Wednesday, December 19, 2018

JEYADEVAR ASHTAPATHI



மஹநீயர்கள்      J.K. SIVAN 

ஜெயதேவர் 


                 
                  நீயின்றி நான் இல்லை கண்ணா ...!
                 
எதையோ   பொருத்தமாக எழுதிவிட்டு அனாவசியமாக  கிருஷ்ணன் ராதையிடம்  சரணடைவதாக  எழுதாமல் இருந்தது நல்லதாயிற்று  என்ற  சந்தோஷத்தோடு  மீண்டும்  மேற்கொண்டு  ராதா கிருஷ்ணா லீலைகளை எழுத முற்பட்ட ஜெயதேவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

ஓலைச்சுவடியை பிரித்ததும்  அவர் கண்ணில் பட்டது   ''எதை   இவர் எழுத வேண்டாம் என்று நினைத்தாரோ  அந்த வரிகள் ''   யார் இவ்வளவு  அச்சுகோர்த்தாற்போல்  மணி மணியாக  எழுதியது. நான் எதை எழுதவேண்டாமென்று  தவிர்த்தேனோ   அதே  எழுத்து எப்படி இதில் காண்கிறது.  நான் வேறே எழுதி வைத்தேனே அதை காணவில்லையே?

 ‘‘பத்மா! இது உன் எழுத்து போல் இல்லையே.   நான் எதை  எழுத வேண்டாம் என்று நினைத்ததை யார்  அப்படியே  இந்த ஓலையில் எழுதியது?”  ஆச்சர்யமாக இருக்கிறதே.

‘‘நாதா,  நீங்கள்தானே ஆற்றுக்கு ஸ்னானம் செய்யப்போனவர்  ஏதோ கவனம் வந்தது போல்   அவசரமாக திரும்பி வந்து  இதை ஓலையை எடுத்து  மனதில் தோன்றியதை எழுதினீர்கள். உங்கள் மனதில் என்ன நினைத்தீர்கள் எதை மாற்றினீர்கள் என்று உங்களுக்கு மட்டும் தானே தெரியும்'''  என்றாள்  மனைவி  பத்மாவதி.

''என்ன சொல்கிறாய் பத்மா நீ? நானாவது ஆற்றங்கரையில் இருந்து ஸ்நானம் செய்யாமல் பாதி வழியில் திரும்பிவந்தேனா? இதை எடுத்து எழுதினேனா?  நாள் முழுதும் யோசித்து  இப்போது தானே எப்படி எழுதலாம் என்ற  எண்ணத்தோடு இப்போது எழுத உட்காருகிறேன்? ''

''என்ன  நீங்கள் சற்று நேரம் முன்பு இங்கே வரவில்லையா?  இந்த ஓலையில் ஏதோ எழுதவில்லையா?  நான் உங்கள் அல்லவோ பார்த்தேன்?

 ‘‘இல்லை  பத்மா,  இல்லவே  இல்லை.  நான் வரவே இல்லை. வேறு வரி யோசித்து வைத்தேன். அவ்வளவு தான்.  ஆனால், முதலில் எழுத நினைத்ததையே  அல்லவோ பகவான் கிருஷ்ணன்  ஒப்புக்கொண்டு  அதை அவனே நேரில் வந்து என்னைப்போல்  அமர்ந்து உன்னெதிரே அதை அவன் கைப்பட ஓலையில் எழுதியிருக்கிறான். என் மனத்தில் முதலில் தோன்றியதை அப்படியே வார்த்தைகளாக்கி இருக்கிறான். நீ பாக்யசாலி   கிருஷ்ணனை  நேரில் தரிசித்த  புண்யவதி.
உணர்ச்சி மேலிட்டு  நெஞ்சம் தழுதழுத்தது  ஜெயதேவருக்கு.

