Sunday, June 13, 2021

NARAYANEEYAM

 ஸ்ரீ நாராயணீயம் நங்கநல்லூர் J K SIVAN

மேல்பத்தூர் நாராயண பட்டத்ரி

தசகம் 1.


நாராயணீயம் ஒரு தெய்வீக நூல். கிருஷ்ணனோடு நேரில் பேசுவது மாதிரியே எழுதி இருக்கி றார் நாராயண பட்டத்ரி. ''மாதிரி'' என்று சொல்வது தப்பு தப்பு.. நேரிலேயே கண்டு பேசியவர். நாராயணீய ஸ்லோகங்கள், கிருஷ்ணன் அருள் பெற்றவை, அதனால் தான் அவை கைமேல் பலன் தரும் மந்திரங்கள்.

ஆங்கரை ஸ்வாமிகள் (கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்) நாராயணீயத்தை முழுவதும் விடாமல் சொல்லி பாராயணம் பண்ணுபவர். மகா பெரியவா எதிரில் 19 வருஷங்கள் ஸ்ரீ மத் பாகவத, சப்தாஹ மூல பாராயணம் உபன்யாசம் பண்ணி ஆசி பெற்றவர். அதுவும் கோகுலாஷ்டமி சமயத்தில். ஒரு அதிசயம் நடந்ததை சொல்கிறேன். 1956ல் ஸ்வாமிகளுக்கு தீராத தாங்க முடியாத வயிற்றுவலி. டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அன்று இரவு ஸ்வாமிகள் ''அஸ்மின் பராத்மன்'' என்று ஆரம்பிக்கும் 8 வது தசக கடைசி ஸ்லோகத்தை விடாமல் சொல்லிக்கொண்டிருந்தார்.

மறுநாள் காலை டாக்டர்கள் ஆஸ்பத்திரியில் அவரை ஆபரேஷனுக்கு தயார் பண்ண தியேட்டருக்குள் அழைத்து போகிறார்கள். பரிசோதித்த பெரிய டாக்டர் மற்ற டாக்டர்களை கேட்கிறார்:

''என்ன மருந்து கொடுத்தீர்கள்? என்ன ஆயிற்று இவருக்கு? ஆபரேஷன் பண்ண வேண்டிய அவசியமே இல்லையே..எதற்கு ஆபரேஷனுக்கு தயார் செயதீர்கள்?''

கிருஷ்ணன் அல்லவோ மஹா பெரிய டாக்டர் என்று அவருக்கு எப்படி தெரியும்?

ஆங்கரை ஸ்வாமிகள் மட்டுமல்ல. அற்பமான நமக்கும் அந்த குருவாயூரப்பன் அருள் புரிய காத்திருக்கிறான். நமக்கு அவன் மீது நம்பிக்கை வேண்டும். அவனை மனதில் நிறுத்தி நாராயணீயம் சொல்லி பட்டத்ரி நூறு தசகங்களையும் அவன் சந்நிதிக்கு எதிரே உட்கார்ந்து பாராயணம் செய்தார். வாதபுரீஸ்வரன் அவர் வேதனையை உடனே தீர்த்தான். குருவாயூரப்பன் சந்நிதியின் உள் செல்லும் வழியில் குருவாயூரப்பனுக்கு வலது புறத்தில் (உள்ளே செல்லும் பக்தர்களுக்கு இடது புறத்தில்) மேல்புத்தூர் நாராயண பட்டதிரி அமர்ந்து ஸ்ரீமந்நாராயணீயம் ஸ்லோகங்களை எழுதிய இடம் இது என்று பித்தளை தகட்டில் சுவற்றில் குறிப்பிட்டு அடை யாளம் காட்டி இருக்கிறார்கள். குருவாயூர் செல்ல முடியாதவர்கள் இருக்கும் இடத்தையே குருவாயூராக பாவித்துக் கொள்வோம். கிருஷ்ணன் எங்கும் இருப்பவன், நாம் எங்கே சொன் னாலும் நாராயணீயம் அவன் காதுக்கு கேட்கும். இனி முதல் தசகம் சொல்வோம்:

सान्द्रानन्दावबोधात्मकमनुपमितं कालदेशावधिभ्यां
निर्मुक्तं नित्यमुक्तं निगमशतसहस्रेण निर्भास्यमानम् ।
अस्पष्टं दृष्टमात्रे पुनरुरुपुरुषार्थात्मकं ब्रह्म तत्वं
तत्तावद्भाति साक्षाद् गुरुपवनपुरे हन्त भाग्यं जनानाम् ॥ १ ॥

ஸாந்த்₃ராநந்தா₃வபோ₃தா₄த்மகமநுபமிதம் காலதே₃ஶாவதி₄ப்₄யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிக₃மஶதஸஹஸ்ரேண நிர்பா₄ஸ்யமாநம் |
அஸ்பஷ்டம் த்₃ருஷ்டமாத்ரே புநருருபுருஷார்தா₂த்மகம் ப்₃ரஹ்ம தத்வம்
தத்தாவத்₃பா₄தி ஸாக்ஷாத்₃ கு₃ருபவநபுரே ஹந்த பா₄க்₃யம் ஜநாநாம் ||1||


நாராயணீயம் என்பது ஸ்ரீ மத் பாகவதத்தின் சுருக்கம். நாராயணனின் அவதாரங்களை, மஹிமையை சொல்லி ஸ்ரீ கிருஷ்ணனைப் போற்றுவது. பகவானை அடையாளம் காட்டுவது. சாஸ்வத நிரந்தர சந்தோஷத்தை, ஞானத்தை, அளிப்பவனின் சரித்திரம். நிகரற்றது. கால தேசம் எல்லை கடந்தது. எந்த வித பந்தமுடனும் தொடர்பற்றது. நிதர்சனமாக பக்தர்களுக்கு கைமேல் பலனளிப்பது. எண்ணற்ற பிரார்த்தனை ஸ்லோகங்கள் இருந்தாலும் புரியாதவனைப் போற்றி புரியவைக்கும் நூல். திரும்ப திரும்ப தேடவைத்தும், அலுக்காத ஒரு மந்திர நூல். அப்படிப் போற்றப்படும் குருவாயூரப்பன் மெய்ப்பொருளாக, சத்ய ஸ்வரூபமாக நமக்கு குருவாயூரில் கிடைத்தது ஹிந்து பக்தர்களாகிய நாம் செய்த பாக்யம்.


एवंदुर्लभ्यवस्तुन्यपि सुलभतया हस्तलब्धे यदन्यत्
तन्वा वाचा धिया वा भजति बत जन: क्षुद्रतैव स्फुटेयम् ।
एते तावद्वयं तु स्थिरतरमनसा विश्वपीड़ापहत्यै
निश्शेषात्मानमेनं गुरुपवनपुराधीशमेवाश्रयाम: ॥ २ ॥

ஏவம் து₃ர்லப்₄யவஸ்துந்யபி ஸுலப₄தயா ஹஸ்தலப்₃தே₄ யத₃ந்யத்
தந்வா வாசா தி₄யா வா ப₄ஜதி ப₃த ஜந: க்ஷுத்₃ரதைவ ஸ்பு₂டேயம் |
ஏதே தாவத்₃வயம் து ஸ்தி₂ரதரமநஸா விஶ்வபீடா₃பஹத்யை
நிஶ்ஶேஷாத்மாநமேநம் கு₃ருபவநபுராதீ₄ஶமேவாஶ்ரயாம: ||2||
2.நம் கையில் கண்ணுக்கெதிரில் இருக்கும் மிக அற்புதமான சாஸ்வதமான ஒரு வஸ்துவின் மதிப்பு, மஹிமை, பெருமை நமக்கு தெரிவதில்லை. எங்கேயோ உள்ள ஒரு அநித்யமான, பயனற்ற பொருள் மீது கவனம் செல்லும், அதை அடைய பிரயாசைப் படுவோம். போட்டி போடுவோம், சண்டையிடுவோம், முடிவில் ஏமாற்றம். இவ்வாறு, கிடைப்பதற்கு அரிதான ஒரு பொருள், எளிதில் கிடைத்திருந்தும், மக்கள் அறியாமையால் உடலாலும், மனத்தாலும், வாக்காலும் வேறொன்றை வழிபடுகிறார்கள். சகல உயிர்களிடத்தும் வியாபித்திருப்பவரான குருவாயூரப்பனையே, உலகோரின் கஷ்டம் நீங்க, உறுதி பூண்ட உள்ளத்தோடு நம்பிய தரிசிப்போம். அவனை உணர மனம் சுத்தமடைய வேண்டும். உடல் அற்ப சுகந்தத்தை நாடக் கூடாது. உறுதியான நம்பிக்கை சேர்ந்த சரணாகதியை குருவாயூரப்பனின் திருவடிகளில் சமர்ப்பிப்பவன் நிச்சயம் உலக வாதனைகளிலிருந்து மீண்டு நிம்மதியுடன் வாழ்வான்.

