Saturday, June 26, 2021

geethanjali

 கீதாஞ்சலி  -   நங்கநல்லூர்   J K  SIVAN  -

தாகூர்.

74   இரவின் துணையில்  நீ 

74.   The day is no more, the shadow is upon the earth.
It is time that I go to the stream to fill my pitcher.
The evening air is eager with the sad music of the water.
 Ah, it calls me out into the dusk.
 In the lonely lane there is no passer-by, the wind is up, the ripples are rampant in the river.
I know not if I shall come back home.
I know not whom I shall chance to meet.
There at the fording in the little boat the unknown man plays upon his lute.

கிருஷ்ணா, என் எழுத்துக்களில் ஒரு குழப்பம் உனக்கு  தெரிகிறதா?  ஆம்  குழப்பம் எழுத்தில் மட்டுமா?, என் எண்ணத்திலும், அது நிறைந்திருக்கும் மனத்திலும் தான்.  அங்கே தானே அதன் ஆரம்பம்.   ஏன்?  உன்னை எவ்வளவு தேடியும் காண முடியவில்லையே.  

இதோ பகல் ஓடிவிட்டது    எங்கும் கரிய  நிழல் போல் இரவு மூடுகிறது உலகத்தை. 
மங்கிய ஒளியில் குடத்தோடு  ஆற்றுக்குச் சென்று நீர் மொண்டு வரவேண்டும். 
 ஓடிக்கொண்டே  இருக்கும் நீருக்கும் ஏன் ஓடுகிறோம், எதற்கு? என்று புரிபடாத சோகமா?  
அதன் சோகம்  காற்றில்  அதிர்வுகளோடு  மனதைப் பிழியும்  கீதமா?   
அந்த நிலையில் தான் என்னை  வா என்று  இருளுக்கு அழைக்கிறதா?    
என்ன சக்தி அந்த சூரியனுக்கு?  அவன் மறைந்ததும் எங்கும் தனிமை. எவரும்  வெளியே காண்பதில்லை.  இருளில்  சந்து எதிரே  வெறிச்சோடி இருக்கிறது.  எவரையுமே காணோமே. 
 சிறிய சப்தங்களுடன்  ஆற்றின் மேற்பரப்பில் நீர் கொப்புளங்கள். வளையம் வளையமாக  நீரோட்ட ம்.   ஆற்றங்கரைக்கு சென்றவன் எப்போது வீடு திரும்புவேன், எனக்கே தெரியவில்லையடா கிருஷ்ணா.  எங்கே யாரை பார்க்கப்போகிறேன்?
அட ,  அது என்ன நீயா?  
 இருளில்  ஆற்றங்கரையில் படகுத் துறையில்  ஒரு படகு இருக்கிறதே, அதில் யார்  சௌகர்யமாக அமர்ந்து கவலையின்றி, குழப்பமின்றி  ஆனந்தமாக புல்லாங்குழல் வாசிப்பவன். 
 இரவின் அமைதியில் ஆனந்த ராகம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...