Sunday, June 26, 2022

ORU ARPUDHA GNANI

 

#ஒரு_அற்புத_ஞானி   -    நங்கநல்லூர்  J K  SIVAN
சேஷாத்ரி ஸ்வாமிகள்
 
வெளியே அதிகம் தெரியாத ஒரு மஹா ஸ்வாமி என்று தான் அவரைப் பற்றி முதல் எழுத தோன்றியது.   அவர் ஒரு ப்ரம்ம ஞானி.  

திருவண்ணாமலையில் சேஷாத்திரி ஸ்வாமிகள் வாழ்ந்த ஒவ்வொரு கணமும் அதிசயம், ஆச்சர்யம் நிறைந்த  சம்பவங்களாக இருந்தபோதிலும் அவற்றைப் பற்றி அதிகம் வெளியே தெரியாத காரணம்  அவர்  விளம்பரப் பிரியர் அல்லர். எவரையும்  அருகிலே சேர்க்காதவர் என்பதால் . அவரையே  விடாமல்  தொடர்ந்து   அவர்  செயல்களை சொற்களை விவரிக்க யாரும் காணோம்.  பக்தர்களுக்கு  விசித்திரமாக  காட்சி அளித்து  அருள் புரிந்தவர். அதை அந்தந்த குடும்பங்கள் தமக்குள்ளேயே வைத்துக் கொண்டு வெளியே பராமவள் மறைந்து விடுகிறது.  
 அத்திப் பூத்ததுபோல்  அவரிடமிருந்து  அதிசய  அனுபவங்கள் பெற்ற ஒன்றிரண்டு  பக்தர்கள்  எழுத்தில் வடித்ததில்  அறிந்த , கசிந்த  விஷயங்கள் தான் சேகரித்து  அளிக்கிறேன். அப்படி ஒரு திவ்ய பக்தர்  ஸ்ரீ  குழுமணி நாராயண சாஸ்திரிகள். அவர் எழுதிய விஷயங்களே போதும் போதும்.  

இன்று ஒரு சில சம்பவங்கள் அனுபவிப்போம்.
சேஷாத்திரி ஸ்வாமிகள் அருகிலே  முடிந்தபோது அவர் அனுமதித்த  போது நிழலாக,  சிஷ்யனாக  சேவை செய்யும் மாணிக்கசாமிக்கு ஒருநாள் சேஷாத்திரி ஸ்வாமிகள் அபூர்வமான ஒரு உபதேசம் செய்தார்:

''இதோ பார் மாணிக்கம், உனக்கு  குரு தெரியணுமா"'' ஆமாம் சாமி'
'அவரையே  உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த  மாணிக்க சாமியிடம் 
 ''அப்படின்னா  நீ    ஈயைப்    போல்  சுத்தமாக இருக்கணும்.   எறும்பு மாதிரி  பலத்தோடு இரு,   நாய்  மாதிரி  அறிவோடு இருக்கணும்,  ரதியைப் போல் அன்போடு இருக்க கத்துக்கோ. அப்போ  குரு தெரிவார்'' என்ரூ சொல்லி விட்டு  போய்விட்டார்  சேஷத்திரி ஸ்வாமிகள்.

மலர்களின் மதுவும், மலமும்   ஈயைப் பொறுத்தவரை  ஒன்றே.  ஆகவே  இரண்டிலும்  அது  ஆனந்திக்கிறது. எனவே மனதளவில் அது சுத்தமானது.

பலமுள்ளவன் தான் சோர்வடைய மாட்டான். இரவும் பகலும் உழைக்கும் எறும்பு சுறு சுறுப்புக்கு பேர் போனது. தன்னை விட பெரிய  சர்க்கரைக்  கட்டியை தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு போகும்.   ஆகவே,  அதை  பலமிக்கது என கருதலாம்.

 காதையும், வாலையும் எவனோ குறும்பு  குப்பு சாமி வெட்டிவிட்டான் என்றாலும்  காது இருந்த இடத்தை உயர்த்தியும், வால் இருந்த இடத்தை ஆட்டியும் நாய்  தன்னுடைய அறிவை உபயோகித்து ஒருவேளை உணவை  அளித்த அந்த குப்புசாமியை நன்றியோடு  நக்கி நெருங்கு கிறது.  அதால் நன்றியை தெரிவிக்க முடிந்தது  அந்த அளவுக்கு தானே.

எந்த மனைவி கணவனின் நலம் கருத்தில் கொண்டு  எப்போதும் அவனுக்கு பணிவிடை செய்து, அவன் அடிபணிந்து கிடக்கிறாளோ அவளே அழகிய குணம் படைத்த  ரதி என்று  கருதப்படுபவள்.

இதைத் தான்  ஸ்வாமிகள் மாணிக்க சாமிக்கு உணர்த்தி இருக்கிறார். எவ்வளவு பெரிய விஷயம்.

எனவே ஐம்புலன் வசமாகாமல்  சுறுசுறுப்பாக தனது நித்ய கடமைகளை செய்பவன் கஷ்டத்தை கஷ்டமாகவே  உணரமாட்டான்.  லோக க்ஷேமத்திற்காக தன் உழைப்பை ஈடுபடுத்திக் கொள்வான்.

நமது  கர்மங்கள் எல்லாமே  நமக்கு ஏதாவது ஒரு பயனை அளிப்பவை.  நல்ல கர்மம் நல்ல பயனை தரும்.  கெட்டதைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஈஸ்வரார்ப் பணமாக செய்த கர்மங்கள் வறுத்த விதையை நட்டது போல.  எந்த  கர்மபயனும்  அதோடு சம்பந்த ப்படுத் தாது.'' என்பார்  ஸ்வாமிகள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...