Sunday, June 26, 2022

KRISHNA IN MIND

 எண்ணத்தில் கண்ணன்      நங்கநல்லூர்  J K  SIVAN 


''கண்ணா நீ என் கண்ணின் பாவை. என்னுள்ளே இருப்பவன். உன்னை உணர நீ என்னெதிரே தோன்றிய சிறு குழந்தை என்று வைத்துக்கொண்டால், என் விழியின் சக்தியின்றி, கண்ணில் பாவையின்றி, பார்வை இன்றி, உன்னை எவ்வாறு காண்பேன்? சிறு குழந்தையாக நிற்கும் உன்னை எவ்வாறு கண்டு ரசிப்பேன்? எனக்கு பார்வையும் நீ, நான் பார்க்கும் காட்சியும் நீ. உன்னுடைய மனித உருவை எனக்கு காட்டுகிறாயா? ''

ராதா இவ்வாறு காண ஏங்கும்போது அவன் மதுராவில் அல்லவா இருந்தான். ஆனாலும் அவள் இவ்வாறு எண்ணி கண்ணை மூடி திறந்தாள். எதிரே கண்ணன் தோன்றினான்.

'கோபாலன் வந்தான் கோவிந்தன் வந்தான்'' என்று எப்போது கோபியர் ஆடிப்  பாடினாலும் ராதை அவன் வந்ததை பரிபூர்ணமாக உணர்ந்தாள். அவனை வழக்கமாக சந்திக்கும் மதுவனத்துக்கு ஒரே ஓட்டம் ஓடினாள். கண்ணன் இருந்த இடம், அவன் இன்னும் அங்கேயே இருப்பான் என்று கால மெல்லாம் யமுனையின் சுடுமணலில், கொட்டும் மழையில் நின்றாள் . வனங்களில் அலைந்து தேடினாள். 
  ''ஹே, பறவைகளே , பசு கன்றுகளே , நீங்கள் என்  கண்ணனைக் கண்டீர்களா''  என  வினவினாள் .

நம்மால் முடியுமா. முயற்சிக்கிறோமா. நிச்சயம் முடியும்.  ' முயற்சி திருவினை'  ஆக்குமே, கண்ணன் தோன்றுவானே!
அவனை நினைக்கும்போது ஒரு புத்துணர்ச்சி என்னுள் உணர்கிறேனே. ராதா நெஞ்சில் நிரப்பிக்  கொண்டு இருக்கிராலே , அங்கே இல்லாமல் போவானா?

''ராதா, உனக்கு என்ன வேண்டும் சொல்'' என்றான் கிருஷ்ணன்.
''நீ. உன் நினைவு கண்ணா. அது போதும் '
அவள் பாடினாள். பாடிக்கொண்டே இருந்தாள்.  

 ''கிருஷ்ணா உனக்கு நினைவிருக்கிறதா? நீ அந்த காளிங்கன் பாம்பின் மீது நர்த்தனம் ஆடினாயே, நீ ஆடிய ஆட்டத்தில் உன் காலில் நீ அணிந்திருந்த தண்டை கொலுசு ஜிங் ஜிங் என்று ஒலித்ததே அதை இன்னொரு முறை கேட்கவேண்டுமே?''

அடுத்த கணமே ராதையின் காதில் அந்த ''சலங் சலங்'' ஒலி மீண்டும் கணீர் என்று கேட்டது. 
நாம் இப்போது எதற்கெடுத்தாலும் '' தேங்க்ஸ்'' என்கிறோம்.   நாம்  சொல்லும்  ''தேங்க்ஸ் குட் மார்னிங், ஈவினிங்,  நைட்''   இதற்கெல்லாம் அர்த்தமே இல்லை. உண்மையில் அப்படி வாழ்த்தும்  எண்ணம் மனதில்  இல்லை..அர்த்தமற்ற உணர்வற்ற வார்த்தைகள்.  வாய் மட்டும் மெஷின் மாதிரி சொல்கிறது.  எந்த அர்த்தம் தெரிவிக்க அதை உபயோகிக்கிறோம்?. மனப்பூர்வமாக வரும் வார்த்தைகளா அவை? யோசித்து பாருங்கள். 
ராதையின் தேங்க்ஸ் அவள் பேசாமல் உகுத்த ஆனந்தக் கண்ணீர். தனை மறந்த நிலை.  அப்படித்  தான் அவள்  கண்ணனை அனுபவித்தாள்.. .
ராதாவை உணர அவளுக்கிருந்த கிருஷ்ண ''பசியும் தாகமும்'' நமக்குள் இருக்க வேண்டும். அவள் பக்தியும் பிரேமையும் எவ்வாளவு ஆழம் என்பதை நாமும் மூழ்கினால் தான் புரியும். '

ரொம்ப  நீளமாக எழுதிவிட்டேனோ? ஒரு வினாடி விஷயமல்லவோ இது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...