Saturday, May 2, 2020

THIRUMAZHISAI AZHWAR



சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது J K SIVAN

மனிதர்கள் நாம் ஒருவர் சொன்னதை செய்வோம். மிருகங்களை பறவைகளை பழக்கினால் நாம் சொன்னதை அவை செய்யும். பகவான் நாம் சொன்னதை செயகிறார் என்றால் அது பக்தனின் பரிபூர்ண பக்தியை மெச்சி மட்டுமே முடியும். எல்லோராலும் இது முடியாது.
“சொன்னவண்ணம் செய்த பெருமாள்” என்​று காஞ்சீபுரத்தில் ஒரு​ விஷ்ணு ​ஆலயம் உள்ளது. மூலவர் பெயர் . “யதோக்தகாரி” என்று ஸம்ஸ்க்ருதத்தில் சொல்வார்கள். ‘யதோக்த’ – ‘யதா உக்த’: ‘சொன்னபடி’, ‘சொன்னவண்ணம்’; ‘காரி’ – செய்பவர். யார் சொன்னபடி பெருமாள் செய்தார்? ​ ஒரு ஆழ்வார் தன் சிஷ்யன் ஊரைவிட்டுப் போகிறானா, அப்போது பெருமாளும் அவன் பின்னே துரத்திக்கொண்டு ஓடவேண்டும்; அப்புறம் அவன் ஊருக்கே திரும்பி வருகிறானா, அப்போதும் அவன் பின்னேயே துரத்திக்கொண்டு வந்துவிடவேண்டும் என்று பகவானுக்கே ஆர்டர் போட்டார்! அவர் சொன்னபடியெல்லாம் பகவானும் பண்ணினான்.​ அதனால் தான் ​ யதோக்தகாரி என்று பெயர் வாங்கினான். அந்த குரு யார்? சிஷ்யப்பிள்ளை யார்? ஏன் இப்படி (குரு) ஆர்டர் போட்டார்?​ இதை அறிந்து கொள்ள நான் சொல்லும் கதையை கேட்கவேண்டும்.​ ​ சென்னையிலிருந்து சற்றே தூரத்தில் ஒரு ஊர் பூந்தமல்லி​. அதன் இயற் பெயர் ​ பூவிருந்த வல்லி ஹமில்டன் வாராவதி அம்பட்டன் வாராவதி (ஒரு சிலர் இதை மறுபடியும் ஆங்கிலத்தில் ''Barber's bridge என மொழி பெயர்ப்பு வேறு!!) ஆனது போல், பூவிருந்த வல்லி பழைய அழகிய செடி கொடி மலிந்து கம்மென்ற மணமிழந்து தனது ​ பே​ரையும் அடையாளம் இழந்து விட்டது. இதன் அருகே மற்றொரு அருமையான புனித கிராமம் திருமழிசை.
​ ​பன்னிரு ​ஆழ்வார்களில் திருமழிசையாழ்வார் ஒருவர். ​ ​பூந்தமல்லிக்குக் கிட்டே இருக்கும் திருமழிசை​ கிராமத்தில் பிறந்தவர். அப்போதெல்லாம் மரியாதைக்கு பெரியவர்களின் பேரை சொல்லமாட்டார்கள். ஊர்க்காரர் என்று அவர் ஊரோடு அடையாளம் காட்டுவார்கள். சிலர் புரிந்த காரியத்தை வைத்து, அல்லது அவர்களுடைய மஹிமையைக் குறிப்பிடுகிறமாதிரி இன்னொரு பெயரைச் சொல்வார்கள்.​ உதாரணமாக ​ பெரியாழ்வார் – பெரிய ஆழ்வார், நம்மாழ்வார் – நம்முடைய, அதாவது நமக்கு ரொம்ப ஸொந்தமான ஆழ்வார்​ -- இப்படி தான் காரணப் பெய​ராக இருந்து அதுவே ப்ரஸித்தி பெற்று, அம்மா அப்பா வைத்த பெயர் மறந்து, மறைந்து போய்விடுவதுமுண்டு. ​
​திருமழிசையாழ்வாருக்கு பக்திஸாரர் என்று ஸம்ஸ்க்ருதப் பேர்​. பெருமாளிடம் அதிக பக்தி கொண்டவர் என்பதால் கூட இருக்கலாம். ''மழிசை​'' ​ என்ப​து ‘மஹீஸாரம்’ பூமிக்கே ஸாரமான ஊர் அது என்று அர்த்தம். மஹீஸார​ம் காலப்போக்கில் மழிசையாக மழிக்கப்பட்டிருக்கிறது. ​திருமழிசையிலிருந்து ​காஞ்சீபுரத்துக்கு வந்து வாஸம் பண்ணி​ய போது , அருகில் ஓ\ரு பெருமாள்
கோவிலில் பாசுரம் பாடிக்கொண்டும், உபதேசம் பண்ணிக் கொண்டும் அவ்வப்போது அப்படியே யோக ஸமாதியில் ​ பெருமாளோடு ஒன்றியும் இருந்தார்.
