Thursday, November 25, 2021

ADHI SANKARAR MANEESHA PANCHAKAM

   ஆதி சங்கரர் -  நங்கநல்லூர்  J K  SIVAN  

 மனீஷா பஞ்சகம்

ஆதி சங்கரர் காலத்தில் கூட   உயர்குலத்தோர், இழி குலத்தோர், தீண்டாமை என்ற வேறுபாடுகள் இருந்தது. இதில் சங்கரருக்கு துளியும் உடன்பாடு இல்லை. வாயால் சொன்னால் யார் கேட்பார்கள்? எப்படிச்  சொன்னால் மக்கள் கவனம் திரும்பும்,   மக்கள்  திருந்துவார்கள்?.  ஒரு தக்க சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்திருந்தார். அது காசியில் அவர் அத்வைத கொள்கைகளை விளக்கக் கிடைத்த சந்தர்ப்பமாக உருவெடுத்தது.    சங்கரர் மனது பளிங்கு. அதில் தீண்டாமை இல்லை .ஆனால் அவரைச்  சுற்றி இருந்தவர்கள் மனதில் வித்யாசம் ஆழ பதிந்திருந்ததே . பச்சைப் பசேலென படர்ந்த துர்கந்த பாசி பிடித்த  நெஞ்சங்கள். ஒரு சம்பவத்தை உருவாக்குகிறார் சங்கரர்.
அவர் உண்டாக்கிய  சம்பவம் இது:

விடியற்காலை  கங்கையில்  ஸ்நானம் செய்ய சீடர்களோடு  செல்கிறார் சங்கரர். நெரிசலான வளைந்த காசி பட்டணத்தின் தெருக்கள் குறு கலான சந்துகள்.  அவர்கள் ஸ்னானம் செய்துவிட்டு வந்த வழியே ஒரு குறுகிய சந்தில் திரும்பி வரும்போது எதிரே ஒரு தாழ்ந்த குலத்தவன்,  தன் மனைவியுடன், நான்கு நாய்களை கயிற்றில் கட்டி இழுத்துக் கொண்டு வருகிறான். நான்கு நாய்களும் கயிற்றிலிருந்து விடுதலை பெற திமிறுகின்றன.   அங்கும் இங்கும் அலைகின்றன. அவனை இழுக்கின்றன. அவன்  தள்ளாடிக்கொண்டு   குடிகாரனைப்  போல் அங்கும் இங்கும் அசைந்து வருகிறான்.  அவன் மனைவியின் கையிலோ  கள் நிறைந்த பானை. இவர்களை எல்லாம் கண்டவுடன், சங்கரரின் சீடர்கள் முகம் கடுகடுத்தது. அருவறுப்பில் சுருங்கியது. சங்கரர் அதை கவனித்து விட்டு எதிரே வருபவனைப் பார்த்து

'' சற்று விலகிச் செல் தாழ்ந்தவனே (தூரம் அபசரரே சண்டாள: என்கிறார்.
அவனோ முகத்தில் புன் சிரிப்போடு சங்கரரிடம் கேட்கிறான்:

 “யாரை தூரப்  போ  என்று  சொல்றீங்க சாமி?  இந்த உடம்பையா  இல்ல  இந்த உடம்புக்குள்ள இருக்கிறா ஆத்மாவையா?  எதுங்க  தூர  போவணும்?'

இப்படி ஒரு பதிலை எதிர்பாராத சங்கரர் க்ஷண நேரத்தில் புரிந்து கொண்டார்.எதிரே வந்தவன் தாழ் குலத்தோன் அல்லன். ஒரு பூரண ஞானி. இல்லாவிட்டால் இப்படி ஒரு கேள்வி அவனிடமிருந்து வருமா? சங்கரர் அந்த  மனிதனுக்கு  சாஷ்டாங்க நமஸ்காரம்  செய்து வணங்குகிறார்.

