Tuesday, October 19, 2021

SRI LALITHA SAHASRANAMAM


 லலிதா ஸஹஸ்ரநாமம்  -  

ஸ்லோகங்கள் 28 - 33  நாமங்கள்: 72-83

भण्डसैन्य वधोद्युक्त शक्ति विक्रमहर्षिता ।
नित्या पराक्रमाटोप निरीक्षण समुत्सुका ॥ 28 ॥

Bhandasainya vadhodyukta shakti vikrama harshita
 Nitya parakra matopa nireekshana samutsaka – 28

பண்டஸைந்ய வதோத் யுக்தசக்தி விக்ரம ஹர்ஷிதா |
நித்யா பராக்ரமாடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகா || 28

भण्डपुत्र वधोद्युक्त बालाविक्रम नन्दिता ।
मन्त्रिण्यम्बा विरचित विषङ्ग वधतोषिता ॥ 29 ॥

Bhanda-putra vadhodyukta balavikrama nandita
 Mantrinyanba virachita vishangavadhatoshita – 29

பண்டபுத்ர - வதோத்யுக்த - பாலா
விக்ரம நந்திதா |மந்த்ரிண்யம்பாவிரசித

விஷங்க வததோஷிதா || 29

विशुक्र प्राणहरण वाराही वीर्यनन्दिता ।
कामेश्वर मुखालोक कल्पित श्री गणेश्वरा ॥ 30 ॥

Vishukra pranaharana varahi viryanandita
Kameshvara mukhaloka kalpita shreganeshvara – 30

விசுக்ர ப்ராணஹரண வாராஹீ வீர்ய நந்திதா |
காமேச்வர முகாலோக - கல்பித ஸ்ரீகணேச்வரா||30

महागणेश निर्भिन्न विघ्नयन्त्र प्रहर्षिता ।
भण्डासुरेन्द्र निर्मुक्त शस्त्र प्रत्यस्त्र वर्षिणी ॥ 31 ॥

Maha-ganesha nirbhinna vighnayantra praharshita
 Bhanda-surendra nirmukta shastra pratyastra varshini – 31

மஹாகணேச நிர்ப்பி ந்நவிக்நயந்த்ர ப்ரஹர்ஷிதா |
பண்டாஸுரேந்த்ர நிர்முக்த சஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணீ || 31

कराङ्गुलि नखोत्पन्न नारायण दशाकृतिः ।
महापाशुपतास्त्राग्नि निर्दग्धासुर सैनिका ॥ 32 ॥

Karanguli nakhotpanna narayana dashakrutih
Mahapashupatastragni nirdagdha surasainika – 32

கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி: |
மஹா பாசுபதாஸ்த்ராக்னி நிர்தக்தாஸுர ஸைநிகா || 32

कामेश्वरास्त्र निर्दग्ध सभण्डासुर शून्यका ।
ब्रह्मोपेन्द्र महेन्द्रादि देवसंस्तुत वैभवा ॥ 33 ॥

Kameshvarastra nirdagda sabhandasura shunyaka
Bramhependra mahendradi devasansdhutavaibhava -33

காமேச்வராஸ்த்ர நிர்தக்த ஸபண்டாஸுர சூந்யகா |
ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸம்ஸ்துதவைபவா || 33

நாமங்கள் 72-83  அர்த்தம்:

* 72 *  भण्डसैन्यवधोद्युक्तशक्तिविक्रमहर्षिता -  பண்டஸைந்ய வதோத் யுக்தசக்தி விக்ரம ஹர்ஷிதா | 
எவராலும் தன்னை வெல்லமுடியாது என்ற   கர்வத்தோடு பண்டாசுரனின் படைகள் அம்பாளின் சக்தி சைன்யத்தோடு மோதி தோற்று பண்டாசுரன் அம்பாளால் கொல்லப்படுகிறான்.  அம்பாள் அசுரனைக் கொன்று  த்ரிப்தியடைகிறாள்.  ஞானம் அஞ்ஞானத்தை வெல்வது இதன் உட்பொருள்.