அந்த ஸ்லோகத்தை அஷ்டபதியை  அவரே மனைவிக்கு  வாசித்து, பாடி காட்டினார். அவள் அபிநயம் செய்யவும் கற்றுக்கொடுத்தார்.  இவ்வாறு ஒவ்வொரு  கீதகோவிந்த பாடலையும்   எழுதி ஜெயதேவர் பாடுவார் பத்மாவதி ஆடுவாள்.

கீத கோவிந்தத்தில் உணர்ச்சிகளுக்கு பஞ்சமே இல்லை.  கண்ணனுக்கு எங்கும் ராதையோ,  ராதையைத் தேடும் கண்ணனோ அவர் பாடல்களில்  கண் முன்னால்  அப்படியே  உணர்ச்சி பொங்க  தோன்றுவார்கள்.


கிருஷ்ணன் அருள் வேண்டுமானால் ராதாவின் கால்களை முதலில் பிடிக்கவேண்டும். பிருந்தாவனத்தில் கிருஷ்ணனை தரிசிக்க போவோர்கள் ''ராதே கோவிந்தா'', ''ராதே கிருஷ்ணா'' என்று ஸ்மரித்துக்கொண்டே தான் செல்வார்கள்.

இரவில் வெள்ளி நிலவாக ஜ்வலிக்கும் சந்திரன் பகலில் இல்லை. பகலில் விகசிக்கும் தாமரை இரவில் சூம்பி விடுகிறது. ''என் சகி ராதா, நீ இரவிலும் பகலிலுமே அழகு அறிவு இரண்டும் கலந்த உன் காந்த சக்தியை என் மீது அள்ளி வீசுகிறாய் '' என்று கிருஷ்ணனே வர்ணிப்பதாக ஒரு பாடல் ' விதக்த மாதவா' என்ற கீத கோர்வையில் வருகிறது.

நீ சிரித்தால், மகிழ்ச்சி அலைகள் ஒன்றின் மேல் ஒன்றாய் பொங்கி எழுந்து கன்னத்திலிருந்து பீரி வெளிக் கிளம்பி என்னை தாக்குகிறது. ராதையின் அழகிய வளைந்த புருவங்கள் மன்மதனின் வில். அவள் கடை விழிப்பார்வையின் வீச்சு தேன் வண்டுகளின் ரீங்காரத்வனியை வாரி வீசும். அந்த தேன் வண்டு ''அடடா என் இதயத்தை துளைத்துவிட்டதே!'' இது ஒரு சிறு மாதிரி வர்ணனையை மட்டும் குறிப்பிடுகிறேன்.  . முழுதும் ரசிக்க 'விதக்த மாதவா' வை படிக்கவேண்டும்.

அன்று வைகாசி விசாக பௌர்ணமி நாள்

இரவைப் பகலாக்கிகொண்டிருந்தான் சந்திரன். அவனது குளிர்ந்த அலைகள் உலகை குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. மெல்லிய தென்றல் வீசி எங்கிருந்தெல்லாமோ இருந்த இனிய நறுமண மலர்களின் சுகந்தத்தை தன்னோடு சேர்த்து பரிமாறிக் கொண்டு இருந்ததோடு மட்டுமல்லாமல் வேறு ஒரு அருமையான வேலையையும் செய்தது. யமுனையின் குளிர்ச்சியையும் தாங்கி ஜில்லென்று வீசியது.

பிருந்தாவனத்தில் ஒரு அழகிய மரங்கள் அடர்ந்த இடத்திற்கு பாண்டீர வனம் என்று பெயர். அதில் யாரேனும் உலவினால் எளிதில் மற்றவர்கள் கண்களில் படமுடியாது.

