Sunday, December 30, 2018

PESUM DEIVAM

பேசும் தெய்வம் J.K. SIVAN
பரமாச்சார்யர்
' இது பேத்தல் இல்லை ''

மஹா பெரியவா பற்றி படிக்கவோ எழுதவோ ஈடுபடுவது ஒரு பெரியஆழமான சமுத்ரத்தில் முத்து குளிக்க இறங்குவது மாதிரி. எடுக்க எடுக்க முத்து வந்துகொண்டே இருக்கும். ஒரே அடியாக எல்லாவற்றையும் அள்ளிக்
கொண்டு வர முடியாது. விட்டு விட்டு தான் திரும்ப திரும்பமூழ்கவேண்டும். இதைதான் நானும் பண்ணிக்கொண்டு வருகிறேன்.(உங்களோடு சேர்ந்து).

ஒரு நண்பர் இதை ப்பற்றி குறிப்பிட்டு மீண்டும் எழுதுங்களேன் என்றார். idhu விஷயங்களை எத்தனை தடவை மீண்டும் மீண்டும் படித்தாலும் எழுதினாலும் அலுப்பதில்லை. ஏன் என்றால் அந்த விஷய த்தின் ரசானுபவம். மற்றொன்று தெரிந்தததே
யானாலும் அவர் வாயால் மீண்டும் ஒருமுறை கேட்போமே என்று தலை தூக்கும் ஆர்வம். இது வரை எனது ''பேசும் தெய்வம்'' இரண்டு பாகங்கள் வந்து விட்டது. மூன்றாவதும் தயாராகி விட்டது. அச்சுக்
கூலிக்கு எங்கே போவது? ஆகவே முதலில் முகநூலில் வாட்சப்பில் பரவட்டும், எனது பக்கத்தில் (blog ) போட்டுவிடுகிறேன். பிறகும் வேண்டுமென்றால் யாராவது ஏற்க முன் வந்தால் பிரசுரிப்போம். இதுவரை 35 புத்தகங்கள் வந்த விதம். இதுவும் வரும். இன்னமும் வரும்.

எதையாவது சொல்லும் போது அவர் வாயால் சொல்லி கேட்கவேண்டும் என்போமே அப்படி ' ' அவர் வாயால்'' கேட்கத்தோன்றும் சிலரில் முதலாவது நமது மஹா பெரியவா. -- பரமாச்சார்யா சொன்னதின் சாராம்சத்தை சுருக்கி பய பக்தியோடு சில விஷங்களைத் தருகிறேன்:

'' மறைந்த நம் தாய் தந்தையருக்கு, முன்
னோர்க்கு, தர்ப்பணம் ஸ்ரார்த்தம் எல்லாம் பண்ணுவதால் என்ன பயன்? யாரோ ஒருவ
ருக்கு வாழைக்காய், அரிசிகொடுத்தால்
அது முன்னோர்களைப் போய்ச் சேருமா?, வெறுமே எள்ளும் நீரும் இறைத்தல் அவர்களுக்கு திருப்தி தருமா? வெறும் பேத்தல், மூட நம்பிக்கை, ''வாட் நான் சென்ஸ்'' என்று சில அரைகுறைகள் இன்றும் கேட்கின்றனர். இவற்றுக்கு பெரியவா தரும் விடை தான் இன்றைய செய்தி.

மநுஷ்யராகப் பிறந்தவர்கள் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ருக்கடன், தேவகாரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கு நம்மாலானதைச் செய்ய வேண்டும்.

''ஆதித்யம்'' (ஒர் அதிதிக்காவது உணவு படைப்பது) விருந்தோம்பல் இதுதான்.இது மனுஷ யக்ஞம்.

பிரம்ம யக்ஞம் என்று இன்னொன்று. பிரம்மம் என்றால் பல அர்த்தம். இந்த இடத்தில் வேதம் என்று அர்த்தம். வேதம் ஒதுவதும், ஒதுவிப்பதுமே பிரம்மயக்ஞம். இது ரிஷி களின் திருப்திக்காக ஏற்பட்டது.

எல்லோரும் செய்வதற்காக ஏற்பட்ட இன்னொரு கர்மம் பூத யக்ஞம் அதாவதுமனுஷ்ய ஜீவனாக இல்லாத ஜீவராசிகளுக்குக்கூட நம் அன்பைத் தெரிவித்துஉணவூட்டுகின்ற காரியம். எனவே தான் நாம் பித்ரு யக்ஞம், தேவ யக்ஞம்,மநுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் இவற்றை எல்லோரும் ஏதோ ஒரு ரூபத்தில்
செய்யக் கடமைப் பட்டிருக் கின்றோம்
.வைதிக தர்மப்படி அவரவரும் தங்களுக்
கான தொழிலைச் செய்து ஈசுவரார்ப்பணம் பண்ணுவதே அவரவருக்கும் பிரம்ம யக்ஞம் என்று சொல்லலாம்.

