Monday, October 11, 2021

SRIMAN NARAYANEEYAM



 ஸ்ரீமந்  நாராயணீயம் -  நங்கநல்லூர்  J K  SIVAN

73வது தசகம்

73.  கண்ணன் போகின்றான்....

 எது   கனவிலும் நிகழக்கூடாது என்று  கோபியர்கள்  எண்ணினார்களோ அது ஒருநாள் நடந்துவிட்டது. ஆமாம்,   அக்ரூரர்  பிருந்தாவனம், கோகுலம் வந்தது முதல்  கிருஷ்ணனை  மதுராபுரிக்கு  அழைத்துச் செல்லப்போகிறார் என்ற சேதி ஊரெங்கும் பரவி  பேரிடியாக  கோப கோபியர்களைத் தாக்கியது.  

நம் ஊரை விட்டே நாம் வணங்கும் தெய்வம் போய்விட்டால்  நமக்கு எப்படி இருக்கும்?  ஆகவே,  தாங்கமுடியாத சோகம் அவர்களை கெட்டியாக பிடித்துக் கொண்டது.  ஆனந்தத்தின் அடையாளமாக இருந்த பிரிந்தாவனமா இப்படி சோகத்தின் உருவமாக ஒரு கணத்தில் மாறிவிட்டது?

निशमय्य तवाथ यानवार्तां भृशमार्ता: पशुपालबालिकास्ता: ।
किमिदं किमिदं कथं न्वितीमा: समवेता: परिदेवितान्यकुर्वन् ॥१॥

nishamayya tavaatha yaanavaartaaM bhR^ishamaartaaH pashupaalabaalikaastaaH |
kimidaM kimidaM kathaM nvitiimaaH samavetaaH paridevitaanyakurvan || 1

நிஶமய்ய தவாத² யானவார்தாம்
ப்⁴ருஶமார்தா꞉ பஶுபாலபா³லிகாஸ்தா꞉ |
கிமித³ம் கிமித³ம் கத²ன்ன்விதீமா꞉
ஸமவேதா꞉ பரிதே³விதான்யகுர்வன் || 73-1 ||

கிருஷ்ணா,  ஆமாம் நான் சொல்வது சரியே. நீ  மதுராபுரிக்கு போகப்போகிறாய் . உன்னை அழைத்துப் போகவே  இந்த அக்ரூரர்  தேர் பூட்டிக்கொண்டு வந்திருக்கிறார் என்று அறிந்ததும்  கோபியர்கள்  அனுபவித்த துக்கம் எல்லையில்லாதது.  எல்லோரும் ஒன்று கூடி கிராமத்தில் தலைமேல் கை வைத்து உட்கார்ந்து கொண்டார்கள். இவ்வளவு பேரிடியை அந்த குட்டி  தலை தாங்குமா?   என்ன இது?  ஏன் இப்படி நடக்கிறது? எதற்காக கண்ணன் போகவேண்டும்?  யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்!''

करुणानिधिरेष नन्दसूनु: कथमस्मान् विसृजेदनन्यनाथा: ।
बत न: किमु दैवमेवमासीदिति तास्त्वद्गतमानसा विलेपु: ॥२॥

karuNaa nidhireSha nandasuunuH kathamasmaan visR^ijedananyanaathaaH |
bata naH kimu daivameva maasiit ititaastvadgata maanasaa vilepuH || 2

கருணானிதி⁴ரேஷ நந்த³ஸூனு꞉
கத²மஸ்மான்விஸ்ருஜேத³னந்யனாதா²꞉ |
ப³த ந꞉ கிமு தை³வமேவமாஸீ-
தி³தி தாஸ்த்வத்³க³தமானஸா விலேபு꞉ || 73-2 ||

கோபியர்கள் அலறினார்கள்.  கருணா மூர்த்தியான  நந்தகோபன் மகன் இப்படி  நிர்த்தாக்ஷண்யமாக கொஞ்சமும் நம் மீது இரக்கமில்லாமல் நம்மை விட்டு  ஏன் செல்ல துணிந்தான். நமக்கு இனி யார் துணை?  பகவானே இப்படி நடந்துகொண்டால் நம் கதி என்ன?' பிரிந்தாவனமே சோபை இழந்து இருண்டு விடுமே. முழு நிலவை இப்படியா பறித்துக்கொண்டு போவது?

