Friday, November 29, 2019

LAST WISH




              சிறு பெண்ணின் ஆசை   J K  SIVAN 

 75 வருஷங்களுக்கு  முன்னால்   ''ரங்க ராட்டினம்'' என்ற  ஒரு பெரிய  விளையாட்டு சாதனத்தை   கிராமங்களில் கொண்டுவருவார்கள். பெரிய  வட்டமான  குடை  அதில்  நிறைய கம்பிகள் தொங்கும். ஒவ்வொன்றிலும்  குதிரைகள், யானைகள்,சோபாக்கள். அதில் ஏறி உட்கார்ந்து கெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும்.    நான் குதிரை பிரியன். அதன் மேல் தூக்கி உட்கார வைப்பார்கள். குதிரையின் முதுகில் உள்ள கெட்டி கம்பியை கட்டிப்பிடித்துக்கொண்டு சுற்றுவேன். 

குடையின் மத்தியில்   ஒரு பெரிய  கனமான  தண்டு போல்  இரும்புத் தூண்  தாங்கி நிற்கும். ரெண்டு ஆட்கள் கைப்பிடி போல் தடி கம்பியை  தூணின் ரெண்டு பக்கமும் பக்கம்  சுற்றும்போது  குதிரை யானை, சோபா எல்லாம் சுற்றும். வேகம் அதிகரிக்கும். சவாரி ஆனந்தமாக இருக்கும். பத்து சுற்று முடிந்து இறக்கி விடுவார்கள். காசு கொடுத்தால் மறுபடியும் சுற்றலாம். பிற்காலத்தில்    GIANT  WHEEL    ரோலர் கோஸ்டர் போன்ற விளையாட்டுகள் இதன் அடிப்படையில் தோன்றி  குழந்தைகளை கவர்ந்தன. இன்னும் கூட.  

எங்கள் காலத்தில் மேலே சொன்ன ரங்க ராட்னம்  எக்சிபிஷனில் திருவிழாக்களில் மட்டுமே  காணப்பட்டது. 

இனி விஷயத்துக்கு வருவோம். 

அமெரிக்காவில் ஒரு  பெரிய  ஆஸ்பத்திரியில்  ஒரு பத்து வயது பெண் .
 எவ்வளவோ போராடியும்  தோற்று போய்விட்டது.  காசு தண்ணீரானதே தவிர கண்ணீரை துடைக்கவில்லை. 
தீராத புற்றுநோய்க்கு அந்த குழந்தை அடுத்த பலி.   140 நாள்  அதிக பக்ஷம்.   அவள் பூலோக வாழ்க்கை முடியப்போகிறது.  பள்ளிப் படிப்பை ஆஸ்பத்திரி நிறுத்தியது. 
 தனது வியாதி என்னவென்றும் , தனது முடிவு இன்னும் சில நாள்  மட்டும் தான்  என்றும் அப்பெண் அறிவாள்.
 பெற்றோர்கள் அவளோடு  ஆஸ்பத்திரியில் குடியிருக்கிறார்கள். 
''அம்மா எனக்கு ஒரு நோட் பேனா கொடு '' அந்த பெண் ஒருநாள்  கேட்டபோது அம்மா கொடுத்தாள் .  பெண் ஆங்கிலத்தில் எழுதிய கவிதையின் சாரம்.

ரங்கராட்டினத்தில்  குழந்தைகள் சுற்றுவதை பார்த்ததுண்டா?
மழை  டப் டப் பென்று   தரையில் இடித்துக்கொண்டு  வானத்திலிருந்து இறங்கும் சத்தம் கேட்டதுண்டா?
பட்டாம்பூச்சி அங்குமிங்குமாக  திசை மாற்றி  பறப்பதை பார்த்ததுண்டா?
சூரியன்  மலைவாயில் விழும்போது  தகதகவென சிவப்பு பந்தாக கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி முழுதும் மறைந்து இருள் சூழ்வதை கவனித்ததுண்டா?

அவசரம் ஏன்?. மெதுவாகவே  செல்.. 
உன் ஆட்டத்தில் வேகம் எதற்கு.  வேகம் விவேகம் இல்லை என்று தெருவில் எழுதி இருக்குமே. 
காலம் நீண்டதே இல்லை. குறுகியது தான் .  எனக்கே தெரியுமே. 
பாட்டு ஒலிக்கிறது.. சற்றுநேரத்தில் ஓய்ந்து விடும்.  அப்புறம்?  
 ஆகவே மெதுவாகவே  போ.  

நாள் தோறும்   ஓடி பறக்கும்  ஈயை பார்க்கிறாயே 
எப்படி இருக்கிறாய்  என ஒருநாள் கேட்டதுண்டா?
அதன் பதில் காதில் விழுந்ததா ?
காலை  விடிந்தது. மாலையில்  முடிந்தது.  படுக்கையில் படுத்தாயா?
மறுநாள் செய்யவேண்டிய ஆயிரத்தெட்டு வேலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் ஓடுமா?