“நீங்கள் யார் என்று சொல்லவேண்டும்'' என வணங்குகிறார் ஆதி சங்கரர்.
பதில் சொல்ல  அந்த மனிதன் அங்கே இல்லை. காசி விஸ்வநாதன் விசாலாக்ஷியுடன் காட்சி தர, நான்கு நாய்களும் நான்கு வேதங்களாக அல்லவோ காட்சி தந்தது.  கள் நிறைந்த பானை அம்பாள் கையில் அம்ரித குடமாக மாறியிருந்தது. அன்னபூரணி.
இந்த ஒரு கேள்வி பதில் மூலம் நமக்கு ஆதி சங்கரர்  அளிக்கும் 
 ஐந்து ஸ்லோகங்கள் தான் மனீஷா பஞ்சகம். ''மனீஷா'' என்றால் ''சம்மதிக் கிறேன்'' என்று பொருள். சண்டாளனாக பரமேஸ்வரன் தோன்றி மேற்கண்ட கேள்வியைக் கேட்க, அதற்குண்டான சங்கரரின் பதில்கள் தான் மனீஷா பஞ்சகம்.

கேள்வி:
अन्नमयादन्नमयमथवा चैतन्यमेव चैतन्यात् । यतिवर दूरीकर्तुं वाञ्छसि किं ब्रूहि गच्छ गच्छेति ॥
annamayādannamayamathavā caitanyameva caitanyāt । yativara dūrīkartuṃ vāñchasi kiṃ brūhi gaccha gaccheti ॥

அன்னமயாத் அன்னமயம் அதவா சைதன்யமேவ சைதன்யாத்|யதிவர துரீக்ருதம் வாஞ்சஸிகிம் ப்ரூஹி கச்ச கச்சேதி||

 ''சாமீ , நீங்க ரொம்ப படிச்சவங்க . நான் என்னாத்த கண்டேன். சொல்லுங்க. ''தூர போடா சண்டாளா'' ன்னு   எல்லாரும் சொல்றாமாறி  சொல்றீங்களே,   நீங்க சொன்ன வார்த்தை  இந்த சோத்தாலடிச்ச பை , இந்த உடம்பை பார்த்துட்டு சொன்னதா? உள்ளே ஏதோ ஒண்ணு உருவமில்லாம உணர்வா இருக்குதே ஆத்மான்னு,  அதை தூர போன்னு சொல்றீங்களா? எது சாமி தூர போவணும்? புரியும்படியா  சொல்லுங்கய்யா?.''

प्रत्यग्वस्तुनि निस्तरङ्ग सहजानन्दावबोधाम्बुधौ  विप्रोऽयं श्वपचोऽयमित्यपि महान्कोऽयं विभेदभ्रमः ।

pratyagvastuni nistaraṅgasahajānandāvabodhāmbudhau vipro’yaṃ śvapaco’yamityapi mahānko’yaṃ vibhedabhramaḥ 

ப்ரத்யேக்வஸ்துனி நிஸ்தரங்க ஸஹஜானந்தாவ போதாம்புதௌ| விப்ரோ அயம் ஸ்சபவோ அயமித்யபிமஹான்கோ அயம் விபேதப்ரம||

சாமி,   அசையாமல்  தெளிஞ்சிருந்தா,   அழுக்கு  ரொம்ப  சேரும் சகதியுமா, இருக்கிற  சின்ன குட்டை  தண்ணீரிலே கூட   மேலே  இருக்கிற  பெரிய  சூரியனோட  கிரணங்கள் பிரதிபலிச்சு  பளிச்சுனு  ஒளிவீசும் சூரியனை  காட்டுது.  அது போலவே பரப்ரம்மம் எந்த தாழ்ந்த, இழிந்த, உடலிலும் அவ்வாறே நிறைந்து காண்கிறான். இதில  பிராமணன் யாரு, மத்தவன் யாரு ? யார்  ஒஸ்தி யார் மட்டம்?  கங்கை தண்ணிலே பார்க்கிற  சூரிய பிம்பமும்  அழுக்கு குட்டை தண்ணிலே  பார்க்க சூரிய பிம்பமும் வேறே வேறாகவா  இருக்கு?  வித்யாசம் எங்கே  இருக்கு?  எல்லா உடம்பும் ஒரே உடம்பு தானே சாமி.? சொல்லுங்க?

