதை நிறுத்தி விட்டதோ?  இல்லை. இல்லவே இல்லை. இந்த  நிர்கதியான,  கைவிடப்பட்ட  அநாதரவான சிதிலமான  இடத்தில் வசந்த கால   தென்றல்  பழைய நினைவில் தலை காட்டுகிறது. காற்றில் மரங்களிலிருந்து கிடைத்த புஷ்பங்களை  உன் மேல்   சொறிகிறது.   நித்யம் வேளா  வேளைக்கு  உன்னை  வழிபட்டு அர்ச்சனை செய்த புஷ்பங்கள் அல்ல இவைகள்.   
இதோ  போகிறானே  ஒரு  கிழவன்,  உன்னைச்  சுற்றி சுற்றி  அலைந்து கொண்டிருக்கிறான்  பார்.  . உன்னை தியானிக்கிறான் , சுற்றி சுற்றி பார்க்கிறான்  அருகே வர இயலவில்லை.  உன் அருளை இன்னமும் நாடிக்  கொண்டு தான் திரிகிறான் 

இருளும் ஒளியும், பகலும் இரவும் மாறி மாறி வந்துகொண்டே தான் இருக்கிறது.  தீயும்  நிழலும்   புகையும்  மண்டலமாக இருப்பதை போல்  புழுதியில் மூடப்பட்டுள்ளது.  பாழடைந்த இந்த  ஆலயம்  அவன் மனதில்  இதயத்தில் உன்னை வழிபடும் பசியை அதிகரித்துக் கொண்டே  இருக்கிறது.  என்ன வழி? ஒரு காலத்தில்  கோலாகலமாக  கொண்டாடப்பட்ட  பண்டிகைகள் விழாக்கள், வேறெங்கோ சென்று விட்டன. உன் ஆலயத்தில் எதுவுமே இல்லாமல் நின்றுவிட்டதே.  எண்ணற்றோர் வந்து வழிபட்ட இந்த ஆலயத்தில் விளக்கொளி நின்று பல காலம் ஆகிவிட்டதே. தீபமே பறந்துவிட்டதோ? மறந்து விட்டதோ?
எத்தனை கை தேர்ந்த சிற்பிகள் நிர்மாணித்த  ஆலயங்கள், அவர்கள் மனத்தில் நிறைந்த கற்பனைகளை கைகள் கல்லில்  சிலையாக  உயிரோவியமாக வடித்ததெல்லாம்  மறைந்து போவதற்காகவா, மறந்து போவதற்காகவா?  இது தான் காலத்தின் கோலமா? 
பரமேஸ்வரா, எது அழிந்தாலும் நீ அழிவற்றவன், எந்த நிலையிலும் நீ நீயாகத்தான் இருக்கிறாய். நாங்கள் தான் மாறிவிட்டோம்.  நாங்கள் உன்னை வழிபட்டால் என்ன, இல்லாவிட்டால் என்ன, என்றும் நீ புதியவன், பழையவன், நிலையானவன், ஸாஸ்வதன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...