Tuesday, November 30, 2021

PESUM DHEIVAM

 பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 


97. மஹா பெரியவாளின்  திடீர்  நடராஜா தரிசனம்.

மஹா பெரியவாவின்  முதல் சிதம்பர விஜயத்தைப் பற்றி  சொல்லும்போது சில முக்கியமான விஷயங்களை தெரிந்துகொள்வோம்.

வாத்தியங்கள் பலவகை நமது தேசத்தில் ஒலி இன்பம் தருபவை.  சில வாத்தியங்கள் பழைய காலத்தோடு மறைந்து விட்டன. 
வாத்தியங்களில் மேலோட்டமாக மூன்று வகை.  சர்ம வாத்யம். - அதாவது தோல் கருவிகள். மிருதங்கம், தவில், கஞ்சிரா, உடுக்கை, நகரா, பஞ்சமுக வாத்யம்,  செண்டை,  போன்றவை.  மிருகங்களின் தோல் உபயோகப் படுத்தியவை.   கையாலும் குச்சியாலும்  வாசிக்கப்படுபவை.இதில் ஒரு சப்தம் முடிந்தபின் அடுத்ததை ஆரம்பிப்பது  ''சாபு''  எனப்படும் .

தங்தி வாத்யம் என்பவை, உலோக கம்பிகள், நரம்புகளால் இழுத்துக் கட்டப்பட்டவை.  வயலின் எனும் பிடில், வீணை,  தம்புரா, இன்னும் என்னென்னவோ. இப்படி தந்திகளின்  அதிர்வால் ஒலி  எழுப்பு
பவை.  

மூன்றாம் வகை  துளை வாத்தியங்கள்,  இவற்றை  வாயுரேந்திரிய வாத்யம் என்பது. காற்றை உள்ளே செலுத்தி அபூர்வ நாதங்களை  உருவாக்குவது.  புல்லாங்குழல், நாதஸ்வரம், சாக்ஸோ போன்  கிளாரினெட், போன்றவை.
 
சிதம்பரம் நடராஜாவின்  டமருகம் அவரது தாண்டவ நடனத்தின்  இடையே ஒலிக்கும்.    ஆடலரசன்  ஆடியது  சனகர், பதஞ்சலி, வ்யாக்ரபாதர்  ஆகியோர் மற்ற ரிஷிகளுடன்  ஆனந்தமாக  பார்த்து  அனுபவிக்க.  ஞானதிருஷ்டியால் அந்த  ப்ரம்ம ரிஷிகள்   பரமேஸ்வரனின் பிரபஞ்ச  நடனத்தை செவியால்  கேட்டு, கண்ணால் பார்த்து அனுபவிக்க முடிந்தது. 

நமது கண்களில்  லென்ஸ் என்று ஒரு  கண்ணாடியை விட  அதி நுட்பமான வசதி நாம் பிறந்தது முதல் உண்டு. இந்த லென்ஸினால் தான் நமது பார்வையின் சக்தி அமைகிறது. வயதாக ஆக இயற்கையாக பகவான் தந்த லென்ஸ் சக்தி இழந்து வெளியே கண் டாக்டர் தரும் சோடா பாட்டில் கண்ணாடி லென்ஸ் தேவைப்படுகிறது. சரியாக நாம் கண்ணின் அருமை தெரிந்து புரிந்து அதை பாதுகாப்பதில்லை .  இருளில்  மொபைல், கிட்டே அமர்ந்து டிவி, அரை இருட்டில் புத்தகம், ஓடும்  வாகனங்களில் படிப்பது போல எத்தனையோ காரியங்களால் கண்ணின்  பார்வை குறைகிறது. 
ஆகவே தான் டாக்டர் கொடுத்த கண்ணாடி உதவியால்  தான்  ஐந்து அடி தூரத்தில் அதி வேக மாக பன்றிக்குட்டி வருவது தெரிந்து கொள்கிறோம். 

சனகாதி முனிவர்கள் எந்த  செயற்கை வாசித்தவர்.  லென்ஸும்  இல்லாமல் இயற்கையாக  உள்ள கண்களின் லென்ஸினால் ஆனந்த சபேசன் நடனம் கண்டனர். மஹா விஷ்ணு தான் பக்க வாத்யக்காரர். மத்தளம் வாசித்தவர்.  ப்ரம்மா  தாளம் போட்டவர்.  ஆட்ட இறுதியில்  நடராஜாவின் டமருகத்தில் (உடுக்கையில்) இருந்து பதினாலு விதமான சப்தங்கள் உண்டாயின . அந்த சப்தங்கள்  பரமேஸ்வரனின் சிவ ஸ்வரூபத்தை ஆனந்தமாக ரசித்தவையாக தென்பட்டன.

நந்திகேஸ்வரரும் சிவானந்த  தாண்டவத்துக்கு  மத்தள வாத்யக்காரர்.   இந்த பதினாலு வகை சப்தங்களை நந்திதேவர்  சிவபக்தி ஸ்தோத்ரமாக அர்த்தம் புரிந்து கொண்டு அருமையாக ஒரு பாஷ்யம் எழுதினார் என்பார்கள்.
 
