Tuesday, November 30, 2021

NIRVANA DHASAKAM 1

 ஆதி சங்கரர் -     நங்கநல்லூர் J K  SIVAN  

நிர்வாண தசகம் - 

ஆதி சங்கரர் அத்வைத சிந்தாந்த ஸ்தாபகர். ஷண்மத ஸ்தாபகர். அற்புதமான ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களாக வேத சாரம், உபநிஷதுகளை வழங்கியவர்.   இந்த நிர்வாண தசகம் (நிர்வாணம் என்றால் ''ஆடையில்லாமல்'  அல்ல.  பிரம்மத்தை தவிர மற்றதில் பற்றற்ற )  தசகம் என்றால் 10.  ஏழு வயதில்   சந்நியாசியாகி,  பிறகு  மலையாள தேசத்தில்  காலடி க்ஷேத்ரத்திலிருந்து  காலடி வைத்து  நடையாக கிளம்பிய சிறுவன் சங்கரன்  காடும் மலையும் கொடிய வனவிலங்குகளையும் கள்வர்களும்,  கொன்று தின்னும்  காபாலிகர்கள்,  அரக்கர்கள்  வாழும் இடங்கள் எல்லாம் கடந்து வடமேற்கே நர்மதா நதிக்கரை செல்கிறார். அங்கே ஒரு முதியவர் .ஒரு மலையாள தேச பாலகன், சர்வ தேஜஸுடன் தனது எதிரே வணங்கி நிற்பதைக்கண்ட  முதியவர் சங்கரன் மீது ஆர்வம் கொண்டு 
'' ஏ, சிறுவா,  நீ யார்?''   என்று கேட்கிறார்.
'' நான்  யார்?''  என்பதை தான் நானும் தேடி அலைகிறேன் குருநாதா''  என்கிறான் சிறுவன்.

 இப்படி ஸ்வய  விசாரத்தில் ஆரம்பித்த 10 ஸ்லோகங்கள் அக்கணமே  பாடுகிறார் ஆதி சங்கரர்.         அதுவே  இப்போது  நாம் அறிந்துகொள்ளும்  'நிர்வாண தசகம்'' . அந்த முதியவர் தான் ஆதிசங்கரரின் குரு கோவிந்த பாத ஆச்சாரியார்.  

 என்று கேட்கிறார். அவரை குருவாக வேண்டிய சங்கரர் அப்போது சொல்லிய பதில் தான் பத்து ஸ்லோகங்களாக (தசகமாக) நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.

நிர்வாணம் என்றால் ஆடையின்றி இருப்பது அல்ல. அப்படி தான் நமக்கு சொல்லி  கொடுத்திருக்
கிறார்கள். உண்மையில் அது ஆத்மாவை குறிக்கும் சொல். இல்லாதது போல் இருப்பது. அதனால் தான் இந்த ஸ்லோகங்களில் ஆதி சங்கரர் ஆத்மாவை விவரிக்கும்போது நான் அது இல்லை, இது இல்லை என்று ஒவ்வொன்றாக கூறுகிறார்

தன்னை மனது தேகம், ஐம்புலன்கள் சம்பந்தப்படாத ஒரு பரிசுத்த ஆத்மாவாக, அறிவித்துக் கொள்கிறார்.

न भूमिर्न तोयं न तेजो न वायुर्न खं नेन्द्रियं वा न तेषां समूहः ।
अनैकान्तिकत्वात्सुषुप्त्यैकसिद्धस्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥१॥

Na bhoomir na thoyam na thejo na vayu,
Na Kham nendriyam vaa na thesham samooha,
Anaikanthikathwath suspthyeka siddha,
Thadekovasishta Shiva kevaloham. 1

ந பூமிர்ந தோயம் ந தேஜோ ந வாயுர்ந கம் நேந்த்ரியம் வா ந தேஷாம் ஸமூஹ: |
அநைகாந்திகத்வாத்ஸுஷுப்த்யைகஸித்தஸ்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௧||

குருநாதா, ''நான்  யார் ?''  என்னை இந்த கேள்விகள் பல முறை நானே கேட்டுக் கொண்டேன். அதில் நான் அறிந்தது நான் இந்த பூமி அல்ல, நான் பூமியைச் சுற்றிலும் உள்ள நீரும் அல்லன். ஒளி தரும் அக்னியும் இல்லை. ஆகாசமும் நான் அல்ல. எங்கும் காணும் காற்றும் இல்லை நான். ஐம்புலன்கள் ஆட்டுவிக்கும் இந்த தேகமும் அல்ல. நான் சொன்னதெல்லாம் ஒன்று சேர்ந்த உருவமும் அல்ல. ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நான் சொன்னதெல்லாம் நிரந்தரம் இல்லாதது. நான் சிவன் எனும் ஆத்மன். மூன்று நிலைகளிலும், தூக்கம், விழிப்பு, கனவு என்று எதிலும் உள்ளவன். எதுவுமே இல்லாமல் போனாலும்,  எப்போதும்  இருப்பவன்.'' இது நிர்வாண தசகத்தில் முதல் ஸ்லோகம்.

நீ யார் என்று ஒரு வாத்தியார் கேட்டால் நாம் இப்படி பதில் சொன்னால் நமக்கு வாத்தியாரே கிடைக்க மாட்டார். நாம் வேறு ஆதி சங்கரர் வேறு. கோவிந்தபாதர் புரிந்து கொண்டார். ஆத்மஸ்வரூபன் அத்வைதன் அந்த பாலகன் என்று. சிஷ்யனாக ஏற்றுக் கொள்கிறார்.

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...