Thursday, June 24, 2021

GEETHANJALI

 



கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K SIVAN 

தாகூர் 

73   மனதிலாடும்  மாதவா..

73.  Deliverance is not for me in renunciation.
I feel the embrace of freedom in a thousand bonds of delight.
Thou ever pourest for me the fresh draught of thy wine of various colours and fragrance,
filling this earthen vessel to the brim.
My world will light its hundred different lamps with thy flame and place them before the altar of thy temple.
No, I will never shut the doors of my senses.
The delights of sight and hearing and touch will bear thy delight.
Yes, all my illusions will burn into illumination of joy, and all my desires ripen into fruits of love.


கிருஷ்ணா,  எனக்கு உலக ஈர்ப்பு, பிடிப்பு  அகலவில்லையடா.  அதைத் தியாகம்  செய்யும்  மனப்பக்குவமும்  இன்னும்  அடையவில்லை. முயல்கிறேன். தோற்கிறேன்.  ஆனால்  ஓயவில்லை. தொடர்ந்து முயல்கிறேன். உன்னிடமிருந்து பெறும் ஒளி என்  நூற்றுக்கணக்கான தீபங்களை ஏற்றி ஒளி தருகிறது.  அவை அத்தனையும் உன் சந்நிதியில் தான் சமர்ப்பிக்கிறேன்.  என் புலன்களின்  கதவுகளை என்னால் படீர் என்று சாத்தி தாழ்ப்பாள் போட முடியவில்லை. என் உணர்வுகள் என்னைவிட  சக்தி கொண்டவையாக இருக்கிறதே.  உன்னை  காண்பதிலும், தொடுவதிலும்  கேட்பதிலும்  ஆனந்தமடைகிறேன்.    காண்பது  நேரில் இந்த ஜன்மத்தில்  இல்லை. முடிந்தவரை  கோயில் சிலையாக  புத்தகத்தில் படமாக  இதைத் தவிர என் மனதில்   கற்பனையாக கண்டு  வணங்குகிறேன். இது முதல்படி இன்னும்  நிறைய படி ஏறி தான் உன்னை வந்து தொடமுடியும். காண வேண்டும்.   உன்னைப்பற்றிய  என்  மனக்காட்சிகள்  நிழல் படமாக  வேகமாக ஓடி  எனக்குள் ஒரு ஆனந்தத்தை தருகிறது. என் ஆசைகள் பெருத்து பழமாகி அது உன் மேல் பக்தி  பழமாக  அன்பாக  கனிய ட்டும்.  
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...