किं गङ्गाम्बुनि बिम्बितेऽ म्बरमणौ चाण्डालवीथीपयः
पूरे वाऽन्तरमस्ति काञ्चनघटी मृत्कुम्भयोर्वाऽम्बरे ॥

kiṃ gaṅgāmbuni bimbite’mbaramaṇau cāṇḍālavīthīpayaḥ
pūre vā’ntaramasti kāñcanaghaṭīmṛtkumbhayorvā’mbare ॥

கிம் கங்காம்புனி பிம்பிதே அம்பரமணௌ சாண்டாளவீதீபய:|
பூரே வா அந்தரமஸ்தி காஞ்சனகடி ம்ருத்கும்பயோர்வா அம்பரே||

சாமி,  நானும் யோசிச்சேன்.  கங்கை தண்ணீர், சேத்திலே குட்டையில் இருக்கிற தண்ணீ  ரெண்டுலேயும் ஒரே சூரிய பிம்பம்  மாதிரி,   தங்க குடத்தியிலே இருந்தாலும்   மண் சட்டியில் இருந்தாலும்  தண்ணி ஒண்ணு   தானே சாமீ.   பாத்த்ரம் வேறே வேறேயா இருக்கறதால  தண்ணியும்  மாறிடுமா?  ஒரே அளவு தண்ணி  ரெண்டுலேயும் ஊத்தினா  ஒண்ணுல   கூட, ஒண்ணுல  கம்மியாயிடுமா?  அப்படி தானே  மனிசங்களும் ?  எல்லாத்துக்குள்ளேயும்  கடவுள் இருக்கிறானே.  அவன் ஒத்தன் தானே சாமி.''

இந்த கேள்விகளை  சண்டாளனாக வந்த பரமேஸ்வரன் கேட்பது போல் காட்டி  மிக உயர்ந்த  மானுட வாழ்க்கையின் தத்துவத்தை ஆத்ம ஞானத்தை பற்றி விளக்குகிறார் ஆதி சங்கரர்.

जाग्रत्स्वप्नसुषुप्तिषु स्फुटतरा या संविदुज्जृम्भते या ब्रह्मादिपिपीलिकान्ततनुषु 
प्रोता जगत्साक्षिणी । सैवाहं न च दृश्यवस्त्विति दृढप्रज्ञापि यस्यास्ति चे-
चे च्चाण्डालोऽस्तु स तु द्विजोऽस्तु गुरुरित्येषा मनीषा मम ॥ १॥

jāgratsvapnasuṣuptiṣu sphuṭatarā yā saṃvidujjṛmbhate
yā brahmādipipīlikāntatanuṣu protā jagatsākṣiṇī ।
saivāhaṃ na ca dṛśyavastviti dṛḍhaprajñāpi yasyāsti ce-
ccāṇḍālo’stu sa tu dvijo’stu gururityeṣā manīṣā mama ॥ 1 ॥

ஜாக்ரத்ஸ்வப்ன ஸுஷுப்திஷு ஸ்புடதரா யா ஸம்விதுஜ்ஜ்ரும்பதே யா ப்ரஹ்மாதி பிபிளிகாந்ததனுஷு
ப்ரோதா ஜகத்ஸாக்ஷிணி|ஸைவாஹம் ந ச த்ருச்யவஸ்திவதி 000த்ருடப்ரக்ஞாபி யஸ்யாதி சேச்
சண்டாளோs ஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா:மணீஷா மம ||