* 73 * 
  नित्यापराक्रमाटोपनिरीक्षणसमुत्सुका -  நித்யா பராக்ரமாடோப  நிரீக்ஷண ஸமுத்ஸுகா  -  
யுத்தத்தின்  போது  லலிதாம்பிகை,  தன்னுடன் இணைந்து  போரில் ஈடுபட்ட 15 நித்யாதேவிகளின்   (திதிகள்) பராக்க்ரமத்தை கண்டு மகிழ்கிறாள். அவர்களை மெச்சுகிறாள்.

* 74 *
 . भण्डपुत्रवधोद्युक्तबालाविक्रमनन्दिता - பண்டபுத்ர - வதோத்யுக்த - பாலா விக்ரம நந்திதா | லலிதாம்பாளின்  புத்ரி பாலாவுக்கு  ஒன்பது வயது.  பண்டாசுரனுக்கு முப்பது பிள்ளைகள்.   நீ போருக்கு வரவேண்டாம் என்று அம்பாள் சொல்லியும் பாலா  கேட்கவில்லை    பண்டாசுரனின் முப்பது பிள்ளைகளிடம் போரிடுகிறாள். அவர்களைக் கொல்கிறாள் . ஸ்ரீ வித்யா உபாசனையில் முதலில்  பாலா மந்திரம் தான் உபதேசிப்பார்கள். அதில் சித்தி அடைந்தால்  அதீத சக்தியை பக்தன் பெறுகிறான்.  லலிதாம்பிகையின் அங்க தேவதை தான் பாலா.  மந்த்ரிணீ, வாராஹி  உபாங்க தேவிகள். மற்ற சக்தி தேவிகள் அன்னபூரணா, அச்வாரூட  தேவி ஆகியோர் பிரத்யங்க தேவிகள். அங்கம், உபாங்கம், ப்ரத்யங்கம் ஆகியவை ஸ்தூல , சூக்ஷ்ம  சரீரங்களை குறிக்கும்.  

* 75 * 
 मन्त्रिण्यम्बाविरचितविषङ्गवधतोषिता -மந்த்ரிண்யம்பாவிரசிதவிஷங்க வததோஷிதா  -  
 அம்பாளின் உபங்கமான மந்திரிணீ  (சியாமளா)  விஷங்கவதனை சம்ஹாரம் செய்தபோது  லலிதை மெச்சுகிறாள்.  பண்டாசுரனின் சகோதரர்கள்  விஷங்கனும் விசுக்ரனும்.  அவனுடைய புஜத்திலிருந்து தோன்றியவர்கள்.  விஷங்கன் என்றால் அங்கத்தில் விஷம் நிறைந்தவன் என்று  அர்த்தம்.  நமது தேகத்தில் வளரும் ஆசை என்னும் விஷங்களை தீர்ப்பவன் அம்பாள் என்று உள்  அர்த்தம்.நாம்  ஆசைகளை விரும்பி ஏற்றுக்கொள்பவர்கள் ஆகையால் நாம் அனைவருமே விஷங்கள் தான். ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் என்று திருமூலர் சொல்வதை அடிக்கடி நினைவில் கொண்டு நமது பற்றுக்களை  அறுத்துக் கொள்ளவேண்டும்.

* 76 * 
 विशुक्रप्राणहरणवाराहीवीर्यनन्दिता -விசுக்ர ப்ராணஹரண வாராஹீ வீர்ய நந்திதா |   
பண்டாசுரனின் இன்னொரு அசுரத் தம்பி  விசுக்ரனை  வாராஹி தேவி  கொல்கிறாள்.   வாராஹியின் வீரத்தை லலிதாம்பாள்  மெச்சுகிறாள்.  மூன்று அசுரர்களும்  நமது ஆணவ,கர்மா, மாயா  மலங்களை குறிப்பிடுகிறது.  அம்பாளின் அருளால் அவை அழிகிறது.  மந்த்ரிணீ என்பதே  அம்பாளின்  பஞ்சதசி  ஷோடசி மந்திரங்களை குறிக்கிறது என்று ஒரு கருத்து. பாலா, வாராஹி, மந்திரிணீ என்ற மூன்று  உபாங்க தேவிகளில் அதிக சக்தி வாய்ந்தவள் வாராஹி.