भूतैर्भूतेन्द्रियैस्ते वपुरिति बहुश: श्रूयते व्यासवाक्यम्।
तत् स्वच्छ्त्वाद्यदाच्छादितपरसुखचिद्गर्भनिर्भासरूपं
तस्मिन् धन्या रमन्ते श्रुतिमतिमधुरे सुग्रहे विग्रहे ते ॥ ३ ॥

ஸத்த்வம் யத்தத் பராப்₄யாமபரிகலநதோ நிர்மலம் தேந தாவத்
பூ₄தைர்பூ₄தேந்த்₃ரியைஸ்தே வபுரிதி ப₃ஹுஶ: ஶ்ரூயதே வ்யாஸவாக்யம்|
தத் ஸ்வச்ச்₂த்வாத்₃யதா₃ச்சா₂தி₃தபரஸுக₂சித்₃க₃ர்ப₄நிர்பா₄ஸரூபம்
தஸ்மிந் த₄ந்யா ரமந்தே ஶ்ருதிமதிமது₄ரே ஸுக்₃ரஹே விக்₃ரஹே தே ||3||

நாராயணா, ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நன்கு அறிந்தவர் ஸ்ரீ வேத வ்யாஸர் , எத்தனையோ முறை ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்பாரே உன் திருவுருவத்தின் அழகைப் பற்றி. ஆஹா உன்னதமான பரிசுத்தமான ஸத்வத்துக்கு ஒரு திருவுருவம் நீ என்று எப்போதும் சொல்வாரே. குருவாயூரப்பா, நீ ரஜோ, தமோகுணங்கள் அணுகாத ஸத்வம். பஞ்ச பூத, பஞ்சேந்திரியங்கள் கொண்ட சகல ஜீவன்களின் ஒட்டு மொத்தம். சத்தியத்தின் ஒளி வீசுபவன். பரம சந்தோஷம் தருபவன். உன் பக்தர்கள் உன்னை தியானம் பண்ண எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். எவ்வளவு திவ்ய சௌந்தர்ய ரூபமாக, கர்ணாம்ருதமாக நிற்கிறாய் அப்பா. இதைவிட வேறு புண்யம் பண்ணி இருக்க முடியுமா?

निष्कम्पे नित्यपूर्णे निरवधिपरमानन्दपीयूषरूपे
निर्लीनानेकमुक्तावलिसुभगतमे निर्मलब्रह्मसिन्धौ ।
कल्लोलोल्लासतुल्यं खलु विमलतरं सत्त्वमाहुस्तदात्मा
कस्मान्नो निष्कलस्त्वं सकल इति वचस्त्वत्कलास्वेव भूमन् ॥ ४ ॥

நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி₄பரமாநந்த₃பீயூஷரூபே
நிர்லீநாநேகமுக்தாவலிஸுப₄க₃தமே நிர்மலப்₃ரஹ்மஸிந்தௌ₄ |
கல்லோலோல்லாஸதுல்யம் க₂லு விமலதரம் ஸத்த்வமாஹுஸ்ததா₃த்மா
கஸ்மாந்நோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்த்வத்கலாஸ்வேவ பூ₄மந் ||4||

'' ப்ரம்மம் என்கிற ஓயாது அலைவீசும் சமுத்திரம் மாதிரி சத்வ குண சாகரம் நீ என்று மஹான்கள் சொல்வார்கள். ஆனந்தம் கருணை எல்லையற்று பொங்கி நிரம்பி வழிவது . முக்தர்களின் சங்கமத்தால் பேரின்பம் அளிப்பது. எங்கும் நிறைந்த பரப்பிரம்மம், குருவாயூரப்பா உன் கிருஷ்ண பூர்ண அவதாரம் ஒன்றே போதுமே, அனைத்து அவதாரங்களின் சாறு போன்று இன்பம் அளிக்க,. பக்தர்கள் மனம் இனிக்க.