चरमप्रहरे प्रतिष्ठमान: सह पित्रा निजमित्रमण्डलैश्च ।
परितापभरं नितम्बिनीनां शमयिष्यन् व्यमुच: सखायमेकम् ॥३॥

charama prahare pratiShThamaanaH saha pitraa nijamitramaNDalaishcha |
paritaapabharaM nitambiniinaaM shamayiShyan vyamuchaH sakhaayamekam || 3

சரமப்ரஹரே ப்ரதிஷ்ட²மான꞉
ஸஹ பித்ரா நிஜமித்ரமண்ட³லைஶ்ச |
பரிதாபப⁴ரம் நிதம்பி³னீனாம்
ஶமயிஷ்யன் வ்யமுச꞉ ஸகா²யமேகம் || 73-3 ||

கிருஷ்ணா, நேரம் வந்து விட்டது. நீ வந்தது பிருந்தாவனத்தில் விளையாட அல்ல என்ற ஞாபகம் வந்தது. கடமைக்கு முன் கேளிக்கைக்கு இடமில்லை.  இரவில் பிருந்தாவனத்தை விட்டு புறப்பட திட்டமிட்டாய்.  உன் பெற்றோர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே  விழித்துக் கொண்டிருந்த நேரம் அது.   அவர்களே  துயரத்தில் உடைந்து போய்  விட்டார்களே . நிற்கக்கூட முடியவில்லை அவர்களால்.  யாரால் இந்த  பிரிவைத் தாங்கி கொள்ள முடியும். அவர்களுக்கு ஆறுதல் கூற   ஓரிரு  திட மனது கொஞ்சம்   கொண்டவர்களை நியமித்து  ஒருவாறு  நிலைமையை புரிந்து கொண்டு  அமைதியாக இருக்கச்  சொல்ல வைத்தாய்.  அவர்களால்  கோபியர்களை துயரத்தில் இருந்து மீளச் செய்வது சாத்தியமல்ல என்று உனக்கே தெரியும்.  சில விஷயங்களை காலம் மட்டுமே  தீர்த்து வைக்கும் என்று உனக்கா  தெரியாது!

अचिरादुपयामि सन्निधिं वो भविता साधु मयैव सङ्गमश्री: ।
अमृताम्बुनिधौ निमज्जयिष्ये द्रुतमित्याश्वसिता वधूरकार्षी: ॥४॥

achiraadupayaami sannidhiM vO bhavitaa saadhu mayaiva sangamashriiH |
amR^itaambunidhau nimajjayiShye drutamityaashvasitaa vadhuurakaarShiiH || 4

அசிராது³பயாமி ஸன்னிதி⁴ம் வோ
ப⁴விதா ஸாது⁴ மயைவ ஸங்க³மஶ்ரீ꞉ |
அம்ருதாம்பு³னிதௌ⁴ நிமஜ்ஜயிஷ்யே
த்³ருதமித்யாஶ்வஸிதா வதூ⁴ரகார்ஷீ꞉ || 73-4 ||

வாதபுரீசா,  நீ அவர்களுக்கு அனுப்பிய ஒரே ஒரு சின்ன  செய்தி இதுதான்: ''எல்லோரும் எப்போதும் போல் சந்தோஷமாக இருங்கள். நான் சீக்கிரமே வந்து உங்களை சந்திப்பேன். மீண்டும் ஆனந்தத்தில் மூழ்குவோம்''