​மஹா பெரியவா திருமழிசை ஆழ்வார் பற்றி என்ன சொல்கிறார்:
முதலாழ்வார்கள் – பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்ற ​மூவரும் மஹாவிஷ்ணுவின் பரம பக்தர்களென்றாலுங்கூட ஸமரஸ மனப்பான்மையோடு சிவனையும் உயர்வாகச் சொல்லிப் பாடினவர்கள்; திருமழிசையாழ்வார்தான் வீர​ ​வைஷ்ணவமாகவே சொல்ல ஆரம்பித்தவர்’ என்று சொல்வதற்கு இடமிருக்கிறது. ​ அவரது ​ திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி ஆகியவற்றில் விஷ்ணுவிடம் பரம பக்தியையும், யோக மார்க்கத்தின் உத்தம ஸ்திதிகளைப் பற்றியும் பார்க்கிறோம். இத்தனை நாழி ஒருவரிடமே அநன்ய பக்தி பண்ணுவது பற்றி சொன்னேனே, அப்படி விஷ்ணு பக்தர்களை ஒரே குறியாக அந்த ஒரு மூர்த்தியிடமே ஈடுபடுத்துகிற நோக்கத்தில்தான் அவர் இதர தெய்வங்களை மட்டம் தட்டினாலும் பரவாயில்லை என்று பண்ணியிருக்கிறாரென்று ஸமாதானம் செய்து கொள்ளலாம். அது இருக்கட்டும். பகவானுக்குப் பாசுரம் ஸேவிப்பது, பாகவதாளுக்கு உபதேசம் செய்வது, அப்படியே யோக நிஷ்டையில் போய் விடுவது என்று அவர் கோவிலிலேயே வாஸம் பண்ணிக் கொண்டிருந்தார். (அது) வரதராஜா கோவிலென்று நினைத்தால் அது தப்பு​''​.
7ம் நூற்றாண்டில் இந்த கிராமம் வெறும் மூங்கில் காடாக இருந்த சமயம். ஒரு நாள் காலம். பார்கவ ரிஷி என்ற ஒரு பக்தர் கனகாங்கி என்னும் தனது பத்னி யோடு மனம் நொந்து அந்த காட்டிற்கு வந்தார்.அவள் கண்ணில் காவேரி .அவர் கையிலோ 12 மாசம் கருவில் இருந்தும் உடல் உறுப்புகள் இன்றி ஒரு உயிரற்ற மாமிச பிண்டமாக ( கிட்டத் தட்ட நாம் இப்போது சொல்கிறோமே ஸ்டில் பார்ன் என்று அதுபோல்)பிறந்த ஒரு சிசு.
''இறைவா இதுவும் உன் திரு விளையாட்டோ? அப்படித்தான் என்றால் உன் எண்ணப்படியே நடக்கட்டும் !! மிகவும் மனமுடைந்து பார்கவ ரிஷி பரமனை வேண்டினார். மேற்கொண்டு சிந்தனை இ​ன்றி ஒரு மூங்கில் புதரில் அந்த அரை குறை​ உயிரை, உடல்​ அசைவு இல்லாத சின்னஞ்சிறு சிசு​வை பெற்றோர்கள் கை வி​ட்டனர். இதயம் வெடித்து சிதற இருவரும் அங்கிருந்து சென்றனர்.