निर्व्यापारोऽपि निष्कारणमज भजसे यत्क्रियामीक्षणाख्यां
तेनैवोदेति लीना प्रकृतिरसतिकल्पाऽपि कल्पादिकाले।
तस्या: संशुद्धमंशं कमपि तमतिरोधायकं सत्त्वरूपं
स त्वं धृत्वा दधासि स्वमहिमविभवाकुण्ठ वैकुण्ठ रूपं॥५॥

நிர்வ்யாபாரோ(அ)பி நிஷ்காரணமஜ ப₄ஜஸே யத்க்ரியாமீக்ஷணாக்₂யாம்
தேநைவோதே₃தி லீநா ப்ரக்ருதிரஸதிகல்பா(அ)பி கல்பாதி₃காலே|
தஸ்யா: ஸம்ஶுத்₃த₄மம்ஶம் கமபி தமதிரோதா₄யகம் ஸத்த்வரூபம்
ஸ த்வம் த்₄ருத்வா த₃தா₄ஸி ஸ்வமஹிமவிப₄வாகுண்ட₂ வைகுண்ட₂ ரூபம் ||5||

ஹே குருவாயூரப்பா, பிறப்பு இறப்பு அற்ற ஸாஸ்வதனே, எனக்கு என்று எந்த ஒரு காரியமும் இல்லை என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு கணமுமாக உனக்கென்று ஒரு காரணமும் காரியமும் மில்லாமலேயே பிரபஞ்ச அசைவுகளை மாயையால், பார்வையாலேயே செயல்படுத்துபவனே. ஆதி காரணன் நீ. உன்னிலிருந்தே சகல புவனமும் செயல்பட்டாலும் அவை உனதாக தோன்றாத மாய ஸ்வரூபனே. சத்தியத்தின் தோற்றமே. உன்னை வணங்குகிறேன்.

तत्ते प्रत्यग्रधाराधरललितकलायावलीकेलिकारं
लावण्यस्यैकसारं सुकृतिजनदृशां पूर्णपुण्यावतारम्।
लक्ष्मीनिश्शङ्कलीलानिलयनममृतस्यन्दसन्दोहमन्त:
सिञ्चत् सञ्चिन्तकानां वपुरनुकलये मारुतागारनाथ ॥६॥

தத்தே ப்ரத்யக்₃ரதா₄ராத₄ ரலலிதகலாயாவலீ கேலிகாரம்
லாவண்யஸ்யைகஸாரம் ஸுக்ருதிஜநத்₃ருஶாம் பூர்ணபுண்யாவதாரம்|
லக்ஷ்மீநிஶ்ஶங்கலீலாநிலயநமம்ருதஸ்யந்த₃ஸந்தோ₃ஹமந்த:
ஸிஞ்சத் ஸஞ்சிந்தகாநாம் வபுரநுகலயே மாருதாகா₃ரநாத₂ ||6||

குருவாயூரப்பா, எனக்கு உன்னை, உன் திவ்ய சுந்தர ரூபத்தை தியானம் செய்வதைத்தவிர வேறெதிலும் எனோ நாட்டமில்லை. உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அழகிய, சூல்கொண்ட கருநிற மழை மேகங்களைத் தான் ஞாபகப்படுத்தும். எனக்கென்னவோ சூரியகாந்தி எப்போதும் சூரியனையே நோக்கி இருப்பதில் தான் அதன் அழகே கண்ணைப் பறிக்கிறது. என் மனதும் அவ்வாறே, உன் நினைவு ஒன்றிலேயே பரிபூர்ண ஆனந்தம் அடைகிறது. நற் செயல்களால் விளையும் பலனே இப்படி ஒரு பிறவி எடுக்க உதவுகிறது. அதுவே பெரும் புண்யம். குருவாயூரப்பா நினது கரிய காருண்ய தேகம் லட்சுமி விளையாடுமிடம். உன் திவ்ய தரிசனம் பக்தர்களின் மனதில் அம்ருத மழை. 1.6

