Friday, August 3, 2018

LALITHA SAHASRANAMAM



ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (260 -274)
J.K. SIVAN

सुप्ता, प्राज्ञात्मिका, तुर्या,
सर्वावस्था विवर्जिता ।
सृष्टिकर्त्री, ब्रह्मरूपा,
गोप्त्री, गोविन्दरूपिणी ॥ 63 ॥

Supta pragynatmika turya
sarvavasdhavivarjita
Prushtikartri bramharupa
goptri govindarupini – 63

ஸுப்தா ப்ராஜ்ஞாத்மிகா துர்யா
ஸர்வாவஸ்தா விவர்ஜிதா |
ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா
கோப்த்ரீ கோவிந்தரூபிணீ || 63

संहारिणी, रुद्ररूपा
, तिरोधानकरीश्वरी ।
सदाशिवानुग्रहदा,
पञ्चकृत्य परायणा ॥ 64 ॥

Sanharini rudrarupa
tirodhanakarishvari
Sadashivanugrahada
panchakrutya parayana – 64

ஸம்ஹாரிணீ ருத்ரரூபா
திரோதாநகரீச்வரீ |
ஸதாசிவாsநுக்ரஹதா
பஞ்சக்ருத்யபராயணா || 64


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (260 - 274) அர்த்தம்

260 * ஸுப்தா -- இந்த நாமம் அம்பாளை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளே என்று அழைக்கிறது. விழிப்பே தூக்கம் அவளுக்கு. ஆழ்ந்த உறக்கத்தில் மனம் இயங்குவதில்லை. அதனால் கனவு இல்லை. விழிப்பில் கனவு உண்டா? ஆகவே மனதை இயங்கவிடாமல் கட்டுப்படுத்தும் அம்பாளை தூங்குபவளே என்று சொல்வது பொருத்தம் தான்!

* 261 * ப்ராஜ்ஞாத்மிகா -jபிரம்மத்தை அடைவதற்கு முதல் படி இந்த தேகத்தில் இருக்கும் ஆத்மாவை அறிவது. அதோடு சேர்வது. விழிப்பு நிலையில் மட்டுமே நம்மால் ஆத்ம சிந்தனை புரிய முடியும். அந்த பிரஞை ஆத்மாவைப் பற்றி வளர்வதற்கு அம்பாள் துணை புரிகிறாள். குழந்தைக்கு நடக்க சொல்லி தருகிறாள்.
இப்படி ஆத்ம ஞானம் வளர்ந்தால் அது சமாதி நிலையில் ப்ரம்மத்தோடு சேர்வதில் கொண்டு விடும். அதுவே அம்பாளை அறிவது.
* 262 * துர்யா -- இது நான்காவது நிலை, விழிப்பு, கனவு, தூக்கம், சமாதி நிலை, தான் வேறு, ப்ரம்மம் வேறு என்பதை மறந்து அதோடு ஒன்றிடும் நிலை. இதையே அம்பாளின் ஒரு நாமமாக வைத்திருப்பதே அவளுக்கும் ப்ரம்மத்திற்கும் வித்தியாசமில்லை என்பதை உணர்த்தும். சகலமும் துறந்த நிலை. மாண்டூக்ய உபநிஷத், ''துரியம் என்பது உள்ளுணர்வோ, வெளி உணர்வோ இல்லை, இரண்டுக்கும் இடைப்பட்டது ஏதாவது இருந்தால் அதுவும் இல்லை. அது எந்த உணர்வும் இல்லை. ஆத்மாவாக ஆகிவிடுதல் ஒன்றே'' என்கிறது.

* 263 * ஸர்வாவஸ்தா விவர்ஜிதா - அம்பாள் எல்லாவித நிலைகளையும் கடந்தவள் என்று ஒரு நாமம். ப்ரம்மத்துக்கு எது நிலை, ஏது தனியாக ஒரு உணர்வு? விண்டார் கண்டதில்லை, கண்டார் விண்டதில்லை.
சர்வம் ஈஸ்வரி மயம் ஜகத்.

* 264 * ஸ்ருஷ்டிகர்த்ரீ -- இனி வரும் நாமங்களில் பிரம்மம், அதன் ஐந்து செயல்பாடுகள் பற்றி வரும்.

* 265 * ப்ரஹ்மரூபா- அம்பாளை ப்ரம்மஸ்வரூபமாக காண்கிறார் ஹயக்ரீவர். ப்ரம்மதேவனுடைய நான்கு தலைகள். பரமாத்மா ஒன்றே புருஷன். ப்ரக்ரிதியோடு (இயற்கையோடு) சேர்ந்து தன்னை பல ரூபங்களாக்கிக்கொள்கிறது.

* 266 * கோப்த்ரீ -- இந்த பிரபஞ்சத்திற்கு ஒரே பாதுகாவலர் ஸ்ரீ லலிதாம்பாள். அவள் வேறு சிவன் வேறு அல்ல. சகல தெய்வங்களும் அவளே. தாய்க்கு மிஞ்சியா ஒருவர் பாதுகாக்க முடியும்?