* 77 * 
 कामेश्वरमुखालोककल्पितश्रीगणेश्वरा  காமேச்வர முகாலோக - கல்பித ஸ்ரீகணேச்வரா --  
லலிதாம்பாள் காமேஸ்வரனை  பார்த்தவுடன் அவதரித்தவர் கணேஸ்வரன் என்று கூறுவதுண்டு.   சிவ பார்வதி தம்பதிகளுக்கு  மூத்த புத்ரன்  கணேசன். விக்னங்களை விளக்கும் விநாயகர். விக்னேஸ்வரர்.

* 78 *  महागणेशनिर्भिन्नविघ्नयन्त्रप्रहर्षिता - மஹாகணேச நிர்ப்பி ந்நவிக்நயந்த்ர ப்ரஹர்ஷிதா |  
கணேசனுடைய சிறப்பு என்னவென்றால்  பண்டாசுரன் அம்பாளின் சைன்யத்துக்கு  விதித்த தடைகளை, விக்ன  யந்திரத்தை முறித்தவர் .  இந்த விக்ன யந்திரத்தை ஸ்ரிஷ்டித்தவன் விசுகன்.  அதாவது  எந்த காரியத்திலும் சங்கல்பத்திலும்  தடங்கல்,  குறைபாடுகளை  உண்டாக்கும் யந்திரங்கள் அவை.    அவற்றை பலனளிக்காமல் செயது காரிய  சித்தி உண்டாக்குபவர்  விக்ன  ஈஸ்வரர். விக்னேஸ்வரர். விநாயகர்.  அம்பாளுக்கு  அதனால் தான் கணேசனை பிடிக்கும்.  சிவகணங்களுக்கு தலைவன் கணேசன். கண  நாதன்.

* 79 * 
 भण्डासुरेन्द्रनिर्मुक्तशस्त्रप्रत्यस्त्रवर्षिणी -  பண்டாஸுரேந்த்ர நிர்முக்த  சஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணீ   -   
 பண்டாசுரனின் அஸ்திரங்களை தடுத்து அவற்றை உடைக்கும் பயனற்றுப்போக செய்யும் அஸ்திரங்களை பிரயோகித்தாள் லலிதாம்பிகை. மற்ற அஸ்த்ரங்களால் அவனைத் துளைத்து,  துன்புறுத்தி  வென்றாள் ,கொன்றாள் .

* 80 * 
 कराङ्गुलिनखोत्पन्ननारायणदशाकृतिः -கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி: | 
அம்பாளின் விரல் நகங்களின் முனையினால்  விஷ்ணுவின் தசாவதாரங்களை நிர்ணயித்தவள்.  சர்வ அசுர  அஸ்திரத்தால் அசுரர்களை அழியச்செய்தவள் அம்பாள்.   இந்த ஸ்லோகத்தை  அம்பாள்  மனிதனின்  ஐந்து நிலைகளையும், பிரம்மத்தின் ஐந்து காரியங்களையும் உண்டாக்கியவள்  என்பதை தசாவதாரம் என்று சூசகமாக உணர்த்துவதாக சொல்வார்கள்.

