Sunday, November 10, 2019

GEETHANJALI


கீதாஞ்சலி        J K  SIVAN 
ரவீந்திரநாத் தாகூர் 


23 Art thou abroad on this stormy night 
on thy journey of love, my friend? 
The sky groans like one in despair.
I have no sleep tonight. 
Ever and again I open my door and
 look out on the darkness, my friend!
I can see nothing before me. 
I wonder where lies thy path!
By what dim shore of the ink-black river,
 
by what far edge of the frowning forest, 
through what mazy depth of gloom
 art thou threading thy course to come to me, my friend?

                     23
    நண்பனே நண்பனே  நண்பனே!!

எங்கும் அட்டை கருப்பாக  இருள் சூழ்ந்து இருக்கிறது.   ஊ வென்று   குளிர் சேர்ந்த புயல் காற்று உடலை ஊசி துளைப்பது போல் துளைக்கிறது.  இந்த நேரத்தில் நீ எங்கே வெளி  நாடா  உள்   நாடா  எங்கே  உன் பிரயாணம்?  
 வானம்  நிர்கதியாக வலி  தாங்கமுடியாத  வியாதியஸ்தன் போல் எப்போது வெடிக்குமோ வென்று  முனகுகிறது. எந்நேரமும் எந்நேரமும் பிளந்து  மழை கொட்டலாம்.  

இன்று இரவு எனக்கு தூக்கம் போய்விட்டது.  யாருக்காக  நான் அடிக்கடி எழுந்து போய் கதவை திறந்து திறந்து பார்க்கிறேன்?ஒருவேளை நீயாக இருக்கலாமா  என்ற நப்பாசை.  காற்று தான் கதவை படபடவென்று இடிக்கிறது. 
இந்த இருளில் யார் என்னைத் தேடி வரப்போகிறார்கள்? என் எதிரே தோன்றுவது எல்லையற்ற சூன்யம் தான்.  அது சரி,  உன் பிரயாணத்தில் எந்தப்பக்கம் உனது  பாதை இருக்கிறது? இந்த பக்கம்  உண்டா?

கிருஷ்ணா, என் ஆருயிர் நண்பா,  இந்த இருளில் கரேல் என்று  கருப்பு மை  தடவியது போல் அதோ தெரிகிறதே அந்த நதியின் கரையிலா இருக்கிறாய்? நீயே கருப்பு.  அகண்ட   இருள் சூழ்ந்த  காட்டின்  எந்த  மூலையிலிருந்து நீ  தோன்றப்போகிறாய்?  எண்ணற்ற  சிக்கல்கள் கொண்ட  வலை பின்னி   நகர முடியாமல்  இருப்பதுபோல் உள்ள  குழப்பம் தரும்  அமைதியின்மை, ஏக்கம், துயரம்  இதிலிருந்து  பளிச்சென்று  சிறிய  ஒளிக்கம்பியாக   ஒரு வழி செய்து கொண்டு என்னிடம்  வருவாயா கண்ணா, உனக்காக தானே  நான் காத்திருக்கிறேன் என் ஆருயிர் நண்பா!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...