Wednesday, August 22, 2018

GITANJALI

கீதாஞ்சலி     -             ஜே.கே. சிவன்
ரபீந்திரநாத் தாகூர் 



ரவிந்த்ரநாத்  தாகூர்  கற்பனை வளம் மிக்கவர். ஞானி. அவர் எழுதியது பெங்காலி மொழியில். அவரே தனது கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக் கிறார்.  கிருஷ்ணா என்ற வார்த்தையை காணோம்.  நான் சேர்த்திருக்கிறேன். அவர் கற்பனை சற்று புரியாதவர்களுக்கு கிருஷ்ணனை சேர்த்து சொன்னால் புரியாதா என்ற ஆசை,

கிருஷ்ணா, நீ வரவில்லையே என்பதால் அழுது வருந்தி என் இதயம் கல்லாகியது. விரிசல் விட ஆரம்பித்துவிட்டதே. சீக்கிரம் கருணைமழையாக வா.  ஜோ என அன்பைப் பொழி. வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்கிறது உன் கருணை  இல்லாவிட்டால்? வா ஒரு ஆனந்த கீதமாக வா.  பொழுது எப்போது விடியும் என்று காத்திருந்து எண்ணற்ற ஜோலிகள் சூழ்கிறதே என்னை.  ஒரே சத்தமாக என்னை முதலில் கவனி என்று  நாலா பக்கத்திலிருந்தும்  என்னை தின் கிறதே. அமைதி ரூபத்தில் என்னிடம் வா. நிம்மதி வடிவத்தில் வா.  கைகால் மடக்கி ஒரு மூலையில் உன் கருணைபிச்சை கேட்டு நான் ஒரு மூலையில் இருளில் அமர்ந்திருக்கிறேனே  வா என் ராஜா, கம்பீரமாக வந்து உன் உதவிக்கரம் கொடு.   எப்போதெல்லாம் என் மனதை ஆசைகள் பொங்கி இருட்டடிப்பு செய்கிறதோ, ஒரு இனம்புரியாத பயம் என்னை கவ்வுகிறதோ, மன உளைச்சலில் நான் மூழ்கிறேனோ, அப்போதெல்லாம்   உன் கவலையை  விடு என்று இடி போல் முழங்கி, நான் இருக்கிறேனே உனக்கு என்ன குறை என்று மின்னல் போல் வந்து என் அறியாமை இருளிலிருந்து என்னை  காப்பாற்று.
.
                                                                   When the heart is hard and parched up, come upon me with a shower of mercy.
When grace is lost from life, come with a burst of song.
When tumultuous work raises its din on all sides shutting me out from beyond, come to me, my lord of silence, with thy peace and rest.
When my beggarly heart sits crouched, shut up in a corner, break open the door, my king, and come with the ceremony of a king.
When desire blinds the mind with delusion and dust, O thou holy one, thou wakeful, come with thy light and thy thunder.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...