* 81 * 
 महापाशुपतास्त्राग्निनिर्दग्धासुरसैनिका -   ஹா பாசுபதாஸ்த்ராக்னி நிர்தக்தாஸுர ஸைநிகா- - 
மந்த்ர உச்சாடனத்துடன் வீசப்படும் அஸ்திரங்கள்  இப்போதுள்ள  அணு குண்டைவிட ATOM  BOMB  ஐ விட  அதிக அழிவு சக்தி வாய்ந்தவை. அதுவும் அம்பாள் பிரத்யேகமாக  அபரிமித சக்தியுடன்  பண்டாசுரனை வதம் செய்யும் போது  அவளிடமிருந்து சென்ற அஸ்திரங்கள்  எதிரியின்  சைன்யத்தை முழுதுமாக  அக்னி  ஜ்வாலையோடு கபளீகரம் செய்துவிட்டது.  அவள் விடுத்த அஸ்திரம்  மஹா பாசுபதாஸ்திரம்.   பாசுபதாஸ்திர மந்த்ரம்  ஓம்  நமசிவாய:  இந்த பஞ்சாக்ஷரத் துக்கு எவ்வளவு சக்தி பலம்  என்று இப்போது புரிகிறதா?.  அடிக்கடி நாம் ''ஓம் நமசிவாய''என்று ஜபிக்க வேண்டியதன் முக்யத்வம் புரியும். இன்று முதலாவது ஒருநாளைக்கு பத்தாவது சொல்ல ஆரம்பிப்போம்.

*82* 
कामेश्वरास्त्रनिर्दग्धसभण्डासुरशून्यका - காமேச்வராஸ்த்ர நிர்தக்த ஸபண்டாஸுர சூந்யகா :  
சூன்யகா  என்பது  பண்டாசுரனின் தலைநகரம்.  காமேஸ்வரன் பெயர் சொல்லி விடுத்த  அஸ்திரம்  பண்டாசுரனை  அவனுடைய தலைநகரத்தோடு சேர்த்து சாம்பலாக்கிவிட்டது.  அம்பாளின்  இந்த நாமா பண்டாஸுர வதத்தை லலிதை  வெற்றிகரமாக முடித்ததை சொல்கிறது.

*83*  
 ब्रह्मोपेन्द्रमहेन्द्रादिदेवसंस्तुतवैभवा - ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி   தேவ ஸம்ஸ்துதவைபவா  ---
 பண்டாசுரனை வதம் செய்த  ஸ்ரீ லலிதாம்பிகையே ப்ரம்ம தேவன் விஷ்ணு  இந்திராதி தேவர்கள்  போற்றுகிறார்கள். மஹா சக்தி என்று வணங்குகிறார்கள்.

இன்னும்  கடலளவு இருக்கிறது அம்பாளின் நாமங்கள்.  மொத்தம்  ஆயிரம். அவற்றில் இதுவரை 83 தான் அறிந்திருக்கிறோம்.  கொஞ்சம் கொஞ்சமாக அறிவோம்.
 
இன்று ஒரு  சக்தி ஆலயம்:  
ஸ்ரீ  ராஜராஜேஸ்வரி ஆலயம் நங்கநல்லூர்

பரமேஸ்வரன்  தவத்தில் திளைப்பவர்.   அவர் தவம் களைய  அவர் மேல் மலரம்புகளை வீசுகிறான் மன்மதன். தவம் கலைந்ததால் சிவன் கோபம் கொண்டு நெற்றிக்கண்ணை திறந்து எதிரே பார்க்கும்போது மன்மதன் தெரிந்து சாம்பலாக எரிந்து போனான்.  கிடந்த சாம்பல் குவியல்களை பொம்மையாய் செய்து விளையாடினார் கணேசன்.
பிள்ளையாருக்கு விளையாட தோழனாய் இருக்கட்டுமே என நினைத்த பார்வதி பொம்மைக்கு உயிர் ஊட்ட நினைத்து சர்வேஸ்வரரை பார்க்க சிவனாரின் கண்பட்டு பொம்மை உயிர்பெற்றது.
சாம்பலில் இருந்து வந்ததால் பண்டாசுரன் என பெயரிட்டார் ஈசன்.
இவ்வுலகத்தை ஆட்சி செய்யும் ஈசனை நினைத்து கடும் தவம் செய்தால் வேண்டுவது அனைத்தும் கிடைக்கும் என விநாயகர் மூலம் அறிந்த  பண்டாசுரன்  பாதாள லோக ராஜாவாகிறான். 
ஆணவம்  ஆக்கிரமிக்க, மூவுலகையும் வெல்ல உத்திரகுரு என்னுமிடத்தில் தேவர்களை எதிர்த்தான்..
போர் வலுத்து  கைலாசம் வரை சென்று வென்றுவிட்டான் பண்டாசுரன்.  அவனை வெல்ல   ராஜ 
ராஜேஸ்வரி என்று துதிக்கப்படும் திரிபுராதேவியை ஆராதியுங்கள்  என  ரிஷி  ஆங்கிரஸர் கூற,
மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்றுகூடி ராஜராஜேஸ்வரியின் அருள் வேண்டி தாந்த்ரீக முறைப்படி மகாயாகம் செய்ய  யாகத்தின் பலனாக  யாகத்தீயிலிருந்து பேரொளியோடு ராஜராஜேஸ்வரி தோன்றினாள். பண்டாசுரன் மேல் போர் தொடுத்து அவனை அழித்தாள்.