''கிருஷ்ணா, இன்று என்ன விசேஷம்? எதற்காக என்னை இங்கு வரச்சொன்னாய்? என்றாள் ராதா.
''உனக்கே தெரியுமே, நான் ஏன் எதற்கு என்று உனக்கு தனியாக சொல்ல வேண்டுமா?
''என்ன பெரிய ரகசியம்? நீயே சொல்லேன். ஏதோ உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகப்போகிறதா என்ன?''
''எப்படி சரியாகவே சொல்லிவிட்டாய் ராதா? நீ ரொம்ப கெட்டிக்காரி, புத்திசாலி என்பதால் தான் உன்னை எனக்கு பிடிக்கிறது. ''
''என்ன சொல்கிறாய் கிருஷ்ணா, விளையாடுகிறாயா? தீராத விளையாட்டுப்பிள்ளை என்று நிரூபிக்கிறாயே?''
'' ஆமாம்,, ஆமாம் இன்றே இங்கேயே இப்போதே உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது.  இதை  நடத்தி வைப்பவர்   ஸ்ரீ மான் ஜெயதேவ வாத்யார் . போதுமா?'' என்றான்   சிரித்துக் கொண்டே  கிருஷ்ணன்.

ஒரு இடத்தில் படித்தேன் ரசித்தேன். அது இது:

''அந்த பாண்டிர வனத்தின் ஆல மரத்தின் கீழ் ராதா கிருஷ்ண திருமணம் நடந்ததாம். ஸ்ரீ மத் பாகவதம் கூறாத ராதையை- ராதா- கிருஷ்ண திருமணத்தை கீத கோவிந்தம் என்னும் சிருங்கார ரச காவியம் கூறுகிறது. இதனை இயற்றியவர் ஜெயதேவர். அதனை மிகவும் ரசிப்பார் காஞ்சிப் பெரியவர். ஒரு சந்நியாசி சிருங்கார ரசம் கலந்த கீத கோவிந்தத்தை ரசிக்கிறாரென்றால் அது சாதாரண சிருங்கார ரசமா? அந்த ஜெகந்நாதரே ரசித்த கீதமல்லவா!

விசாக-அனுஷ நட்சத்திரங்களுக்கு வேதத்தில் "ராதா' என்று பெயராம். வட மொழியில் அனுஷத்திற்கு  ''அனுராதா'' என்று பெயர். விசாகத்துக்கு அடுத்தது அனுஷம். எனவே விசாகன் ராதையுமா னான். சிவனே ராதையாகப் பிறந்து கண்ணனுடன் ராச லீலை புரிந்தான் என்று தேவி புராணம் கூறுகிறது. சிவனே கந்தனாக அவதரித்தான் என்று கந்தபுராணம் கூறுகிறது. ஆக, கந்தனே ராதையானான் என்றும் சொல்லலாம். ராதையின் மகிமையை' கர்க சம்ஹிதை, பிரம்ம வைவர்த்தம், தேவி பாகவதம்'' போன்ற நூல்கள் கூறுகின்றன. அதன்படி ராதா- மாதவன் திருமணம் நடந்த தினம் விசாக பௌர்ணமியே. எனவேதான் மகாபெரிய வருக்கு ராதா- கிருஷ்ண வைபவத்தில் விருப்பம் உண்டாயிற்று எனலாம்.

கிருஷ்ண சைதன்ய மகாபிரபு ஒரு சந்நியாசி. அவரது சீடன் ஒருவன் பிச்சை யிட்ட பெண்மணியின் முகத்தைப் பார்த்தான் என்பதை அறிந்து அவனை விலக்கினார். அதனால் அந்த சீடன் தன் உயிரையே மாய்த்துக் கொண்டான். அத்தகைய சைதன்ய மகாபிரபு ராதா கிருஷ்ண இயக்க சந்நியாசி. அவர் 12 ஆண்டுகள் பூரி ஜெகந் நாதர் கோவிலிலேயே வாழ்ந்து, தனது 50-ஆவது வயதில் ஜெகந்நாதரின் திருவடியில் கலந்தார். எனவே சந்நியாசிகளின் ராதா- கிருஷ்ண பிரேமை என்பது மிகவும் உயர்ந்த நிலை.

