Wednesday, June 9, 2021

SUBRAMANIYA BUJANGAM



 


ஆதி சங்கரர்  -    நங்கநல்லூர்  J K  SIVAN -சுப்ரமண்ய  புஜங்கம்.

7.   அஞ்சுமுகம்  தோன்றில் ஆறுமுகம் தோன்றும் 

இந்த பதிவோடு  ஆதி சங்கரர் அருளிச்செய்த  ஸ்ரீ சுப்ரமண்ய  புஜங்கம்  33 ஸ்லோகங்கள் நிறைவு பெறுகிறது.  அவசியம் எல்லோரும் ஒரு முறையாவது இந்த ஸ்லோகங்களை படிக்க வசதியாக  சமஸ்க்ரிதம், தமிழ் ஆங்கிலம் மும்மொழிகளும்  தரப்பட்டுள்ளது.  மனப்பாடம் செய்தவர்களுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள் .

29. मृगाः पक्षिणो दंशका ये च दुष्टाः
तथा व्याधयो बाधका ये मदङ्गे ।
भवच्छक्तितीक्ष्णाग्रभिन्नाः सुदूरे
विनश्यन्तु ते चूर्णितक्रौञ्चशौल ॥२९॥
 
Mrgaah Pakssinno Damshakaa Ye Ca Dussttaah
Tathaa Vyaadhayo Baadhakaa Ye Mad-Angge |
Bhavac-Chakti-Tiikssnna-Agra-Bhinnaah Suduure
Vinashyantu Te Cuurnnita-Krauncha shailaa ||29||

ம்ருகா பக்ஷணோ தம்சகாயே சதுஷ்டா
ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
பவச்சக்தி தீக்ஷfணாக்ர பின்னா ஸதூரே
வநச்யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச சைல (29)

''ஹே சுப்ரமணியா , எவராலும் அசைக்கமுடியாத கிரவுஞ்ச மலையைக்  கூறாக பிளந்த வனே.  கூர்வேல் ஒன்றே ஆயுதம், அது ஒன்றே பிணி தீர்க்கும் உபாயம் அதைப் பிரயோகித்து, என் உடல் உபாதைகளை தீர்ப்பாய், மனிதன் பறவை, விலங்கு,புழு பூச்சி, எல்லா உயிர்களும் பிணி யின்றி, நோயின்றி, வாழ உன் வேலாயுதத்தை செலுத்தி பிணியகற்றி, வலியகற்றி , துன்பமகற்றி காத்திடுவாய் குமரா. கொரோனா காலத்தில் இந்த  வேண்டுதல் மிக மிக அவசியம் முருகையா.

30. जनित्री पिता च स्वपुत्रापराधं
सहेते न किं देवसेनाधिनाथ ।
अहं चातिबालो भवान् लोकतातः
क्षमस्वापराधं समस्तं महेश ॥३०॥

Janitrii Pitaa Ca Sva-Putra-Aparaadham
Sahete Na Kim Deva-Sena-Adhinaatha |
Aham Ca-Ati-Baalo Bhavaan Loka-Taatah
Kssama-Sva-Aparaadham Samastam Mahe[a-Ii]sha ||30||

ஜநித் பிதாச ஸ்வபுத்ரா பராதம்
ஸஹுதே ந கிம் தேவசேனாதி நாத
அஹும் சாதிபாலோ பவான் லோக தாத
க்ஷமஸ்வாபாரதம் ஸமஸ்தம் மஹுச (30)

''சேய் செய்த பிழைகளை தாய் பொறுப்பதில்லையா? . தேவசேனாபதியே, நான் ஒரு சிறுவன், சக்தி யில்லாதவன். உன் குழந்தை, நீ தகப்பன் சுவாமி. என் தவறுகளை பொருட்படுத்தாமல் மன்னித்தருள்வாய். பகைவனுக்கும் அருள் செய்யும் பகவானே. உன் திருவடிகளுக்கு சரணமய்யா'' 

31. नमः केकिने शक्तये चापि तुभ्यं
नमश्छाग तुभ्यं नमः कुक्कुटाय ।
नमः सिन्धवे सिन्धुदेशाय तुभ्यं
पुनः स्कन्दमूर्ते नमस्ते नमोऽस्तु ॥३१॥

Namah Kekine Shaktaye Ca-Api Tubhyam
Namash-Chaaga Tubhyam Namah Kukkuttaaya |
Namah Sindhave Sindhu-Deshaaya Tubhyam
Punah Skanda-Muurte Namaste Namostu ||31||

நம கேகினே சத்தயே சாபி துப்யம்
நமச்சாக துப்யம் நம குக்குடாய
நம ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்
புன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து (31)

 ''வேதத்தின் உட்பொருளே, மாமயில் மீதேறி வந்து துயர் துடைக்கும் முருகா, அல்லல் தீர்க்கும் ஆறுமுகம், அஞ்சேல் என வேல் கொண்டு காக்கும் ஆறுமுகா , உன்னை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். சக்தி வேலாயுதா, நின்னையே சரணடைந்தேன். சேவலும் மயிலும் கொண்டு ஆணவமலம், கர்மமலம், போக்கும் ஸ்கந்தா, செந்தில்நாதா, மீண்டும் மீண்டும் உனக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம்.