* 267 * கோவிந்தரூபிணீ - ஹயக்ரீவர் அற்புதமான இந்த நாமத்தை சொல்கிறார். அம்பாள் கோவிந்தானாக நம்மை பரிபாலிப்பவள். காக்கும் தெய்வம். ஆயுசு ஆரோக்யம், செல்வம் எல்லாமே நாம் விஷ்ணு விடமிருந்து தானே பெறுகிறோம். அவர் அவ்வாறு அருளுவதற்கு ஸ்ரீ லட்சுமியாக அம்பாள் தானே சக்தி அளிக்கிறாள். ''கோ'' என்றால் ''வாக்கு'' என்றும் பூமி என்றும் பசு என்றும் அர்த்தங்கள் உண்டு.

* 268 * ஸம்ஹாரிணீ -- அம்பாள் படைத்தல் காத்தல் அழித்தல் என எல்லாவற்றுக்கும் காரணமானவள் என்று திரும்ப திரும்ப சொல்வது மனதில் பதியவேண்டும் என்பதற்காக. இந்த நாமம் அவளை சம்ஹாரம் எனும் அழித்தலுக்கும் பொறுப்பேற்றவள் என்று வலியுறுத்துகிறது.

* 269 * ருத்ரரூபா - அம்பாள் ருத்ர ரூபமானவள் எனும் நாமம் இது. பிறப்பை தொடர்வது இறப்பு. தோன்றியது எதுவும் மறையும். அழியவேண்டிய நேரத்தில் இந்த அழிவை மேற்கொள்பவன் ருத்ரன். அவனே அவள். சாந்தோக்ய உபநிஷத் ''ப்ராணன்கள் ருத்ரன் எனப்படும். அவைதான் எவரையும் அழச் செய்கிறது'' என்கிறது. குழந்தை பிறந்ததும் முதல் ஸ்வாசம் பிராணனை பெருகிறபோது அழுகிறது. அந்த நேரம் தான் அதன் ஜாதகதத்தை கணிக்க வேண்டிய நேரம் என்கிறார்கள். அதிலிருந்து தான் பூவுலக வாழ்க்கை துவங்குகிறது.

* 270 * திரோதான கரீ - அம்பாள் தன்னை நம்மிடமிருந்து மறைத்துக் கொள்கிறாள். ''திரையின் பின் இருப்பவள் '' என்று வைத்துக் கொள்வோம். மறைப்பது என்று சொல்லும்போது மறைவது பொருத்தமாகிறது. சகல உயிர்களும் மறைய காரணமானவள் அம்பாள். படைத்தல் காத்தல் அழித்தல் அடுத்தது மறைதல் எனும் திரோதானம், இதையே மகா பிரளயம் என்கிறோம். பழையன கழிந்தால் தானே புதியன புகும். இந்த ''கழிதலை '' புரிபவள் அம்பாள் ஸ்ரீ லலிதை என புரியவைக்கிறது இந்த நாமம்.
ஒரு ஜீவனுக்கு மூன்று வழிகள். ஒன்று பரமாத்மாவோடு, ப்ரம்மத்தோடு இணைத்தல், இறந்து பிறத்தல், மஹாப்ரளயத்தில் மறைதல்.

* 271 * ஈஸ்வரி -- 36 தத்துவங்களில் ஈஸ்வர தத்துவம் 26வது. ஞான சக்தியை கூறுவது. எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஈஸ்வரனாகிய ஈஸ்வரியே. சர்வ ஈஸ்வரி சர்வேஸ்வரி.

* 272 * ஸதாசிவா -- மிகவும் அற்புதமான நாமம் இது. சதா : எப்போதும், சிவம்: மங்களம். நன்மை. ப்ரம்மத்திற்கு ஐந்து காரியங்கள் நான்கை மேலே சொன்ன நாமங்கள் மூலம் அறிந்தோம். சிருஷ்டி, ஸ்திதி, லய, திரோதானம், அடுத்த ஐந்தாவது அனுக்கிரஹம். புணருத்தாரணமான ஜீவன்களை வாழ்த்தி அருளுதல்.

* 273 * அநுக்ரஹதா- மேலே சொன்னதன் தொடர்ச்சி. மீண்டும் தோன்றி நன்றாக இரு. இரக்கமும் தயையும் கருணையும் இருந்தால் தான் அனுக்கிரஹம் தோன்றும். தாயிடம் காணும் இந்த பண்பு அம்பாளிடம் நிரம்பி உள்ளது.

* 274 * பஞ்சக்ருத்யபராயணா - மேலே சொன்ன ஐந்து தொழில்களும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஸ்ரீ லலிதாம்பாள். அதனால் தான் அவளை பஞ்ச ப்ரம்ம ஸ்வரூபிணி என்பது. நமது அறியாமையால் நாம் அவளை உணரவில்லை. இந்த ஐந்தொழில்களையும் அம்பாள் தனது சித் ப்ரகாசத்தால், சித் சக்தியால் புரிகிறாள்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...