ஆனந்த சபேச நடனம் பார்த்தவர்களில்  பாணினியும் ஒருவர்.   அந்த சப்தங்களை கேட்ட பிறகு தான்  பாணினி வியாகரண சூக்தம்  எழுதினவர்.  ''அ''வில்  ஆரம்பித்து  ''ல் ''  முடிவாக  அது உருவானது.   மொழி தோன்றிய வரலாறு இது. உலகின் அநேகமாக எல்லா மொழிகளுக்கும் முதல் அக்ஷரம்  ''அ''சப்தம் உடையது. 

வ்யாகரணத்தின் மூலம், ஆதாரம் தான்,   மஹேஸ ஸூத்ரம் எனப்படுவது. அது தான்  பரமேஸ்வரன் நடராஜாவின் டமருகத்திலிருந்து ஒலித்த சப்தம்.   நடராஜாவுக்கு அருகே  பதஞ்சலி  வியாக்ர பாதர்களை காண்கிறோம்.  எங்கே நடராஜா படம், விக்ரஹம்  பார்த்தாலும் இந்த ரெண்டு ரிஷிகளை அவர் அருகில்  பார்க்கலாம். ஏற்கனவே  சொல்லி இருக்கிறேன், எழுதி இருக்கிறேன்.  பதஞ்சலி ஆதிசேஷன் அம்சம். அங்கே மகாவிஷ்ணுவிடம் இருப்பவர், இங்கே  பரமேஸ்வரன் திருவடியில்   இருப்பவர்.  ஆகவே  பரமேஸ்வரன் தான் வியாகரண சாஸ்திரத்திற்கு மூலமானவர், அடிப்படை யானவர்.

சிதம்பரம் வந்து சேர்ந்த அன்றே, இரவு மஹா பெரியவா   மடத்தில் எப்போதும் தனக்கு  வஸ்திர கைங்கர்யம் பண்ணும் தொண்டன்,  ஒரு  இளைஞனை அழைத்தார்.

''இதோ பார், நீ  நாளைக்கு காலம்பற, விடிகாலை, ஐந்து மணிக்கு,  எனக்கு புது வஸ்திரம் எடுத்துண்டு சிவகங்கை தடாகத்துக்கு (குளத்துக்கு ) வந்துடு. என்ன புரியறதா?  இது உனக்கும் எனக்கும் தவிர வேறே யாருக்கும் தெரியவேண்டாம்.''

மறுநாள் விடிகாலை மஹா பெரியவா  அந்த இளைஞனோடு  குளத்தில் இறங்கினார். ஸ்னானம், ஜபம் எல்லாம் முடிந்தது.  நடராஜா சந்நிதி திறக்கும் முன்பே அங்கே காத்திருந்தார்.  வழக்கம்போல் வந்த  அர்ச்சக தீக்ஷிதர் மஹா பெரியவா அங்கே நின்றுகொண்டு  ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு  திடுக்கிட்டார்.  யார் இப்படி மஹா பெரியவா முன்னறிவிப்பு இன்றி திடீர் என்று வந்து நிற்பார் என்று எதிர்ப்பார்த்திருப்பார்கள்?

காவல்காரன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான் அவனை சீக்கிரமாக கூப்பிட்டு  எல்லா தீக்ஷிதர்களுக்கும் மஹா பெரியவா வந்திருப்பதை  அறிவிக்கச்  சொல்லி அனுப்பினார் அர்ச்சகர்.
ஓடினான்  அவன்.   நிமிஷத்தில் சேதி பறந்து சென்றது.  நூற்றுக்கணக்கானோர் அந்த விடிகாலையில் நடராஜா சந்நிதியில் திறண்டு விட்டார்கள்.  ஒருத்தர் பாக்கியில்லாமல் அனைத்து தீகிஷிதர்களும் மஹாபெரியவளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார்கள்.

 'மஹாபெரியவாளை ஏக தடபுடலோடு வரவேற்க  ஏற்பாடுகள் செய்திருக்கிறது.  இப்படி  ஏமாத் திட்டீளே என்று வருந்தினார்கள்''

''நான் ஆவலோடு  வந்தது  நடராஜாவுடைய  விஸ்வரூபம் தர்சனம் பண்ண''  என்றார்  பெரியவா. 
முதல் பூஜா  தரிசனம் தான் விஸ்வரூப தர்சனம். நான் இங்கே இருக்கிறவரைக்கும்  ஒவ்வொரு நாளும்  எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை வந்துண்டே தான் இருப்பேன்''

தரிசனம் முடிந்ததும்  மஹா பெரியவாளை  எல்லா தீக்ஷிதர்களும் தேவஸ்தான மரியாதைகளோடு அவர் தங்கியிருந்த மடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

''மஹா பெரியவா  கோவிலில் சில நாட்கள் இருக்கணும் , ஆயிரங்கால் மண்டபத்தில் சந்திர மௌலீஸ்வரர் பூஜை  பண்றதை  எல்லாரும் பாக்கணும்''
 என்று வேண்டிக் கொண்டார்கள்.  

ஸ்வாமிகளை வரவேற்று  ஸமஸ்க்ரிதத்தில்  அருமையாக  ஒரு பிரசங்கம் செய்தவர்  உபன்யாச ரத்நாகரம்  ஸ்ரீ C.S . சிவகாமசுந்தர தீக்ஷிதர்.  தமிழியில் மொழிபெயர்த்தவர் அவர் புத்ரன்  C .S சச்சிதானந்த தீக்ஷிதர்.   மஹா பெரியவா  சிதம்பரம் ஆலயத்தில் பதினைந்து நாட்கள் தங்கி இருந்தார். 

தொடரும் 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...