ஜெயதேவரின் கீத கோவிந்தம் ராதா- கிருஷ்ண விரக பிதற்றல்களை விவரிப்பது. 24 பாடல்களே கொண்டது; அஷ்டபதி எனப்படுவது. பூரி ஜெகந்நாதரே உவந்தது- எழுதியது என்று பூரியிலும் காசியிலும் பறைசாற்றப்பட்டது. (இதில் 19-ஆவது அஷ்டபதியை எழுதும்போது ஜெயதேவர் குழப்பமாகி எழுதாமல் எழுந்து சென்றுவிட, அவர் உருவில் ஜெகந்நாதரே அந்த அஷ்டபதியை எழுதினார் என்பர்.) ராதா என்பது ஜீவாத்மா; கிருஷ்ணன் என்பது பரமாத்மா. ஜீவாத்மா- பரமாத்மா ஐக்கியத்தை- முக்தி நிலையை விளக்குபவையே இந்தப் பாடல்கள்.''

ஒரு அஷ்டபதி பாடல் மிக அருமையாக ஒரு கன்னடப் படத்தில் கேட்டேன். மியூசிக் டைரக்டர் பாலமுரளி கிருஷ்ணா. அவரே அருமையான குரலில் பாடியிருக்கிறார். அந்த அருமையான அஷ்டபதி பாடலின் சில வரிகளை கேட்போமா? இந்த லிங்கை கிளிக்கினால் பாலமுரளி பாட உங்களுக்காக காத்திருக்கிறார்.எனக்கு மிகவும் பிடித்த ஒரு குட்டி அஷ்டபதி ஜெயதேவரின் விருந்து.

கிருஷ்ண சைதன்ய மகாபிரபு ஒரு சந்நியாசி. அவரது சீடன் ஒருவன் பிச்சை யிட்ட பெண்மணியின் முகத்தைப் பார்த்தான் என்பதை அறிந்து அவனை விலக்கினார். அதனால் அந்த சீடன் தன் உயிரையே மாய்த்துக் கொண்டான். அத்தகைய சைதன்ய மகாபிரபு ராதா கிருஷ்ண இயக்க சந்நியாசி. அவர் 12 ஆண்டுகள் பூரி ஜெகந் நாதர் கோவிலிலேயே வாழ்ந்து, தனது 50-ஆவது வயதில் ஜெகந்நாதரின் திருவடியில் கலந்தார். எனவே சந்நியாசிகளின் ராதா- கிருஷ்ண பிரேமை என்பது மிகவும் உயர்ந்த நிலை.

ஜெயதேவரின் கீத கோவிந்தம் ராதா- கிருஷ்ண விரக பிதற்றல்களை விவரிப்பது. 24 பாடல்களே கொண்டது; அஷ்டபதி எனப்படுவது. பூரி ஜெகந்நாதரே உவந்தது- எழுதியது என்று பூரியிலும் காசியிலும் பறைசாற்றப்பட்டது. (இதில் 19-ஆவது அஷ்டபதியை எழுதும்போது ஜெயதேவர் குழப்பமாகி எழுதாமல் எழுந்து சென்றுவிட, அவர் உருவில் ஜெகந்நாதரே அந்த அஷ்டபதியை எழுதினார் என்பர்.) ராதா என்பது ஜீவாத்மா; கிருஷ்ணன் என்பது பரமாத்மா. ஜீவாத்மா- பரமாத்மா ஐக்கியத்தை- முக்தி நிலையை விளக்குபவையே இந்தப் பாடல்கள்.''

ஒரு அஷ்டபதி பாடல் மிக அருமையாக ஒரு கன்னடப் படத்தில் கேட்டேன். மியூசிக் டைரக்டர் பாலமுரளி கிருஷ்ணா. அவரே அருமையான குரலில் பாடியிருக்கிறார். அந்த அருமையான அஷ்டபதி பாடலின் சில வரிகளை கேட்போமா? இந்த லிங்கை கிளிக்கினால் பாலமுரளி பாட உங்களுக்காக காத்திருக்கிறார்.எனக்கு மிகவும் பிடித்த ஒரு குட்டி அஷ்டபதி.https://youtu.be/7md-pEW39wc

இன்னும் வரும்:

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...