Wednesday, August 1, 2018

SUR SAGAR



சூர் சாகரம் ஜே.கே. சிவன்

ஒளி நீங்கி விட்டதே!

வெகுநாளாகிறது நாம் சூர்தாஸ் கண்ணில் பட்டு என்று சொல்லவே முடியாது. பிறவியிலிருந்தே கண்ணில்லாத அவரால் நம்மைப் பார்க்கமுடியாது என்பதால் நாம் தான் அவரை தேடிப் பார்த்து நாலு வார்த்தை அற்புதமாக அவர் கிருஷ்ணனை பற்றி நினைவு கூர்வதை கேட்கவேண்டும். மீண்டும் இனி தொடர்வோம்.

Ankhiyan hari dashan ki pyasi
Listen to ankhiyan hari darshan ki
Hari darshan ki pyasi akhiyaan hari darshan ki pyasi
dekhyo chahe kamal nayan ko nis din rahat udaasi
akhiyaan hari darshan ki pyasi
kesar tilak motin ki maala vrindavana ke vaasi
neh lagaai tyag gayen trin sam daal gayen gal phansi
akhiyan hari darshan ki ……
kahoo ke mana ki ko jaanat logan ke man haasi
surdas prabhu tumhare daras bin leho karvat kashi ankhiyaan
hari darshan ki pyasi hari darshan ki……..

கோகுலம் இருந்துவிட்டது. ஒளி போய்விட்டால் இருட்டு தானே. கோபியர்கள் நடைபிணமாகி விட்டார்கள். எவர் முகத்திலும் ஒரு சோகம் தென்படுகிறது. சிரிப்பே மறந்து போய்விட்டதே. கண்கள் தேடியவாறு இருக்கிறது. அத்தனைபேரின் செல்லக் குழந்தையா எஜமானனா? எப்படிச்சொன்னாலும் பொருத்தம் தானே. அந்த தாமரைக் கண்கள் எங்கே? நீல நிற நெற்றியிலே சிவந்து காணப்படும் திலகம் எங்கே? கரு நீல கழுத்திலே நிறைந்து காணப்படும் அந்த வெண் முத்து மாலைகள் எங்கே? பிருந்தாவன நாயகன் எங்கே? நம்மை எல்லாம் காய்ந்த சருகாகி விட்டு நம் உயிரை எல்லாம் ஒன்று சேர்த்து மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டு சென்றுவிட்டானோ அந்த மாய கிருஷ்ணன்? ஒவ்வொருவள் மனத்திலும் ஆழ்ந்த சோகம் இருந்தாலும் வெளியே தெரியவில்லை. ஏதோ அன்றாட வேலைகள், பேச்சு என்று இருந்தாலும் ஏக்கம் வாட்டுகிறதே. கிருஷ்ணன் இனி பிருந்தாவனம் திரும்பி வருவானா? எப்போது? இந்த கேள்விக்கு யாருக்கு பதில் தெரியும்?

கலகலவென்று இருக்கும் காசியே வெறிச்சோடி விட்டதே என்கிறாள் ஒரு கோபி. அவள் அனுபவம் அப்படி. நாம் என்ன சொல்லமுடியும். காசியே அப்படியானால் பிருந்தாவனத்தில் நம் கதி?? சூர்தாஸ் இந்த கேள்வியை எழுப்புகிறார். யாராவது பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்!


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...