வேத நெறியில் சொல்லப்பட்டதையே தான் ஏறக்குறைய திருவள்ளுவரும்சொல்லியி
ருக்கார்.

''தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறுஓம்பல் தலை.'' புரியலையா? விளக்கம் இதோ.

தென்புலத்தார் = பித்ருக்கள். பித்ருக்களான தாய் தந்தையர்க்கும் மூதாதையர்களுக்கும் நமது கடமைகளை எல்லோரும் அவசியம் செய்தாக வேண்டும். '' மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ'' (''அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ") என்றும் சொல்லு
கிறார்கள். தாய் தந்தையர் ஜீவிய வந்தர்களாக இருக்கையில், அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்ற சௌக்கியமெல்லாம்செய்து தரவேண்டும். (இதைப் படிக்கும் வரை அப்படிச் செய்யாதவர்கள் இந்தக்கணம் முதல் அப்படி தவறாமல் செய்ய ஒரு வேண்டுகோள் ) தாய் தந்தையர் நமக்காக ஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு நாம் பிரதியுப காரம் செய்ய முடியாது. அவர்களது மனம் கோணாமல் அவர்களை வைத்துக் காக்கவேண்டும்.(சிலர் இதை ஒரு காகிதத்
தில் எழுதி பர்சில் வைத்துக் கொள்ளவும். பர்ஸ் தொலையக்கூடாது )

பெற்றோர் மூதாதையர் இந்த உலகத்தை விட்டுப்போன பிற்பாடும், அவர்களுக்காக சாஸ்திரப் பிரகாரம் தர்ப்பணம், சிரார்த்தம் இவற்றை அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும். பெற்றோர் உயிரோடு இருக்கும் வரையில் அவர்களை வைத்துப் பராமரிக்க வேண்டும் .

''எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே இருக்கின்றன. அல்லது கண் முன்னாலேயே ஒருத்தன் எடுத்துப்போனான். அல்லது சாப்பிட்டுவிட்டான். பிதிரர்கள் எங்கேயோ மறு ஜன்மா எடுத்து விட்டார்கள் என்று நீரே சொல்கிறீர். அப்படியிருக்க இங்கே உள்ள வஸ்து அங்கே போய் அவர்களைச் சேருகிறது என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா?'' -- ஒரு சீர்த்திருத்தக்காரர் வாய்விட்டுக் கேட்கிறார். அவரை விடுங்கள். இதை படிக்கும், படிக்கக் கேட்கும் உங்களில் பலருக்கும் மனசுக்குள் இப்படிச் சந்தேகம் இருக்கலாம். இது விஷயமாக ஒரு கதைசொல்கிறேன்.

ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பட்டணத்தில் பிள்ளையை படிக்க வைத்திருந்தார். காலேஜில் பரிட்சைக்குப் பணம் கட்ட வேண்டியிருக்கிறது. அதுவும் மறுநாள்கட்ட வேண்டியிருக்கிறது. உடனே பையன் அப்பாவுக்கு தந்தி மணியாடரில் பணம் அனுப்பு என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் பற்றி எல்லாம் தெரியாது.நேராக யாரையோ போய் கேட்டு கொஞ்சம் தெரிந்து கொண்டார். எப்போதோ முந்தி ஒரு கொள்ளுப்பாட்டி இறந்தபோது யாரையோ பிடித்து போஸ்ட் ஆபீஸ் போய் தந்தி கொடுத்திருக்கிறார். இப்படித்தான் எப்போதோ, சில மணி ஆர்டர் அனுப்பி யிருக்கிறார். தொந்தியும் மணி ஆர்தரும் தெரிந்தது தான். அது என்ன இரண்டும் சேர்ந்த ''தந்தி மணியார்டர் ''? அவருக்கு புரியவில்லை. அப்பா தபாலாபீசுக்கு போனார். ரூபாயை போஸ்ட் மாஸ்டரிடம் கொடுத்துவிட்டுத் ''தந்தி மணியார்டர் ''பண்ண வேண்டும்என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணித் தந்திக்கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்து விட்டு
சரி, உம்முடைய பணம் நாளை போய் சேர்ந்துவிடும். அனுப்பியாகிவிட்டது என்றார். குமாஸ்தா பணத்தை பெட்டியில் போட்டதையும், ரூபாய் காகிதத்தில் ஒட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமலிருப்
பதையும் பார்த்த அப்பாக்காரர்,

''என் பணம் இங்கேதானே இருக்கிறது. அதில் ஒட்டை ஒன்றும்போட்டு நீங்கள் அனுப்ப வில்லையே. அது எப்படிப் பட்டணம் போய்ச் சேரும்?'' -- அப்பா

''நிச்சயம் அது போய்ச் சேர்ந்துவிடும்'' -- குமாஸ்தா . கட்டுக் கடகடஎன்று தந்தியும்அடித்தார். ஏதோ லொட்டு லொட்டென்று சப்தம் பண்ணுகிறான்
.சேர்ந்துவிடும் என்று சொல்கிறான். ருபாய் இங்கே இருக்கிறது. லொட் லொட்டென்று கட்டையை இங்கே அடித்தால் அங்கே பணம் எப்படிப்போய் சேரும். நான் கொடுத்த பணம் இங்கயே இன்னும் பெட்டியில் இருக்கிறதே '' என்று அப்பாவுக்குச் சந்தேகம். ஆனால் பணம் போய் சேர்ந்துவிட்டது.