सविषादभरं सयाच्ञमुच्चै: अतिदूरं वनिताभिरीक्ष्यमाण: ।
मृदु तद्दिशि पातयन्नपाङ्गान् सबलोऽक्रूररथेन निर्गतोऽभू: ॥५॥

saviShaadabharaM sayaach~namuchchaiH atiduuraM vanitaabhiriikshyamaaNaH |
mR^idu taddishi paatayannapaangaan sabalO(a)kruurarathena nirgatO(a)bhuuH || 5

ஸவிஷாத³ப⁴ரம் ஸயாஞ்சமுச்சை-
ரதிதூ³ரம் வனிதாபி⁴ரீக்ஷ்யமாண꞉ |
ம்ருது³ தத்³தி³ஶி பாதயன்னபாங்கா³ன்
ஸப³லோ(அ)க்ரூரரதே²ன நிர்க³தோ(அ)பூ⁴꞉ || 73-5 ||

இதோ தேர்  கிளம்ப போகிறது. அதற்குள் விஷயம் அறிந்து ஊரே திறந்துவிட்டது.  எவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று இரவில் கிளம்பினாலும் எப்படியோ கோப கோபியர்கள் அறிந்து கொள்கிறார்களே.  அனைவர் கண்ணிலும் கண்ணீர். கண்களில் ஏக்கம் சோகம், வாடிய முகங்கள், செய்வதறியாது திகைக்கும் நெஞ்சங்கள். அக்ரூரர் ஏறிக்கொண்டார், பலராமனும் ஏறிக்கொண்டான், நீ தயங்கி தயங்கி கடைசியாக தேரில்  ஏறிக்கொண்டாய்.  அழுது கொண்டே ''கிருஷ்ணா போகாதே போகாதே , எங்களை விட்டு போகாதே'' என்று அலறும் குரல்கள், கையால் ஜாடைக்கட்டி   ''நில்  போகாதே, வா ''என்று அரற்றும்  பெண்கள். 

 நீ பேசவில்லை, உன் கண்கள் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது. தேர்  உனக்காகத் தான் நீ ஏற  காத்துக் கொண்டிருந்தது.  உன் பார்வை ஆணியடித்து போல அந்த முகங்களையே  பார்த்துக் கொண்டிருந்தாலும் உன் கால்கள் தேரில் ஏறிவிட்டன.  தேர் கிளம்பியது. உனக்கும் அந்த அழுகை நிறைந்த முகங்களுக்கும்  இடையே இருந்த இடைவெளி  அதிகரிக்க அதிகரிக்க உன்னுள்ளே  இனி நீ ஆற்றவேண்டிய  கடமை உணர்ச்சி முன்வந்து இந்த ஏக்கத்தை பின் தள்ளியது.  தேரைப் பிடித்துக்கொண்டு நீ பிரிந்தானத்தையேதிரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாய்.   

பார்த்தசாரதி, நீ  தேரை ஒட்டி தான் பார்த்திருக்கிறேன், தேரில் பிரயாணம் பண்ணி இதுவரை பார்த்ததில்லை யப்பா. 

अनसा बहुलेन वल्लवानां मनसा चानुगतोऽथ वल्लभानाम् ।
वनमार्तमृगं विषण्णवृक्षं समतीतो यमुनातटीमयासी: ॥६॥

anasaa bahulena vallavaanaaM manasaa chaanugatO(a)tha vallabhaanaam |
vanamaartamR^igaM viShaNNavR^ikshaM samatiitO yamunaataTiimayaasiiH || 6

அனஸா ப³ஹுலேன வல்லவானாம்
மனஸா சனுக³தோ(அ)த² வல்லபா⁴னாம் |
வனமார்தம்ருக³ம் விஷண்ணவ்ருக்ஷம்
ஸமதீதோ யமுனாதடீமயாஸீ꞉ || 73-6 ||

கண்ணா  இதோ உன்னோடு சில  கோபர்கள் தங்கள் வண்டிகளை ஒட்டிக்கொண்டு வருகிறார்கள், காடு எல்லை வரை வந்தவர்கள் நிற்கிறார்கள்,  பிருந்தாவன காடுகள், மரங்கள் பறவைகள், மிருகங்கள் மான்கள் மயில்கள் எல்லாம் சிலைபோல உன்னைப்  பார்த்தவாறு நிற்கின்றன.  மீண்டும் நம் கண்ணனை   நாம்  இங்கே  பெறுவோமா,  அடைவோமா?? என்ற ஏக்கம் அவற்றின் கண்ணில் வழிந்து கருத்தினில்  புகுந்தது.   யமுனை நதிக்கரை அருகே  உன் தேர் வந்துவிட்டது.

