Friday, April 16, 2021

CHANAKYA NEETHI SASTRA


 சாணக்கியன். - நங்கநல்லூர் J K SIVAN --


சகலகலா வல்லவன் கௌடில்யன் சொற்கள்.


कश्चित् कस्यचिन्मित्रं, न कश्चित् कस्यचित् रिपु:। अर्थतस्तु निबध्यन्ते, मित्राणि रिपवस्तथा ॥

கஸ்சித் கஸ்ய சிந் மித்ரம், ந கஸ்சித்  கஸ்யசித் ரிபு:  ।
அர்த்தஸ்து நிபத்யந்தே, மித்ராணி  ரிபவஸ்ததா ॥

இந்த உலகத்தில்  எவனுமே  மற்றவனின் நண்பனுமில்லை, எதிரியுமில்லை.   செய்யும் கர்மத்தால் எவரும்  ஒருவரின் நண்பனாகவோ  எதிராகவோ ஆவதுமில்லை.   அவனவன் மனமே அவனைத் தூண்டி விட்டு  மற்றவனோடு ஆன உறவை  இவ்வாறு பாகு படுத்தி துன்புறுகிறது.     

 
2. मूर्खशिष्योपदेशेन दुष्टास्त्रीभरणेन च। दुःखितैः सम्प्रयोगेण पण्डितोऽप्यवसीदति॥

மூர்க ஸிஷ்யோ  பதே ஸேந துஷ்டா ஸ்த்ரீ  பரணேநச  ।
து: கிதை:    ஸம்ப்ரயோகேண  பண்டி தோ s   ப்யவஸீததி ॥

முட்டாள்களை  சீடராக்கி  ஞானம் போதிக்கும்போதும்,  கெட்ட பெண்ணோடு  உறவு கொண்டு வாழும்போதும்,   வியாதியஸ்தர்களோடு வாழ்வதும்  ஒரு  பண்டிதன் துக்கமடைகிறான். துன்புறுகிறான் 

3. दुष्टा भार्या शठं मित्रं भृत्यश्चोत्तरदायकः। ससर्पे गृहे वासो मृत्युरेव न संशयः॥
துஷ்டா   பார்யா    ஸடம்   மித்ரம்ப்ருத்ய   ஸ்சோத்தர   தாயக:  ।
ஸஸர்பே  க்ருஹே   வாஸோ  ம்ருத்யு ரேவ  ந   ஸம்ஸய:  ॥

கொடிய  மனைவி,   அதிகமாக பேசி திசை திருப்பும் நண்பன், எதை சொன்னாலும்  வெளியே சொல்லும்  வேலையாள், வீட்டில் உறையும்  பாம்பு,  இதெல்லாம்   அழிவுக்கும், மறைவிற்கும் காரணமானவை.  சந்தேகமே  துளிகூட இதில் வேண்டாம்.
 
4. धनिकः श्रोत्रियो राजा नदी वैद्यस्तु पञ्चमः। पञ्च यत्र न विद्यन्ते न तत्र दिवसे वसेत ॥

தநிக:   ஸ்ரோத்ரியோ   ராஜா  நதீ  வைத்யஸ்து பஞ்சம:।
பஞ்ச  யத்ர   ந   வித்யந்தே  ந    தத்ர  திவஸே வஸேத் ॥

எங்கே  ஒரு   செல்வந்தனும் வாழ வில்லையோ,   எங்கே  வேத விற்பன்னர்கள் காணப்படவில்லையோ,  எங்கே  ராஜாவோ, ஒரு  வைத்யனோ  இல்லையோ,  எங்கே ஒரு நதி கூட ஓடவில்லையோ,  அங்கே  ஒரு நாளும்  சென்று வசிக்க கூடாது. வசிக்க தகுதியற்ற இடம் அது.  

5. जानीयात्प्रेषणेभृत्यान् बान्धवान्व्यसनाऽऽगमे। मित्रं याऽऽपत्तिकालेषु भार्यां च विभवक्षये ॥

ஜாநீ யாத்    ப்ரேஷணே   ப்ருத்யாந்   பாந்தவாந்  வ்யஸநா ss கமே ।
மித்ரம்   யா ss பத்திகாலேஷு  பார்யாம்  ச  விப வக்ஷயே  ॥

வேலையாள்  ஒரு முக்கியமான  வேலையை கொடுத்து அனுப்பும்போது புரிந்துகொள்ளலாம் . துன்ப துயர நேரங்களில் தான்  மனைவியின் உண்மையான  பாசமும் நேசமும்  புரிபடும்.  நமக்கு  ஒரு கஷ்ட காலத்தில் தான் உண்மையான நண்பன் யார் என்று அறிந்து கொள்ளமுடியும். 

6. यस्मिन् देशे न सम्मानो न वृत्तिर्न च बान्धवाः। न च विद्यागमोऽप्यस्ति वासस्तत्र न कारयेत् ॥

யஸ்மின்   தே ஷே ந   ஸம்மாநோ   ந வ்ருத்திர்  ந  ச  பா ந்தவா: ।
ந  ச  வித்யா கமோ s  ப்  யஸ்தி   வாஸஸ்தத்ர   ந  கார யேத் ॥

எந்த ஒரு பிரதேசத்தில்  மதிப்பு, மரியாதை, அங்கீகாரம் இல்லையோ,  எங்கே   பயமின்றி வாழ வசதியில்லையோ,   எங்கே  மக்கள் சகோதரர்களாக  சேர்ந்து வாழ  முடியாதவ ர்களோ,  எங்கே  கல்வியறிவு புறக்கணிக்கப் பட்டு  கல்வி வளரவில்லையோ,  அங்கே சென்று வாழவே  கூடாது.


சாணக்கியன் இன்னும் சொல்லப்போகிறான் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...