Thursday, July 22, 2021

GEETANJALI

கீதாஞ்சலி  -   நங்கநல்லூர்  J K  சிவன் -
தாகூர் 


94.  பயணம் முடிந்து விடும்.


94.   At this time of my parting, wish me good luck, my friends! 
The sky is flushed with the dawn and my path lies beautiful.
Ask not what I have with me to take there.
 I start on my journey with empty hands and expectant heart.
I shall put on my wedding garland.   
Mine is not the red-brown dress of the traveller, and though there are dangers on the way I have no fear in mind.
The evening star will come out when my voyage is done and 
the plaintive notes of the twilight melodies be struck up from the King's gateway.


ஏனோ  எல்லோரும் மறந்து போகிறோமா?   நினைவில் வைக்க, நினைத்துப்பார்க்க,  பிடிக்க வில்லையோ?   பயம் தான் காரணமாக இருக்க வேண்டும்.  பற்றை விட மனமில்லை என்றால் அது  பறிக்கப்படும்போது  பிரிய மனமில்லை  என்றாலும் யாராலும்  எதுவும் எதிர்க்க முடியப்போ போவதில்லை.   நம்மை விடப்போவதில்லை.  நம்மைப்   பிடித்து,  பிரித்து இழுத்துக் கொண்டு தான்  போகப்போகிறது. தடுக்க ஒரு சக்தியும் இல்லை. ஆகவே தான் மரணத்தைப் பற்றிய பயம்.  மனம் அதை  நினைக்கவே  மறுக்கிறது.  மறைக்கிறது. மறுக்கிறது. இயலாமையை  வேறு எப்படி  காட்டிக்கொள்ள முடியும்? 

நண்பர்களே,  உறவுகளே, நல்லிதயங்களே,   இதோ நான் கிளம்பிவிட்டேன்.உங்களைப்  பிரிகிறேன். மீண்டும் எப்போதோ எப்படியோ, எங்கோ  சந்தித்தால்   ஒருவரை ஒருவர்  இனி தெரிந்து கொள்ளப் போவதில்லை. புரிந்து கொள்ள வழியில்லை.  ஆகவே  வாழ்த்தி விடை கொடுங்கள்.     இருண்ட  வானத்தில் கொஞ்சமாக  வெளிச்சம்  தோன்றிவிட்டது. .பொழுது விடிந்துவிட்டாலும்  இங்கே நான் அஸ்தமிக்கப் போகிறேன். 

என்  எதிரே அமைதியான  ஒரு   நீண்ட அழகிய  பாதை  என்னை வரவேற்கிறது.  அழைக்கிறது. அதில் பிரயாணம் செய்யும்போது என்ன வெல்லாம்  எடுத்துச் செல்கிறாய்?   என்று கேட்காதீர்கள்.  உடலில்  சுமை கிடையாது.  வெறுங்கையை  வீசிக்கொண்டு செல்கிறேன்.  எண்ணங்கள் ஆயிரம் எதிர்பார்ப்புகளோடு  என் சூக்ஷ்ம சரீரத்துடன்  
 என் சேமிப்புகளை சுமையாக தன்னோடு எடுத்து செல்லும்.  அடுத்த வீட்டுக்கு அதோடு குடியேறும். 

என் கழுத்தைப்  பார்த்தாயா  கிருஷ்ணா.  கல்யாணமாலை .  என்ன பார்க்கிறாய். என் உடையையா?  இது  யாத்ரிகர்கள் பெரும்பாலோர் அணியும்   சிகப்பு காவி, உடையல்ல.  எதிர் நோக்கி இருக்கும்  வழியில்  என்னவெல்லாம்  ஆபத்து வருமோ, ... எனக்கு தெரியாது.  ஆனால்  அது பற்றிய  பயமோ,கவலையோ  இல்லை.  

என்  யாத்திரை  முடியும்  நேரம் வானில் பளிச்சென்று ஒளிவீசும்  சுக்ரன் தோன்றும் நேரமாகி விடும்.  ராஜா  மாதிரி நான் செல்வேன்.  அந்தி  நேரத்தின்   சோக கீதம் மெலிதாக ஒலித்து என்னை வழி அனுப்பும்.  எங்கே செல்கிறேன் என்றே தெரியாத திரும்பி வராத பயணம்.




 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...