தர்ப்பணம் முதலிய பண்ணுவதும் அந்த மாதிரியே ஆகும். நாம் எதைக்கொடுத்தாலும் அதற்கென சட்டப்படி கொடுக்க வேண்டும். சாஸ்திரம் என்கிற சட்டம் விதித்தபடி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர்தேவதைகள் அது யாருக்கு போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்துவிடுவார்கள். பிதிருக்கள் மாடாகப் பிறந்திருந்தால் வைக்கோலாக்கிப் போட்டு விடுவார்கள். குதிரையாகப் பிறந்திருந்தால்
புல்லாக்கிப் போட்டிருப்பார்கள். பிதுர் தேவதைகளுக்கு பரமேச்வரன் இப்படி உத்தரவு பண்ணி, இதற்கான சக்தியும் தந்திருக்கிறார். ஆகையால் சிரார்த்தத்தன்று கொடுப்பதைப் பெற்றுக் கொள்ள அப்பா நேரில் வர வேண்டியதில்லை.

தந்தி மணியார்டர் அனுப்பியவனுடைய பணமோ வாங்கிக்கொள்ளுகிறவனிடம் நேராகப் போவதில்லை யல்லவா . மணியார்டர் பெறுகிறவன் வேறு தேசத்தில் இருந்தால் அங்கே நம் ரூபாய் நோட்டு செல்லவே செல்லாது. இங்கே ரூபாயைக் காட்டிலும் வெளி தேசத்தில் டாலராகவோ, பவுனாகவோ மாற்றித் தரவும் ஏற்பாடு இருக்கிறது. ஆனால்,நம் ஊரில் டாலரையோ பவுனையோ மாற்ற முடியாது. இங்கே செல்லுபடியாகிற ரூபாயைத்தான் ஏற்றுக்கொள்ளுவார்கள். அப்படியே சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எள், தண்ணீர், வாழைக்காய் இதுகளை ஏற்ற உணவாக மாற்றித் தரப்படும்.
பிதிருக்களிடம் நமக்குள்ள நன்றி மனோபாவமும், சாஸ்திரத்தில் நமக்குள்ள சிரத்தையுமே முக்கியம். இன்னொருவனுடைய ஆரோக்கியத்துக்காக நான் டோஸ்ட் சாப்பிடுகிறேன். என்று பார்ட்டியில் வெள்ளைக்காரர் களும் வெறொருவன் பெயரைச் சொல்லிக் கொண்டு தாங்களே போஜனம்செய்கிறார்கள் ஒரு கப்பில் மதுவை ஊற்றி மற்றவர் பெயரைச் சொல்லி தூக்கிக் காட்டிவிட்டு தானே குடிப்பான். இதில் என்ன தெரிந்து கொளவேண்டும் தெரியுமா? ஒருவரின் மனோபாவத்தின் சக்தியால் இன்னொரு
வனுக்கு ஆரோக்கியம் உண்டாகும் என்று நம்புவது. சிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம். சிரத்தை நமக்கு முக்கியம். ஒரு காரியம் என்று பண்ண ஆரம்பித்தால் அதற்குரிய சட்டப்படி யாகத்தான் பண்ண வேண்டும். லெட்டர் எழுதினால், என் இஷ்டப்படி தான் அட்ரஸ்எழுதுவேன். அந்தத் தபால் பெட்டியில் போடுவானேன்?. எங்கள் வீட்டில்அதைவிட நல்ல பெட்டி செய்து அதில் தான் போடுவேன் என்று சொல்லலாமா? காரியமில்லாத மனோபாவமாக இருக்கிற வரையில் அன்பு,பக்தி, ஞானம் இலற்றைக் கட்டுப்பான்றிச் செலுத்தலாம்.

காரியம் என்று செய்கையில் அதற்காக ஏற்பட்ட விதியை விடவே கூடாது. இது தான் சாஸ்த்ரம். இது தான் விதி முறை .''

நான் இது போல நிறைய எழுத தயார். நீங்கள் படிக்க தயாரா? THE PICTURE OF PERIYAVA ATTACHED WAS DRAWN BY HIS BROTHER SRI SAACHU (SIVAN SIR )

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...