அவசரம்   ஏன்?. மெதுவாகவே  செல்.. 
உன் ஆட்டத்தில்  வேகம் எதற்கு.  வேகம் விவேகம் இல்லை என்று தெருவில் எழுதி இருக்குமே. 
காலம் நீண்டதே இல்லை. குறுகியது தான் .  எனக்கே தெரியுமே. 
பாட்டு ஒலிக்கிறது.. சற்றுநேரத்தில் ஓய்ந்து விடும்.  அப்புறம்?  
 ஆகவே மெதுவாகவே  போ.  

வீட்டில் பிள்ளையிடம்  சொல்வாயே  நினைவிருக்கிறதா?
'' இன்றைக்கு  இது போதும்,  நாளைக்கு  மீதியை  செய்வோம் ''
  ஏன்  நிறுத்தினாய்.  உன்  அவசரமா?  
 அவன் துயரம் அறிவாயா?

நட்பு அறுந்து போய்  நல்ல நண்பனை  காணோமா?
உனக்கு தான்  நேரமே இல்லையே
 ''என்னடா சௌக்யமா ? ' கேட்க  எப்போது நேரம்?  

அவசரம்   ஏன்?. மெதுவாகவே  செல்.. 
உன் ஆட்டத்தில்  வேகம் எதற்கு.  வேகம் விவேகம் இல்லை என்று தெருவில் எழுதி இருக்குமே. 
காலம் நீண்டதே இல்லை. குறுகியது தான் .  எனக்கே தெரியுமே. 
பாட்டு ஒலிக்கிறது.. சற்றுநேரத்தில் ஓய்ந்து விடும்.  அப்புறம்?  
 ஆகவே மெதுவாகவே  போ.

தலை தெறிக்க ஓட்டம், எங்கோ எதையோ அடைய....
அந்த அவசரம் உன்னை
போகும் வழியில் காணும் அற்புத  கேளிக்கையை  காணாத  குருடனாக்கியதோ?
கவலை மேல் கவலை பட்டு நாளெல்லாம் அவசர ஓட்டத்தில் 

வாழ்க்கை ஒரு பிரிக்கப்படாத 
பொட்டலமாக  தூக்கி எறிந்தாயிற்று.

வாழ்க்கை ஓட்டப்பந்தயம் இல்லை.
அவசரம்   ஏன்?. மெதுவாகவே  செல்.. 
உன் ஆட்டத்தில்  வேகம் எதற்கு.  வேகம் விவேகம் இல்லை என்று தெருவில் எழுதி இருக்குமே. 
காலம் நீண்டதே இல்லை. குறுகியது தான் .  எனக்கே தெரியுமே. 
பாட்டு ஒலிக்கிறது.. சற்றுநேரத்தில் ஓய்ந்து விடும்.  அப்புறம்?  
 ஆகவே மெதுவாகவே  போ.
மெதுவாகவே நட.   ஓடாதே.
கொஞ்சம் கொஞ்சமாகவே  செல் ,
பாட்டை முழுதும் கேள் 
அது முடியும் முன்பே.....

இன்னும் எண்ணி  140 நாள் தான்  வாழ்வு  என்று தெரிந்தும் ... இந்த பாட்டை எழுதிய அந்த பெண் தான் எழுதியதை  எல்லோரும் படிக்கவேண்டும் என்று விரும்பினாளாம். எல்லோருக்கும் சொல்லலாமே, என்று கடைசி ஆசையை  அந்த குழந்தை சொல்லிஇருக்கிறது. 
'' என்போல் வேண்டாம்... வாழ்க்கையை நிதானமாக ரசித்து ருசித்து வாழுங்கள் என்கிறது. என்னால்  அப்படி  முடியாது''  என்கிறதோ? 

 படித்து  வளர்ந்து முன்னேறி கல்யாணம் பண்ணிக்கொண்டு குடும்பம், குழந்தை என்று கனவு காணமுடியாது.  மற்றவர்கள் சந்தோஷமாக வாழட்டும் என்ற எண்ணம் இதை எழுத வைத்திருக்கிறதோ?  எவ்வளவு உயர்ந்த எண்ணம் !

அவளை உயிரற்று கட்டிலிலிருந்து  அகற்றியபோது தலையணை அடியில் 
அம்மா கொடுத்த  நோட்டு,
 அதில் இந்த பாட்டு. 
அதை எடுத்த வெள்ளை  கோட்டு    
--  அவளை  கடைசியாக  தொட்ட  டாக்டர். பெற்றோரிடம் கண்ணீருடன் கொடுத்து விட்டு  சொன்னது:  
எல்லோரிடமும் காட்டு. 




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...