Sunday, July 4, 2021

GEETHANJALI

கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K SIVAN  --
தாகூர் 

79.   உனைக் காணாத கண்ணும் கண்ணல்ல.

79.   If it is not my portion to meet thee in this life then let me ever feel that I have missed thy sight let me not forget for a moment,let me carry the pangs of this sorrow in my dreams and in my wakeful hours.
As my days pass in the crowded market of this world and my hands grow full with the daily profits,
let me ever feel that I have gained nothing, let me not forget for a moment,
let me carry the pangs of this sorrow in my dreams and in my wakeful hours.
When I sit by the roadside, tired and panting, when I spread my bed low in the dust,
let me ever feel that the long journey is still before me, let me not forget a moment, let me carry the pangs of this sorrow in my dreams and in my wakeful hours.
When my rooms have been decked out and the flutes sound and the laughter there is loud,let me ever feel that I have not invited thee to my house
let me not forget for a moment, let me carry the pangs of this sorrow in my dreams and in my wakeful hours.


கிருஷ்ணா, உனைக் காணாத கண்ணும்  கண்ணல்ல. உன்னை நினைக்காத நெஞ்சும் நெஞ்சல்ல. எவ்வளவு  வருஷங்கள்  நான் வாழ்ந்து விட்டேன்.  இன்னும் எத்தனை வருஷங்கள் பாக்கி இருக்கிறதோ? இப்போது இந்த பிறவியில் உன்னை நான்  ஒருமுறையாவது சந்திக்காவிட்டால்,   இத்தனை வருஷம் வாழ்ந்து தான் என்ன பயன்? உன்னை மறவாமை ஒன்றே  வேண்டும்.
 ஒரு கணம் கூட நான் அதனை மறக்கக்கூடாது.  உன்னைக்காணாத எனது குறை  என் விழிப்பு நேரத்திலும் என் தூக்கத்தில் கனவாகவும் என்னை உறுத்திக் கொண்டே  இருக்கவேண்டும்.   
யார்  சொன்னது இந்த  உலக வாழ்க்கை சந்தையில் கூட்டம் என்று  நிறைய சர்க்கரை வாயில் போடவேண்டும். ஆமாம். நானும்  அந்த கூட்டத்தில் நெரிசலில் ஒருவன்.   கை  நிறைய சம்பாதித்தேன். என்ன பிரயோஜனம் அதனால்?   அடேயப்பா  இன்னும்  பெரிய  நீளமான பாதையை நான் கடக்க வேண்டும் போல் இருக்கிறதே. களைத்து  சாலை ஓரத்தில் மரத்தடியில் அமர்கிறேன். என் மேல் துணியை கீழே  மண்ணில் விரித்து படுக்கிறேன். அப்போதும்  உன்னைக் காணவேண்டும், இதுவரையில் காணவில்லையே என்ற ஏக்கம் என்னை உறுத்தவேண்டும்.  உன்னை மறவாமை வேண்டும்.
இங்கே பார்த்தாயா,  என் வீட்டை.  என் அப்பா கட்டி வைத்து விட்டுப் போன  பழைய பெரிய வீடு... அந்த அறைகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது பார். சுற்றிலும் மரங்கள். காற்றில் அவை ஆடும்போது உன் புல்லாங்குழல் சுத்தம் இந்த வீட்டை நிரப்புகிறது. எங்கும் கேட்கிறது. உன் இசை, சிரிப்பொலி போல் அவை  என்னை பிரமிக்க வைக்கிறது. அடடா  கிருஷ்ணா, உன்னை நான் ''வா இங்கே '' என்று அழைக்கக்கூட இல்லையே.  என்ன மஹா பாவி நான். இருந்தும் உன் குழலொலி, குரலொலி கேட்கிறதே. உன்னைத் சந்திக்கவே இல்லையே இன்னும் என்ற குறை என்னை வாட்டுகிறது. 

உனைக் காணாத கண்ணும் கண்ணல்ல  நினையாத நெஞ்சும் நெஞ்சல்ல... அடிக்கடி இது என்னை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும், உன்னை மறவாமை வேண்டும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...