कष्टा ते सृष्टिचेष्टा बहुतरभवखेदावहा जीवभाजा-
मित्येवं पूर्वमालोचितमजित मया नैवमद्याभिजाने।
नोचेज्जीवा: कथं वा मधुरतरमिदं त्वद्वपुश्चिद्रसार्द्रं
नेत्रै: श्रोत्रैश्च पीत्वा परमरससुधाम्भोधिपूरे रमेरन्॥७॥

கஷ்டா தே ஸ்ருஷ்டிசேஷ்டா ப₃ஹுதரப₄வகே₂தா₃வஹா ஜீவபா₄ஜா-
மித்யேவம் பூர்வமாலோசிதமஜித மயா நைவமத்₃யாபி₄ஜாநே|
நோசேஜ்ஜீவா: கத₂ம் வா மது₄ரதரமித₃ம் த்வத்₃வபுஶ்சித்₃ரஸார்த்₃ரம்
நேத்ரை: ஶ்ரோத்ரைஶ்ச பீத்வா பரமரஸஸுதா₄ம்போ₄தி₄பூரே ரமேரந்||7||

''குருவாயூரப்பா, உன் மேல் ஒரு காலத்தில் எனக்கு ஒரு வருத்தம். நீ கல் நெஞ்சன் என்று. எதற்காக துன்பத்தை தரும் பிறவிகளை எல்லா ஜீவராசிகளும் எடுத்து அனுபவிக்க வைக்கிறாய் என்று. பாவம் அதனால எவ்வளவு துன்பங்களை அன்றாடம் அவை சந்திக்க வேண்டி இருக்கிறது? இப்போது எனக்கு அப்படி ஒரு எண்ணம் கிடையாது. நிறைய பிறவி எடுக்க எடுக்க தானே உன்னை உன் அழகை பரமானந் தத்தோடு கண்டு களிக்க உன் பெருமைகளை மகிமைகளை காதார கேட்டு ஆனந்திக்க இயலும்? ஞானமும் வளரும். 1.7

नम्राणां सन्निधत्ते सततमपि पुरस्तैरनभ्यर्थितान -
प्यर्थान् कामानजस्रं वितरति परमानन्दसान्द्रां गतिं च।
इत्थं निश्शेषलभ्यो निरवधिकफल: पारिजातो हरे त्वं
क्षुद्रं तं शक्रवाटीद्रुममभिलषति व्यर्थमर्थिव्रजोऽयम्॥८॥

நம்ராணாம் ஸந்நித₄த்தே ஸததமபி புரஸ்தைரநப்₄யர்தி₂தாந -
ப்யர்தா₂ந் காமாநஜஸ்ரம் விதரதி பரமாநந்த₃ஸாந்த்₃ராம் க₃திம் ச|
இத்த₂ம் நிஶ்ஶேஷலப்₄யோ நிரவதி₄கப₂ல: பாரிஜாதோ ஹரே த்வம்
க்ஷுத்₃ரம் தம் ஶக்ரவாடீத்₃ருமமபி₄லஷதி வ்யர்த₂மர்தி₂வ்ரஜோ(அ)யம்||8||

குருவாயூரப்பா, உன்னிடம் எனக்கு பிடித்தது என்ன தெரியுமா, உன் முன் நிற்போர்க்கு அவர்கள் வேண்டியது , அதோடு அவர்களுக்கு எது வேண்டும் என்று தெரியாததால் உன்னிடம் வேண்டாதது எல்லாவற்றையுமே வாரி வழங்குபவன் நீ. கேட்டதெல்லாம் தரும் கல்பவிருக்ஷம் நீ. சுலபமாக அடைய முடியும். மோக்ஷத்தையும் கொடுக்கும். அப்படியிருக்க, இதன் மஹிமையை அறியாமல் ஏனோ சில அஞ்ஞானிகள், அழியக்கூடிய பொருட்களைக் கொடுக்கும் இந்திர லோகத்தின் இந்திரன் தோட்டத்தில் இருக்கும் பாரிஜாத மரத்தை தேடுகிறார்கள்?1.8