नियमाय निमज्य वारिणि त्वामभिवीक्ष्याथ रथेऽपि गान्दिनेय: ।
विवशोऽजनि किं न्विदं विभोस्ते ननु चित्रं त्ववलोकनं समन्तात् ॥७॥
niyamaaya nimajjya vaariNi tvaam abhiviikshyaatha rathe(a)pi gaandineyaH
vivashO(a)jani kinnvidaM vibhOste nanuchitraM tvavalOkanaM samantaat || 7

நியமாய நிமஜ்ய வாரிணி த்வா-
மபி⁴வீக்ஷ்யாத² ரதே²(அ)பி கா³ந்தி³னேய꞉ |
விவஶோ(அ)ஜனி கின்ன்வித³ம் விபோ⁴ஸ்தே
நனு சித்ரம் த்வவலோகனம் ஸமந்தாத் || 73-7 ||

அக்ரூரர்  தேரை நிறுத்தினார், யமுனையில் இறங்கினார்  ஸ்னானம் செய்தார்.  அட,  கண் எதிரே,  அதற்குள் நீ எப்படி  நதிக்கு வந்தாய்? நீரில் பாய்ந்து நீ  நீந்துவதை கண்ணாரக் கண்டு களித்தார்.   யமுனைக்கு போகுமுன்  நீ தேரில் அமர்ந்திருந்ததை பார்த்தார்,  யமுனையில் இறங்கியதும்  அவர் எதிரே நீ நீரில் நீந்துவதை பார்த்தார், இதோ அனுஷ்டானங்களை முடித்து யமுனை நீரில் இருந்து கரையில் உள்ள  தேரைப்  பார்க்கிறார்  நீ  பேசாமல்  தேரில் அமர்ந்திருக்கிறாய், உன் மேல் நீரோ, ஈரமோ  இல்லையே..கிருஷ்ணா  நீ சர்வ வியாபியல்லவா? அவரது ஆச்சர்யத்துக்கு எல்லையே இல்லை.

पुनरेष निमज्य पुण्यशाली पुरुषं त्वां परमं भुजङ्गभोगे ।
अरिकम्बुगदाम्बुजै: स्फुरन्तं सुरसिद्धौघपरीतमालुलोके ॥८॥

punareSha nimajjya puNyashaalii puruShaM tvaaM paramaM bhujangabhOge |
ari kambu gadaambujaiH sphurantaM sura siddhaugha pariitamaalulOke || 8

புனரேஷ நிமஜ்ய புண்யஶாலீ
புருஷம் த்வாம் பரமம் பு⁴ஜங்க³போ⁴கே³ |
அரிகம்பு³க³தா³ம்பு³ஜை꞉ ஸ்பு²ரந்தம்
ஸுரஸித்³தௌ⁴க⁴பரீதமாலுலோகே || 73-8 ||

அந்த பாக்கியவான் அக்ரூரர்  மீண்டும் நீரில் முங்கி எழுந்திருக்கிறார், அவர் எதிரே  நதியின் ஆழமான நடுவில் நீ  ஒரு ஆதிசேஷன் எனும்  நாகத்தின் மேல்  நாக சயனனாக  காட்சி அளிக்கிறாய். ஆஹா, உன் கையில் சங்கம், சக்கரம், கதை, தாமரை எல்லாமே இருக்கிறதே. உன்னைத் சுற்றி  தேவாதி தேவர்கள்  கரம் கூப்பி நிற்கிறார்கள், அடேயப்பா எத்தனை நிரிஷிகள், முனிவர்கள் அவர்களோடு சேர்ந்து.  மூவுலகும்  போற்றும், சகல லோகத்தையும் காக்கும்  நீ....... ''நாராயணா நாராயணா''  என்று அக்ரூரரின்  உதடுகள்  ஜபிக்கிறது.  