ஒவ்வொரு ஜீவனுக்கும் மூன்று நிலை. விழிப்பு, கனவு, தூக்கம், தவிர்க்கமுடியாதது, அது ப்ரம்மாவாக இருந்தாலும் சரி ஒரு சிறிய எறும்பானாலும் சரி இந்த விதிக்கு கட்டுப்பட்ட ஜீவன் தான் என்பதை நான் ஏற்கிறேன். ஆகவே எந்த ஒரு ஜீவனாக இருந்தாலும், உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ, அவனுள் இயங்கும்  ஆத்மா ஒன்றே தான் என்று அறிந்தவனை நான் குருவாக மனமார ஏற்கிறேன்.

ब्रह्मैवाहमिदं जगच्च सकलं चिन्मात्रविस्तारितं सर्वं चैतदविद्यया
त्रिगुणयाऽशेषं मया कल्पितम् । कल्पितम् इत्थं यस्य दृढा मतिः
सुखतरे नित्ये परे निर्मले चाण्डालोऽस्तु स तु द्विजोऽस्तु गुरुरित्येषा मनीषा मम ॥ २॥

brahmaivāhamidaṃ jagacca sakalaṃ cinmātravistāritaṃ
sarvaṃ caitadavidyayā triguṇayā’śeṣaṃ mayā kalpitam ।
itthaṃ yasya dṛḍhā matiḥ sukhatare nitye pare nirmale
cāṇḍālo’stu sa tu dvijo’stu gururityeṣā manīṣā mama ॥ 2 ॥

பிரஹ்மோவாஹமிதம் ஜக்ச்ச ஸகலம் சின்மாத்ரவிஸ்தாரிதம் ஸர்வம் சைததவித்யயா
திரிகுண்யாs சேஷம் மயா கல்பிதம்|இத்தம் யஸ்ய த்ருடா மதி:
ஸுகரே நித்யேபரே நிர்மலே சண்டாளோs ஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மனிஷா மம||

இந்த பரந்த உலகில் காணும் யாவும் ஒரு பேரண்ட பரப்ரம்மத்தின் பரிமாணம் தான். அதன் வெளிப்பாடுகளே. ஆனால் சத்வம், ரஜோ, தமோ குணங்களின் சகவாசத்தால் மாறி மாறி வரும் குணங்களின் தாக்கத்தால் மதி இழந்தவன் இந்த பேருண்மையை   அறிந்துகொள்ள  தவறுகிறான்  அறிந்திருந்தால் மறக்கிறான்.  இதை சதா சர்வகாலமும் உணர்ந்தவன் உயர்குலத்தோனோ, தாழ்ந்தவனாகவோ இருந்தாலும், பிரம்மத்தில் திளைக்கும் அவனே என் குரு என நான் ஏற்கிறேன்  என்கிறார்  ஆதி சங்கரர்.

शश्वन्नश्वरमेव विश्वमखिलं निश्चित्य वाचा गुरो र्नित्यं ब्रह्म निरन्तरं विमृशता निर्व्याजशान्तात्मना ।
भूतं भाति च दुष्कृतं प्रदहता संविन्मये पावके प्रारब्धाय समर्पितं स्ववपुरित्येषा मनीषा मम ॥ ३॥

śaśvannaśvarameva viśvamakhilaṃ niścitya vācā guro- rnityaṃ brahma nirantaraṃ vimṛśatā nirvyājaśāntātmanā ।
bhūtaṃ bhāti ca duṣkṛtaṃ pradahatā saṃvinmaye pāvakeprārabdhāya samarpitaṃ svavapurityeṣā manīṣā mama ॥ 3 ॥


சச்வன்ன ச்வரமேவ விச்வமகிலம் நிச்சித்ய வாசா குரோர் நித்யம் ப்ரஹ்ம நிரந்தரம் விம்ருசதா நிர்வ்யாஜசாந்தாத்மனா|
பூதம் பாதி ச துஷ்க்ருதம் ப்ரதஹதா ஸம்வின்மயே பாவகே ப்ராரப்தாய ஸமர்பிதம் ஸ்வவபுரித்யேஷா மனீஷா மம||

