Thursday, June 16, 2022

SLOKA

 ஓம் சாந்தி சாந்தி சாந்தி:    நங்கநல்லூர்  J K  SIVAN 



ॐ सह नाववतु ।  सह नौ भुनक्तु । सह वीर्यं करवावहै । तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

Om Saha Naav[au]-Avatu | Saha Viiryam Karavaavahai | Tejasvi Naav[au]-Adhiitam-Astu Maa Vidvissaavahai |
Om Shaantih Shaantih Shaantih ||   

ஓம் !  ஸஹநாவவது । ஸஹ நௌ புநக்து । ஸஹ வீர்யம் கரவாவஹை தேஜஸ்விநாவதீதமஸ்து
மா வித்விஷாவஹை ॥     ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

இது யார் சொல்வது? ரெண்டு பேர். ஒருத்தர்  குரு  இன்னொருத்தன் சிஷ்யன்.  என்ன சொல்கிறார்கள்:
நம் கல்வியிலும், அறிவு வளர்ச்சியிலும், நாம் சேர்ந்தே வளர்வோம். கற்றது கைம்மண்ணளவு தானே. இருவரும் அறிந்ததை புரிந்து கொண்டு ஆனந்திப்போம்.  சேர்ந்து கற்போம்.  நம் கடமைகளாய் சேர்ந்தே செய்வோம்.  சேர்ந்தே புத்துணர்ச்சி பெறுவோம்.   சிந்திப்போம்,  புது உலகில் பிரவேசிப்போம். விரோதம், பொறாமை, வெறுப்பு எதுவுமே  நெருங்க இடம் கொடுக்காதிருப்போம். அறிவு ஞானம் அது ஒன்றே  தீபமாக  பிரகாசிக்கட்டும்.    சாந்தி சாந்தி சாந்தி, பேரமைதி  ப்ரம்ம ஞானம் மனதை முழுதாக நிரப்பட்டும்.

இவ்வளவு சின்ன மந்திரம்,  கைவல்யோபநிஷத் கிருஷ்ண யஜுர் வேதத்தை சார்ந்தது.  இதில் என்ன புரிகிறது.  குருவும் சிஷ்யனும் ஒன்றாகவே தம்மை கருதினார்கள்.  ப்ரம்மஞானத்தை அடை வதில் எல்லோரும் ஒன்றே.  நான் பெரியவன் நீ சின்னவன்  என்ற  அகம்பாவம் காணோம். கல்விகற்கவோ  கற்பிக்கவோ காசு குறுக்கிடவில்லை. கல்வியை காசுக்காக  கற்றோ , காசுக்காக விற்றோ,   காசுக்கு எடைபோடவோ கல்வி அப்போது இல்லை.... 

 


.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...