எம்பெருமானின் கருணையை வார்த்தைகளில் ரொப்ப முடியுமா? தனித்து ​ கை ​விடப்பட்ட​ ​"அது" ​அவர்கள் சென்ற சில கணங்களிலேயே பூரண தேஜஸோடு முழு வளர்ச்சியடைந்த குழந்தையாக அழுதது. ​அந்த பக்கமாக அப்போது மூங்கில் காட்டில் உலவிக்கொண்டிருந்த குழந்தைச் செல்வமில்லாத இரு வயதான காட்டுவாசி தம்பதிகளான திருவாளன்​ பங்கயற்செல்வி இருவர் காதி​லும் குழந்தை அழும் ஒலி கேட்டது​. ஆச்சர்யத்தோடு குழந்தையை தேடி கண்டு பிடித்து அந்த ஊர் தெய்வத்தின் அருளாக அவன் நாமத்தையே நன்றியோடு ​''​திருமழிசையான்​'' என்றே​ குழந்தைக்கு ​ பெயரிட்டு​ ​வளர்த்தனர். மிக்க​ ​ஆனந்தத்தோடு அதற்கு பசும்பால் ஊட்டினர். குழந்தையோ ஆகாரமே உட்கொள்ள​ வில்லை.
"ஹே! திருமழிசையானே நீயே அருளவேண்டும், இந்த சிசு பாலுண்ண வேண்டும்'' என அந்த கிழ தம்பதியர் வேண்டியவுடன், குழந்தை சிறிது பால் அருந்தி விட்டு மீதியை அவர்களே குடிக்க வைத்தது. என்ன ஆச்சர்யம்! கிழ வேட தம்பதிகள் இளம் தம்பதிகள் ஆகி அவர்களுக்கு விரைவில் ஒரு குழந்தையும் பிறந்து அவனுக்கு ​ ''​கணிக்கண்ணன்​'' ​ என்று பெயரிட்டு அவன் ​ அண்ணா ​திருமழிசையானுடன் வளர்ந்தான். மழிசையான் முன்னவன் கணிக்கண்ணன் பின்னவன். திருமழிசையான் கல்வி கேள்விகளில் சிறந்தவனாகி பல மதங்களை ஆராய்ந்து பின்னர் சிவபக்த சிரோமணியாக மாறி சிவவாக்யர் ஆனார் என்றும் பேயாழ்வார் அவரை நாராயணனின் மகத்வம் உணர வைத்து வைணவராக மாற்றி திருமழிசைஆழ்வார் என உலகுக்கு அறிமுகம் செய்வித்தார். சிவவாக்யர் பாடல்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ​ சில பாடல்களை மட்டும் உங்களோடு ​ரசிக்கிறேன். எழுத்திலே பல ​''​டன் ​'' அழுத்தம், ​ சுமை​,​ வலிமை​​யை உணரலாம். ​''​ இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லையென்று நின்றதொன்றை இல்லையென்ன லாகுமோ இல்லையல்ல வொன்றுமல்ல இரண்டும் ஒன்றிநின்றதை ​ ​எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே.​''​
​பகவான் இல்லாதது போல் இருக்கிறான். இல்லை என்றால் இல்லாத​​வ​ ​னாவானா? எல்லாமாக இருக்கும் ஒன்று என்றாலும் இல்லவே இல்லை என்றாலும் இரண்டும் அவனே என்று முடிவாக தெரிந்தவர்கள் ஜனனம் மரணம் சுழற்சி முடிந்து இனி​ பிறவாவரம் பெற்றவர் என்கிறார் சிவ வாக்யர்
​''​ தில்லைநாயகன் னவன் திருவரங் கனும் அவன் ​எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன் ​ ​ பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார் வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.​''
அரியும் அரனும் ஒண்ணு.​ ​இந்த புவனமே அவன். எல்லாமு​மே தானான ஒருவன். பல்லும் நாக்கும் புரட்டிப் பேசும் மனிதர்கள் நீங்கள் யாரேனும் அந்த அரியும் அ​ரனும் வேறு என்று பங்கு போட்டு பேசி மகிழ்​ந்​தால் ​நன்றாக ​ஞாபகம் இருக்கட்டும்​: ​ வாய் புழுத்து விடும்​. அப்பாலே ​ அபோல்லோ உங்களை விழுங்க வாய்ப்பு ஏற்படும் என்கிறார்​ சிவ வாக்கியர். ​திருமழிசை ​ஆழ்வார் கூடவே இருக்கும் தம்பி கணிக்கண்ணன் ஆழ்வாரின் பிரதம சிஷ்யனானான்.