நான் தெளிவாக  உணர்ந்து புரிந்து கொண்டேன்.
இந்த அகண்ட பரந்த பிரபஞ்சமே ஒரு மாய லோகம் , இதில்  எதுவுமே சாஸ்வதமல்ல, அழியக்கூடியது,மாறக்கூடியது, மறையக்கூடியது என்றுணர்ந்து, இந்த தேகத்தின் கடமையே, ஆத்ம விசாரத்தில் பிரம்மத்தை தேடுவது, அடைவது ஒன்றே என்று மனதைக்  கட்டுப்பாட்டில் வைத்த ஞானி எவனாக இருந்தாலும்,உயர்ந்த குலத்தவனோ, தாழ் குலத்தவனோ அவனது சர்வ பாபங்களும் அவனது இந்த ஆத்ம வேள்வித்தீயில் கலந்து எரிந்து சாம்பலாகும். அவனையே எனது குருவாக ஏற்று அவனை நமஸ்கரிக்கிறேன்.

या तिर्यङ्नरदेवताभिरहमित्यन्तः स्फुटा गृह्यते यद्भासा हृदयाक्षदेहविषया भान्ति स्वतोऽचेतनाः ।
तां भास्यैः पिहितार्कमण्डलनिभां स्फूर्तिं सदा भावयन्योगी निर्वृतमानसो हि गुरुरित्येषा मनीषा मम ॥ ४॥

yā tiryaṅnaradevatābhirahamityantaḥ sphuṭā gṛhyate yadbhāsā hṛdayākṣadehaviṣayā bhānti svato’cetanāḥ ।
tāṃ bhāsyaiḥ pihitārkamaṇḍalanibhāṃ sphūrtiṃ sadā bhāvaya- nyogī nirvṛtamānaso hi gururityeṣā manīṣā mama ॥ 4 ॥


யா திர்யங்நரதேவதாபிரஹமித்யந்த: ஸ்புடா க்ருஹ்யதே யத்பாஸா ஹ்ருதயாக்ஷதேகவிஷயா பாந்தி ஸ்வதோs சேதனா:|
தாம் பாஸ்யை:பிஹிதார்கமண்டலநிபாம் ஸ்பூர்தி ஸதா பாவயன் யோகீ
நிவ்ருதமானஸோ ஹி குருரித்யேஷா மணீஷா மம||

உலகை பிரகாசிக்கச் செய்யும் ஒளி மிகுந்த சூரியனை மேகங்கள் மறைத்து ஒளியை விலக்கி இருளைக்  கவியச்செய்வது போல் சர்வ சக்தியாக எங்கும் எதிலும் இயங்கும் பிரம்மத்தை அஞ்ஞானம் எனும் அறியாமை மூடி  மறைத்து,   நம்மால் அறிய இயலாமல் தெரிந்து கொள்ள முடியாமல் செய்துவிடுகிறது.   நமக்குள்  பரமாத்மா இருப்பதை தெளிவு படுத்தி நமக்கு அறிவித்து ஞானம் உண்டாகச் செய்பவரே யோகி. அவர் எவராயிருந்தாலும் என் குருவாக ஏற்கிறேன். அடிபணிந்து வணங்குகிறேன்.