स तदा परमात्मसौख्यसिन्धौ विनिमग्न: प्रणुवन् प्रकारभेदै: ।
अविलोक्य पुनश्च हर्षसिन्धोरनुवृत्त्या पुलकावृतो ययौ त्वाम् ॥९॥

sa tadaa paramaatma saukhya sindhau vinimagnaH praNuvan prakaarabhedaiH |
avilOkya punashcha harShasindhOH anuvR^ittyaa pulakaavR^itO yayau tvaam || 9

ஸ ததா³ பரமாத்மஸௌக்²யஸிந்தௌ⁴
வினிமக்³ன꞉ ப்ரணுவன்ப்ரகாரபே⁴தை³꞉ |
அவிலோக்ய புனஶ்ச ஹர்ஷஸிந்தோ⁴-
ரனுவ்ருத்யா புலகாவ்ருதோ யயௌ த்வாம் || 73-9 ||

அக்ரூரர்  தனை   மறந்த நிலையில்  உன்னை வணங்கி கண் மூடி நிற்கிறார்.  சுதாரித்துக்கொண்டு உலக வாழ்க்கைக்கு திரும்புகிறார்,   அனந்த நாராயணனாக நீ தெரியவில்லை, நீ அளித்த ஆனந்தம் இன்னும் இருக்கிறது. இதோ தேரின் அருகே வருகிறார். வாய் ஓயாமல் உன்னை ஸ்தோத்ரம் செயகிறது. உன்னை அருகே பார்த்ததும் தேகம் புல்லரிக்கிறது.  ஆனந்தம் அளவற்று  பெருகுகிறது. தேகம் புளகாங்கிதம் அடைந்து சிலிர்க்கிறது...

किमु शीतलिमा महान् जले यत् पुलकोऽसाविति चोदितेन तेन ।
अतिहर्षनिरुत्तरेण सार्धं रथवासी पवनेश पाहि मां त्वम् ॥१०॥

kimu shiitalimaa mahaan jale yat pulakO(a)saaviti chOditena tena |
atiharSha niruttareNa saardhaM rathavaasii pavanesha paahi maaM tvam ||10

கிமு ஶீதலிமா மஹான் ஜலே ய-
த்புலகோ(அ)ஸாவிதி சோதி³தேன தேன |
அதிஹர்ஷனிருத்தரேண ஸார்த⁴ம்
ரத²வாஸீ பவனேஶ பாஹி மாம் த்வம் || 73-10 ||

''அக்ரூரரே, ஏன் உங்கள் உடம்பு  இப்படி சிலிர்க்கிறது.  யமுனையில் நன்றாக அமிழ்ந்து ஸ்னானம் செய்தீர்களே, யமுனை நீர்   என்ன அவ்வளவு சில்லென்று வெடவெடவென்று உங்களை நடுங்க வைக்கிறதா? ''என்று  கேட்கிறாய்.  சிரித்தாய் கண்ணா. அக்ரூரர்  யமுனையில் மூழ்கிவிட்டு இப்போது  ஆனந்த சாகரத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவர் பதிலா சொல்ல முடியும்?.  ஆனந்தமாக  தலையை ஆட்டினார். கூப்பிய கரங்கள் பிரியவே இல்லை.  தேரில் உன்னை வணங்கி ஏறி அமர்ந்தார் . எண்டே குருவாயூரப்பா,  அக்ரூரரை  மகிழ்வித்த நீ என்னையும் நோய் தீர்த்து வாழவைப்பாய் அப்பனே. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...