Wednesday, June 9, 2021

GEETHANJALI

 

கீதாஞ்சலி  -  நங்கநல்லூர்  J K SIVAN  --
தாகூர்  


67.  எல்லாம்  இன்ப மயம் .
 

67.  Thou art the sky and thou art the nest as well.
O thou beautiful, there in the nest is thy love that encloses the soul with colours and sounds and odours.
There comes the morning with the golden basket in her right hand bearing the wreath of beauty, silently to crown the earth.
And there comes the evening over the lonely meadows deserted by herds, through trackless paths, carrying cool draughts of peace in her golden pitcher from the western ocean of rest.
But there, where spreads the infinite sky for the soul to take her flight in, reigns the stainless white radiance. There is no day nor night, nor form nor colour, and never, never a word.

கிருஷ்ணா,   நீ  தானடா  இந்த பரந்த  ஆகாயம்.   நீதானடா  இந்த  சிறு பறவையின் கூடு. எவ்வளவு அழகாக ஒரு மரக்கிளையில் கீழே  விழாமல் அழகாக  தானே  யோசித்து ஒரு பறவை கட்டி இருக்கும்  வீடு, அதன்  கூடு.  அதனுள் உயிர்கள். அதன் குடும்பம். ஒரு பறவை போல் இன்னொன்று கூடு கட்டுவதில்லை, ஒவ்வொன்றும் ஒரு  இன்ஜினீயர். புது புது மாடல்களில் வீடு. 

அழகு பிம்பமே, கிருஷ்ணா, அந்த சிறிய பறவைக் கூட்டில் உன் அன்பை  வாரி வழங்கி இருக்கிறாயே.  கூட்டில் சில  முட்டைகள், அதற்குள்?  வண்ண வண்ண  பிறவிகள், அழகான குரலோடு பாடும் உயிர்கள் வளர்கின்றன.. எல்லாம் உன் கருணையால்...  எந்த ஆபத்தும்  இல்லாமல்  அவை வளர்ந்து முட்டையிலிருந்து வெளி வரும் வரை நீ தானே காவல் தெய்வம்.

ஒவ்வொரு  நாளும், ஒரு நாள்  விடாமல், குறித்த காலத்தில்,  கையில் தங்க கூடையில் வண்ண வண்ண நறுமலர்களில் தொடுத்த மாலையாக  பூமாதேவிக்கு கிரீடமாக வைத்து, அர்ச்சனை செய்யும்  தாவரங்கள்.  சூரியனின் பொற்கிரண ஆடை அணிகலன்.

 ஒவ்வொரு  மாலையும் , மேற்கு கடல் தரும் குளிர்ந்த  காற்றை தாங்கிக்கொண்டு அழகிய  பள்ளத்தாக்கில், பச்சை பசேலென்று  புல்வெளி, செடிகொடிகள்  மீது உரசி,  மேய்ச்சல் பசுக்கள் , கன்றுகள்  வீடு திரும்பும் போது அமைதியாக  வீசும் தென்றல். அதே  பொற்கிரண  கூடையில்  சுமந்து வந்து  அளிக்கிறதே  அதுவும்  நன்றியால் தான்.

ஒரு கணம்  ஆனந்தமாக  கண் மூடி  அமர்கிறேன்.  வானம்  பூமி  எல்லாம்  தாண்டி அற்புதமான  பரந்த ஒரு வெளியாக  நீ.  அமைதியாக  மெதுவாக  கண் கூசும் ஒரு ஒளி  மயமாக  என்னுள்  புகுந்து அமர்கிறாய்.  அங்கு பகல் இல்லை, இரவில்லை, உருவமில்லை, நிறமில்லை,   ஒலியில்லை ,  ஒளிமட்டுமே,  எல்லாம்  இன்பமயம், ஆனந்தமயம். சொல்ல வார்த்தை தெரியவில்லையடா  கிருஷ்ணா. 

 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...