कारुण्यात्काममन्यं ददति खलु परे स्वात्मदस्त्वं विशेषा-
दैश्वर्यादीशतेऽन्ये जगति परजने स्वात्मनोऽपीश्वरस्त्वम्।
त्वय्युच्चैरारमन्ति प्रतिपदमधुरे चेतना: स्फीतभाग्या-
स्त्वं चात्माराम एवेत्यतुलगुणगणाधार शौरे नमस्ते॥९॥

காருண்யாத்காமமந்யம் த₃த₃தி க₂லு பரே ஸ்வாத்மத₃ஸ்த்வம் விஶேஷா-
தை₃ஶ்வர்யாதீ₃ஶதே(அ)ந்யே ஜக₃தி பரஜநே ஸ்வாத்மநோ(அ)பீஶ்வரஸ்த்வம்|
த்வய்யுச்சைராரமந்தி ப்ரதிபத₃மது₄ரே சேதநா: ஸ்பீ₂தபா₄க்₃யா-
ஸ்த்வம் சாத்மாராம ஏவேத்ய துலகு₃ணக₃ணாதா₄ர ஶௌரே நமஸ்தே||9||

உண்ணி கிருஷ்ணா, குருவாயூரப்பா, எனக்கு தெரிந்து மற்ற தெய்வங்கள் எல்லாமே பக்தர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்பவர்கள். நீ ரொம்ப வேறே மாதிரி அப்பா, நீ அவர்களுக்கு அவர்கள் அறியாமலேயே மோக்ஷத்தையே தருபவன். மற்ற தெய்வங்கள் உலகத்தை அவர்கள் பெற்ற சக்தியால் ஆளுமை செய்பவர்கள். வாசுதேவா நீ எப்படியப்பா ஒவ்வொரு ஆத்மாவிலும் புகுந்து அவர்களை ஆண்டு, அகிலத்தையும் ஆண்டு, உன்னையும் ஆண்டு கொள்கிறாய். ஜீவன்கள் அதிர்ஷ்டம் செய்தவை என்பதால் உன்னால் பரமானந்தத்தை பெறுகின்றன. அதில் திளைக்கின்றன. நீ தானே பரமாத்மன். ஆனந்தஸ்வரூபன், உன்னை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறேன்.1.9

ऐश्वर्यं शङ्करादीश्वरविनियमनं विश्वतेजोहराणां
तेजस्संहारि वीर्यं विमलमपि यशो निस्पृहैश्चोपगीतम्।
अङ्गासङ्गा सदा श्रीरखिलविदसि न क्वापि ते सङ्गवार्ता
तद्वातागारवासिन् मुरहर भगवच्छब्दमुख्याश्रयोऽसि॥१०॥

ஐஶ்வர்யம் ஶங்கராதீ₃ஶ்வரவிநியமநம் விஶ்வதேஜோஹராணாம்
தேஜஸ்ஸம்ஹாரி வீர்யம் விமலமபி யஶோ நிஸ்ப்ருஹைஶ்சோபகீ₃தம்|
அங்கா₃ஸங்கா₃ ஸதா₃ ஶ்ரீரகி₂லவித₃ஸி ந க்வாபி தே ஸங்க₃வார்தா
தத்₃வாதாகா₃ரவாஸிந் முரஹர ப₄க₃வச்ச₂ப்₃த₃முக்₂யாஶ்ரயோ(அ)ஸி||10||

''குருவாயூர் கிருஷ்ணா, ப்ரம்மா சிவன் முதலான சகல தெய்வங்களும் தொழும் தேவாதிதேவா, சர்வ சக்தியும் கொண்ட சர்வேஸ்வரா, முற்றும் துறந்த முனிவர்கள் தேடும் முழு முதல் தெய்வமே, ஸ்ரீ உன் மார்பில் வாசம் செய்யும் ஸ்ரீ நிவாஸா, எங்கும் எதிலும் நீ யாக இருந்தும் எந்த பற்றுதலும் இல்லாதவனே, பகவான் என்ற சொல்லுக்கு பாத்திரமானவனே, முரனை வதம் செய்த முராரி. கிருஷ்ணா முகுந்தா முராரே....1.10


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...