சென்னையில் எங்கள் பகுதி  நங்கநல்லூரில்   மாதா ராஜராஜேஸ்வரிக்கு ஒரு  அழகான  கோயில் உள்ளது. 1965-70களில்  இந்த  ஆலயம் எழுந்தது.   ஸ்ரீவித்யா உபாசகர்  ராஜகோபால சுவாமிகள்  வீட்டில் யாகசாலை அமைத்து மகாஷோடஸி மந்திரத்தால் செய்த ஹோமத்தின் நிறைவாக பூர்ணாஹுதி முடிந்தபோது, தகதகவென்று தீயிலிருந்து தோன்றியவள்.தாம்பாளத் தட்டில் அவளை  கையில் ஏந்தி காஞ்சி மகா பெரியவரிடம் கொண்டு செல்ல ‘இவள்  ராஜராஜேஸ்வரியே! இத்துடன் உருவான மணிகள் சித்துகள்’’ என்று  மஹா பெரியவா  கூறினார்.  ஒரு ஆஸ்ரமம்  அமைத்து ராஜராஜேஸ்வரிக்கு கோயில் கட்டினார். அம்பாளின் அர்ச்சனைக்கு கோயிலிலேயே விற்கப்படும் கற்கண்டு மட்டுமே நைவேத்யம். மஹா  கணபதி, துர்க்கை. தன்வந்திரி பகவானும்  அருள்பாலிக் கின்றனர்.  கொடிமரம்.  பலிபீடம், சிம்மம். பதினாறு படிகள். பதினாறு படிகள் திதி களை குறிக்கிறது.  
முதல் படியில் சுக்ல பிரதமையென்றும், கிருஷ்ண பஞ்சதசியென்றும் குறிப்பு உள்ளது.
அந்த திதியின் தேவதையாக கொலுவிருக்கும் காமேஸ்வரி நித்யா தேவி பற்றி அகத்திய மாமுனிவரின்  ஸ்லோகம் சுவரில் காணலாம். இந்த நித்யா தேவியின் யந்திரங்களும் திரு வுருவும் படியின்  இருபுறங்களிலும் சுவரில்  காணலாம். தினமும் இந்த யந்திரங்களுக்கும் திருவுருவங் களுக்கும் முறைப்படியான பூஜையும் நைவேத்யமும் உண்டு. இதுபோல் 16படிகளுக்கும் அதனதன் மஹிமையை அறியலாம்.16வது படியில் அன்னை ராஜராஜேஸ்வரி மரகத பச்சை நிறத்தில் அழகாய் காட்சி தருகிறாள். அருகில் இருக்கும் உற்சவ விக்ரகம்தான் யாகத்தீயில் உருவானது. இங்கே பல மகான்களால் பூஜிக்கப்பட்ட 43 சக்தி தேவதைகளின் யந்திரங்களும் யாகத்தில் தோன்றிய சித்தி மணிகளையும் சுரைக்காய் சுவாமியின் கைத்தடியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
சந்நதியின் இரு புறங்களிலும் வாராஹியும் மாதங்கியும் சந்நிதிகள். 
 பழவந்தாங்கல் ரயில் நிலையம் மிக அருகில் உள்ளது நங்கநல்லூர் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...