Sunday, April 11, 2021

SURDAS


 ஸூர்தாஸ்   -   நங்கநல்லூர்  J K  SIVAN --



36     'யார் சொன்னது  பார்வை இல்லை என்று?

புறக்கண் மட்டும் தான்  பார்வை தருமா?  யார் சொன்னது?  கண்ணனைக் காண  வெளிக் கண் மட்டுமா வேண்டும்?  கண்ணனைக் காண  கண்ணாடி தேவையா ?  எப்போதும் உள்ளே  நன்றாக  தெரிகிறானே .  நான் பார்க்கிறேனே .  போதாதா?  

கூட்டம் கூட்டமாக தாமரைகள் எவ்வளவு அழகாக  மொட்டு  அவிழ்ந்து  மலர்கிறது.  எத்தனை வித வண்ண வண்ணங்களில்  காண்கிறது.   சிறிதும் பெரிதுமான   வித வித வண்டுகள் அதை மொய்த்துக் கொண்டிருக்கிறது .    தேன்  பருக  போட்டா போட்டி.     உரக்க ரீங்கார சப்தம் ஆனந்தமாகக்  கேட்கிறதே. அந்த  ஒலி  எப்படி இருக்கிறது என்று சொல்லட்டுமா?   உலக பந்த பாசங்களை வெறுத்த ஞானிகள்  எங்கு சென்றாலும் வழியெல்லாம்  கிருஷ்ணா உன் மீது ஆனந்தமாக  நாம சங்கீர்த்தனம் பாடுவார்களே  அது போல்  சீராக  ஒன்று சேர்ந்த குரலில் ஒரே  ராகமாக  காதில் விழுகிறது.!

உன்  அம்மா  யசோதை  இதோடு  நான்கு   தடவை  உன்னை  உலுக்கி  ''எழுந்திரடா  கிருஷ்ணா, பொழுது  விடிந்து  விட்டதே''  என்று  எழுப்புவது  எனக்குத்   தெரியும். அவளது  அன்பு, பாசம் உனக்கு  மட்டுமா புரியும், எனக்கும் தெரியும்.  அவள் குரலைக்  கேட்க விரும்பி அவளைக்  கெஞ்ச வைத்து,  மெதுவாக  உன் பொய்  உறக்கம்  நீங்கி நீ  தாமரை மொட்டு அவிழ்வது போல்  கண்  விழிக்கிறாயே.  அந்த பார்வையில் என் உலக பந்த பாசங்கள்   அனைத்துமே தூர  விலகி  விட்டதே. ''பார்வை  ஒன்றே  போதுமே''. 

என்  அகங்கார  மாயை  அகன்று  விட்டதே.  என்  மன  சஞ்சலங்கள் அழிந்து விட்டனவே.  கோவிந்தா  கோபாலா  என்று  சொல்லும்போது  எனக்கு  எவ்வளவு ஆனந்தம், பரமானந்தம்.
 வார்த்தையில்  எழுத்தில் சொல்ல முடியவில்லையே!

''Clusters of lotuses burst into bloom
the bumblebees humming with sweet sound
leave the lotuses;
as though the devout renouncing worldly ties,
in your love drowned
chant your name as they go about.
 
Hearing his mother's words with love
drenched the Lord of Mercy arose from his bed;
the world's woes vanished,
maya's net was rent.
Says Suradasa,
'Seeing his lotus face delusion fled;
all doubts and dualities were destroyed and I found in Govinda eternal joy.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...