32. जयानन्दभूमञ्जयापारधामन्
जयामोघकीर्ते जयानन्दमूर्ते ।
जयानन्दसिन्धो जयाशेषबन्धो
जय त्वं सदा मुक्तिदानेशसूनो ॥३२॥

Jaya-[A]ananda-Bhuuman.-Jaya-Apaara-Dhaaman
Jaya-Amogha-Kiirte Jaya-[A]ananda-Muurte |
Jaya-[A]ananda-Sindho Jaya-Ashessa-Bandho
Jaya Tvam Sadaa Mukti-Daane[a-Ii]sha-Suuno ||32||

ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்
ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே
ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ
ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸJனோ (32)

ஆனந்தமளிப்பவனே, ஞானஒளியே, சர்வமும் நீ என்று சரணடைந்தேன் சரவணா, கருணைக் கடலான கந்தா, அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா, வெற்றி வேல் வீரவேல் என்று உன்னை பாடி வரும் பக்தர் திருக்குழாம் வேண்டுகிறோம். தோன்றாத் துணைவா. அரோஹரா, அரோஹரா.

33. भुजङ्गाख्यवृत्तेन क्ऌप्तं स्तवं यः
पठेद्भक्तियुक्तो गुहं संप्रणम्य ।
स पुत्रान्कलत्रं धनं दीर्घमायुः
लभेत्स्कन्दसायुज्यमन्ते नरः सः ॥३३॥

Bhujangga-[A]akhya-Vrttena Klptam Stavam Yah
Patthed-Bhakti-Yukto Guham Samprannamya |
Sa Putraan-Kalatram Dhanam Diirgham-Aayuh
Labhet-Skanda-Aaayujyam-Ante Narah Sah ||33||

புஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய
படேத் பக்தியுக்தோ குஹும் ஸம்ப்ரணம்ய
ஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர்
லபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ (33)

ஆதி சங்கரரின் அனுபவத்தை சொல்கிறேன்.'
' பக்தர்களே, எவனொருவன் இந்த 33 சுப்ரமணிய புஜங்க ஸ்தோத்திரங்களை மனம் முழுமை யோடு ஈடுபட்டு தினமும் வேண்டுகிறானோ ,அவனுக்கு சர்வ மங்கலானி பவந்து. நீண்ட ஆயுளும், வற்றாத செல்வமும், வளமும், சாயுஜ்யமும் கிடைக்கும்.

வால்மீகி, ராமாயணத்தில், பாலகாண்டத்தில் , விஸ்வாமித்ரர் ராமனுக்கு உபதேசம் செய்யும் போது சொல்லும் ஒரு வாசகம்:

‘ராமா, உனக்கு குமார ஸம்பவக் கதையைச் சொன்னேன். இது தனத்தையும் கொடுக்கும். புண்ணியத்தையும் கொடுக்கும், அப்பா, காகுத்ஸா, இந்த லோகத்தில் ஒரு மனுஷ்யன் கார்த்தி கேயனிடம் பக்தி வைத்துவிட்டால் போதும். தீர்க்காயுள், புத்திர பௌத்திர சௌபாக்கியம் எல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடும். முடிவிலோ ஸ்கந்த லோகத்துக்கே போய் அவருடனேயே நித்தியவாசம் செய்யலாம்’ என்கிறார். (பாலகாண்டம் – 37வது ஸர்க்கம்: சுலோ: 31-32).
இந்த   புஜங்க ஸ்தோத்ர ஸ்லோகங்களை அர்த்தத்தோடு  இதை புத்தகமாக்கி இலவசமாக  ''''வேண்டுவோருக்கு மட்டும் ''''  (இலவசமா  எனக்கு கொடு என்று கேட்டு வாங்கி கடையில் எடைக்கு போடுவதால்  மீண்டும்  புத்தகம் அச்சிட ஆயிரக்கணக்கில் செலவாகிறது என்பது என் அனுபவம்)  நன்கொடை கொடுத்தால் அது அச்சிடும்  பணிக்கு  கூலியாக செல்கிறது. என் எண்ணத்தை சமீபத்தில் வெளியிட்டதற்கு கோவையிலிருந்து ஸ்ரீ  பரமேஸ்வர் எனும் அன்பார் உடனே RS  5000  எங்கள் டிரஸ்ட் கணக்கிற்கு அனுப்பிவிட்டார். பாதி கிணறு தாண்டியாகிவிட்டது. விரைவில் புத்தகம் வெளிவரும். வேண்டியவர்கள் எத்தனை  பிரதிகள் வேண்டுமோ பெற்று  விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் அளிக்கலாம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...