Wednesday, August 29, 2018

GITANJALI



கீதாஞ்சலி     -       J.K. SIVAN                                  ரபீந்திரநாத் தாகூர் 

         
   அம்மாவின்  கண்கள்.....

இது மழையா தூத்தலா?   சை .. விடாது நசநச என்று நாளெல்லாம் பெய்கிறதே என்று  முன்பு சொல்வேன்.  இப்போது  மழையே  நீ வேண்டும். ஏன் ரொம்ப நாளாகவே  உன்னை காணோம்?  என் தெய்வமே  கிருஷ்ணா, நீ மழையாக வா. என் இதயம்  பாளம் பாளமாக  விரிசல் விட்ட  மழைகாணா  வறண்ட  நிலமாகி விட்டதே.    வானத்தை உற்று நோக்குகிறேன். எங்குமே  கருமை கண்ணில் படவில்லை. தொடுவானம் வரை பார்த்துவிட்டேன். மலட்டு வானம். ஆடைஇல்லாத நிர்வாண வானம்.  கொஞ்சமாவது ஒரு குட்டி மேகம்.. ஹுஹும்..   எங்காவது  மண் வாசனையை கிளப்பி விட  கொஞ்சம் தூத்தல்...ஹுஹும். 

கிருஷ்ணா. உன் கோபமான  சூறைக்காற்றை கிளப்பி விடு. அனுப்பு.  இருண்ட  கரு நிறத்தோடு  மரண ஓலத்தோடு, உயிர்களை பலி வாங்க வரட்டுமே. அப்படி உன் விருப்பம் இருக்குமா? மின்னல் சாட்டையால் பளீர் பளீர் என்று வலிக்க வலிக்க  தாக்குவாயா? ஆகாசத்துக்கும் பூமிக்குமாக  நீண்ட சாட்டை அடியா?  எதையோ செய்.  ஆனால் இந்த அமைதியான  நீரற்ற நிலத்தில் வீசும்  காற்றிலும் தெரியும் உஷ்ணத்தை நீக்கு. உன்னிடமே இந்த வறட்சியை திரும்ப பெற்றுக்கொள். எங்களுக்கு வேண்டாம்.  அசையாமல் எல்லாம் வாடும் இந்த அவஸ்தை போதும். இது கொடிய செயல்.  இதயத்தை ஏமாற்றத்தால்  எரிந்து  துயரால் வாடி துடிக்க செய்யாதே. 
உன் கருணை மேகம் மேலே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக  பூமியை நோக்கி இறங்கட்டும்.  என் மனதில் தோன்றும்  ஒரு காட்சி யை சொல்லட்டுமா?  அப்பா  கொடியவராக கோபத்தோடு  அடித்து திட்டி சித்ரவதை பண்ணும்போது அம்மா  பாவம் பேசாமல் நிர்கதியாக சுவற்றோரம் நின்றுகொண்டு அத்தனையும் வாங்கிக்கொண்டு கண்களில் நீர் ததும்ப தரையில் சொட்ட சொட்ட  வாய் பேசாமல் தீனமாக  வேறு வழியின்றி பார்ப்பாளே  அந்த பார்வை தான் என் பார்வை இப்போது,   உன் வருகைக்காக, மழை ரூபமாக, கருணை உருவமாக நீ வரவேண்டும். வா வா  கண்ணா வா...

the rain has held back for days and days, my God, in my arid heart. The horizon is fiercely naked---not the thinnest cover of a soft cloud, not the vaguest hint of a distant cool shower.
Send thy angry storm, dark with death, if it is thy wish, and with lashes of lightning startle the sky from end to end.
But call back, my lord, call back this pervading silent heat, still and keen and cruel, burning the heart with dire despair.
Let the cloud of grace bend low from above like the tearful look of the mother on the day of the father's wrath.
______

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...