​ஒருநாள் அந்த ஊர் ராஜா அந்த கோவிலுக்கு வந்தான். பெருமாளை வழிபடும்போது கணிக் கண்ணனின் அழகு தமிழில் செவிக் கினிய பாசுர மியற்றும் பாங்கில் மயங்கி ராஜா தன் மீது பாடல் இயற்ற உத்தரவிட்டதும், கணிக் கண்ணன் ​ ​"இறைவன் மீதன்றி மற்றவர் மேல் புகழாரம் அல்ல" என மறுத்ததும்,​ ராஜா கோபம் கொண்டு கணிக்கண்ணனை மறு நாள் காலைக்குள் (அந்த கால ராஜாக்கள் தலையை வெட்ட ரொம்ப நேரம் அவகாசம் கொடுக்க மாட்டார்கள்) ஊரை விட்டே போகச் சொன்னதும், கணிக்​ ​கண்ணன் தன் குரு​வான திருமழிசை ஆழ்வாரிடம் "​குருநாதா, நான் உங்கள் நிழல்,எவ்வாறு உங்களை விட்டு பிரிந்து செல்ல முடியும் என்றதும், ஆழ்வார் அமைதியாக பெருமாளை நோக்கி, "ஹே!! நாக சயனா, கணிக்கண்ணன் போகின்றான்,நானின்றி அவனில்லை எனவே நானும் போகிறேன், நீயின்றி நானில்லை எனவே நீயும் சட்டு புட்டு என்று உன்னுடைய இந்த ​ ஆதிசேஷன் எனும் ​நாக படுக்கையை சுருட்டி கொண்டு ஐந்தே நிமிஷத்தில் கிளம்பு​. ​ மூவரும்​ இந்த ஊரை விட்டே ​ செல்லலாம்" என்று ஆர்டர் போட்டார்! ​ அவ்வாறே பெருமாள் செய்தார். ​மூவரும் காஞ்சியை விட்டு அகன்றனர். ஊரே அஸ்தமித்து விட்டது. மண்மாரி ​ பெ​ய்தது. ராஜாவுக்கு விஷயம் தெரிந்து அலறி புடைத்துக்கொண்டு ஓடி​வந்தான். ஊருக்கு வெளியே சென்று விட்ட பெருமாள்,ஆழ்வார் கணிக்கண்ணன் காலில் விழுந்தான் அழுது புரண்டான்.
​'பரமாத்மா, நான் ​மா பெரும் தவறிழைத்தேன். ​என்னை மன்னியுங்கள், நான் ​ திருந்தினேன்​''
​ என்று அலறினான். நீங்கள் வராமல் திரும்​ப மாட்டேன்'' என்று கெஞ்சினான்.
​''​கணிக்கண்ணா வா திரும்புவோம்​''​ என்றார். பெருமாளை பார்த்து
"​உனக்கும் தான், ​நீயும் தான், நீ இல்லாமல் நாங்கள் ஏது? சுருட்டிய உன் பாம்பு படுக்கையை மீண்டும் அங்கு வந்து விரித்துக் கொள் "என்றார்​ திருமழிசை ஆழவார். ​ மூவரும்​ ஊர் ​ திரும்பினர்
திரு வெக்கா​, ஏறக்குறைய ஆயிரம் வருட வயதுள்ள ​காஞ்சிபுரத்தில் உள்ள ​ வைஷ்ணவ திவ்ய தேச கோவில். ​ யதோக்தகாரி எனும் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் ஆலயம். ​ வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ஒரு கி.மீ தூரம் தான். விஷ்ணு காஞ்சி பஸ் நிலையத்தி​லிருந்து 2 கி.மீ. எதிரே அஷ்ட புஜம் பெருமாள் கோவில் அசாத்யமாக இருக்கிறது. நான் சென்று மகிழ்ந்தேன். நீங்கள்? . ஒன்று நிச்சயம். காஞ்சிபுரம் சென்றும் இதை தரிசிக்காதவர்கள் மூச்சிருந்தும் பேச்சில்லாதவர்களுக்கு சமம். நின் கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணி செய்து கிடப்பதே என்று இறைவனே மூச்சாக வாழ்​வோர்க்கு இறைவன் சொன்னதையும் ஏன் சொல்லாததையும் செய்வான். இறைவன் பக்தனுக்கு அடிமை என்பதற்கு இந்த கதை ஒன்றே ​சான்று. ஒரு நிமிஷம். இது கட்டுக்கதை அல்ல.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...