यत्सौख्याम्बुधिलेशलेशत इमे शक्रादयो निर्वृता यच्चित्ते नितरां प्रशान्तकलने लब्ध्वा मुनिर्निर्वृतः । 4
यस्मिन्नित्यसुखाम्बुधौ गलितधीर्ब्रह्मैव न ब्रह्मविद् यः कश्चित्स सुरेन्द्रवन्दितपदो नूनं मनीषा मम ॥ ५॥

yatsaukhyāmbudhileśaleśata ime śakrādayo nirvṛtā yaccitte nitarāṃ praśāntakalane labdhvā munirnirvṛtaḥ ।
yasminnityasukhāmbudhau galitadhīrbrahmaiva na brahmavid yaḥ kaścitsa surendravanditapado nūnaṃ manīṣā mama ॥ 5 ॥

யதிஸௌக்கியாம்புதிலேசலேதத இமே சக்ரதயோ நிர்வ்ருதா யச்சித்தே நிதராம் ப்ரசாந்தகலனே லப்தவா முனிர்நிர்வ்ருத: |
யஸ்மின்னித்யஸுகாம்புதௌ கலிததீர்ப்ரஹ்மைவ ந ப்ரம்ஹவித் ய:
கச்சித்ஸ ஸுரேந்த்ரவந்திதபதோ நூனம் மணீஷா மம ||

இந்திராதி தேவர்கள் பூஜித்து தொழும் அந்த பரமாத்மாவை மனதில் ஆத்மாவாக இருப்பதை உணர்ந்து எவன் வணங்குகிறானோ, அவன் எல்லையற்ற பேரின்பத்தில் திளைப்பவன், சதானந்தன்.    பிரம்மத்தை உணர்ந்த அறிந்த அந்த ப்ரம்ம ஞானி தானே ப்ரம்மமாகிவிடுகிறான். திருமூலர் சொல்வாரே, ''அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்தி ருந்தாரே'' அது புரிகிறதா? அப்படிப்பட்ட ஞானி, யாராக இருந்தாலும் அவனே என் குரு என ஏற்று அவன் திருவடிகளில் பணிகிறேன்.

दासस्तेऽहं देहदृष्ट्याऽस्मि शंभो जातस्तेंऽशो जीवदृष्ट्या त्रिदृष्टे । सर्वस्याऽऽत्मन्नात्मदृष्ट्या त्वमेवे -त्वमेवे त्येवं मे धीर्निश्चिता सर्वशास्त्रैः

dāsaste’haṃ dehadṛṣṭyā’smi śaṃbho jātasteṃ’śo jīvadṛṣṭyā tridṛṣṭe । sarvasyā”tmannātmadṛṣṭyā tvameve- tyevaṃ me dhīrniścitā sarvaśāstraiḥ ॥

தாஸமஸ்தேs ஹம் தேஹத்ருஷ்யாs ஸ்மி சம்போ ஜாதஸ்தேம்s ஸோ ஜீவத்ருஷ்யா த்ரித்ருஷ்டே|
ஸர்வஸ்யாs s த்மன்னாத்மத்ருஷ்யா த்வமேவேத்யேவம் மே தீர்நிச்சிதா ஸர்வசாஸ்த்ரை:|

என் பிரபு, பரமேஸ்வரா,  இந்த தேகத்தோடு உலவும் நான் உங்களடிமை.  நான்  வாழும் இந்த வாழ்க்கை  அது உன்னில் கலந்த உன்னுடைய  விளையாட்டு.  என்னுள்ளே ஒளிரும் ஆத்மாவோ எனில் பரமேஸ்வரா, முக்கண்ணா, அது நீயே.   இதை நான் கற்றும் கேட்டும், என் ஸ்வய அனுபவத் தாலும்  நிச்சயமாக  முடிவாக  அறிந்து கொண்டேன்'' என்கிறார் ஆதி சங்கரர்.

மனீஷா பஞ்சகத்தின்  மூலம்   ஆதி சங்கரர்  உபதேசிப்பதில்  இப்போது எல்லோரும் உணரவேண்டிய உண்மை  புரிகிறதா ? நிறைய பேருக்கு எடுத்து சொல்லுங்கள். வித்யாசம்  தேவையற்றது.
 சாதிகள் இல்லையடி பாப்பா  என்று பாரதி  பாடியதும் கொஞ்சம் புரியும் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...