Monday, May 25, 2020

CURRENT SITUATION




                                            நாட்டு  நடப்பு 

 வெற்றி வேற்கை  எழுத உட்க்கார்ந்தேன். டெலிபோன் கால். 
''யாரு ?
மார்கபந்து ஸார் .
ஓ  நல்ல இருக்கீங்களா?   எங்கே இருக்கீங்க?
பெங்களூர் லே மாட்டிக்கிட்டு ரெண்டு மாசமா திண்டாடறேன். வீட்டுக்கு அங்கே வரமுடியலே. 
''ரோட்டிலேயா இருக்கீங்க. உங்க பொண்ணு வீட்டில  தானே.  அப்புறம் என்ன புலம்பல்?
 எங்கேயும்  போகமுடியாத ஸார் ?
எதுக்கு போவணும்?''
''இந்த கொரோனா  வந்தாலும் வந்தது எல்லோரையும்  பைத்தியமாக்கிடுச்சி.  வீட்டுப்படி தாண்டி  காலை வெச்சு ரெண்டு மாசமாச்சு.  ஒருத்தர்னா ஒருத்தர்  வரவும் கூடாது. வீட்டிலே எதை பொங்கி போட்டாலும் அது தான். ருசி பார்த்து சாப்பிட்டு மாசம் ரெண்டாச்சு. என்னசார் பண்றது '' 
மார்கபந்து போனில் அழுதார்.
இதோ பாருங்க மார்கபந்து. இதெல்லாம் யாருக்காக செய்றீங்க. யோசிச்சு பாருங்க.  கண்ணுக்கு தெரியாத கிருமி  ஒன்னு சுத்திக்கிட்டு அலையுது எவனை பிடிக்கலாம்னுட்டு.  கடவுள் மாதிரி  எந்த ரூபத்தில் யார் மூலமா எது மூலமா வருதுன்னுட்டு தெரியாது. வந்தாலும் 10-15நாள் கழிச்சு தான் தெரியுமாம். அதுக்குள்ளே நம்ம கிட்டேருந்து நூறு இருநூறு பேருக்கு நாம பரப்பி இருப்போம். இது எல்லாம் வேண்டாமே என்று தான்.
சர்வ ஜாக்கிரதையாக  சுத்த பத்தமா  வாயை மூக்கை மூடி  இருக்கிற இடத்திலேயே கிட  னு விட்டிருக்கு. ஜனங்க தானாகவே உணரமாட்டாங்க என்பதற்காக அரசாங்கம் போலீஸ் எல்லாம் கொஞ்சம் கண்டிப்பா இருக்காங்க. யாருக்காக? அப்படியும்  நாளுக்கு நாள் அதிகமாகிட்டே தானே வருது.  இன்னும் மருந்து கண்டுபிடிச்ச பாடில்லே. வராம இருக்கிறதுக்கு வேணா ஆயிரம்  ஐடியா.

''இன்னும் எத்தனை நாளுக்கு சார்  இப்படி கிடக்கணும் ??

'' மார்கபந்து, வாழ் நாள் பூரா  அரசாங்கம் உங்களை பூட்டி வைக்க முடியாது.  கொஞ்சம் கொஞ்சமா தளர்த்தி விடறாங்க.  உங்களுக்கு  கொரோனா  ன்னா  என்னா  ன்னு  லக்ஷம் தடவை எடுத்து படிச்சு படிச்சு சொல்லியாச்சு.  ஏன் ஒருத்தர் மேலே படக்கூடாது,  கை  கொடுக்க கூடாது, வெளியே  சுத்தக்கூடாது, சாப்பிடக்கூடாது  கைகால் கழுவணும்,  கவசம் போட்டுக்கணும்னு  புரிய வைச்சாச்சு.  நிறைய ஜனங்க இருக்கிற தேசம். நாம் தான்  ஜாக்கிரதையா இது புரிஞ்சுகிட்டு  நம்மை நாமே காப்பாத்திக்கணும்.    இங்கே ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு கிடையாது. ஒண்ணும்  மேலேயும் படாவிட்டால் தான் வாழ்வு.  இத எல்லாரும் தெரிஞ்சுக்கணும். 

'' இப்படியே  நாம  செஞ்சிக்கிட்டு  இருக்கணுமா சார்?'' 

''என்னங்க சார் மார்கபந்து குழந்தை மாதிரி கேக்கறீங்க.  இது எல்லாம் நம்மகிட்டே வராம இருக்க பாதுகாப்பு. வாணாம் நானும் என் குடும்பமும் கஷ்டப்படறோம் னு உங்களை  உடமுடியாது. உங்களோடு போற விஷயம் இல்லே இது. ஊருக்கே  இல்லை  அபாயம்?  அதனாலே எல்லோரும் இன்னும் ரொம்ப நாளைக்கு இப்படியே நடந்தோம் என்றால் மருந்தும் வரும், அதுக்குள்ளே  இந்த கிருமி பரவலும் ஒழியும்.

''இன்னும் எத்தனை நாளு  இப்படி இருக்கணும் னு நினைக்கறீங்க.?'

''நான் என்ன டாக்டரா, அவங்களாலேயே  உங்க கேள்விக்கு பதில் சொல்லமுடியாது.  சனி பகவான் பிடிச்சாலே ஏழரை வருஷம் பொருத்துக்கறோம். கஷ்டப்படறோம்.  எத்தனை நாளுன்னு கேக்கறீங்க?  எத்தனை  மாசம்னு கேளுங்க  ஒரு ஏழு எட்டு மாசம் போதும்னு தோணுது.''

நம்ம பழைய காலத்தவங்களே பாருங்க.  வீடு வாசல் மெழுகி சாணம் தெளித்து. -- அதான்  சாணி தான்  பெஸ்ட்   சானிடைஸர் .   வெளியே போய்வந்தா கால் கை முகம் எல்லாம் கழுவிட்டு. செருப்பை வாசலிலேயே வச்சுட்டு உள்ளே நுழையணும். அன்னன்னிக்கு போட்டுக்கிட்ட துணியை யார் மேலேயும் படமா நினைக்கணும். மடி ன்னு பேர் வச்சு இதெல்லாம் பண்ணாங்க.  

மிளகு லவங்கம்  நெல்லி இதெல்லாம் ரொம்ப உபயோகிக்கணும்.   பழைய  ஆகாரம் எல்லாம் மீறாம குறைச்சு வடிச்சு, சமையல் பண்ணி பழசை  குறைக்கணும்.   பிரிட்ஜெலே வைச்சு  போன மாச சாம்பார்  எல்லாம் வேண்டாம். உணவை வீணடிக்க கூடாது. அப்பப்போ தேவைக்கேற்ப செயதுக்கணும்.   வெளியே விற்பதை உபயோகிக்காமல்,   பொது இடங்களுக்கு கும்பலா இருக்கிற இடம் போகவேண்டாம்.   பாத்திரங்கள் கனமா இருந்தால் கிருமி தங்காது.  அந்த  காலத்திலேயே வெண்கலப்பானை,  குண்டான் , பித்தளை பாத்திரம் உபயோகிச்சாங்க. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் லே கப்பு ன்னு  கிருமி ஒட்டிக்குமாம்.
பால் தயத்திற் மோர், வெண்ணை, நெய் கூடவே சேர்த்துக்கணும்.   ருசி பார்த்து வெளியே விக்கிற  மிளகா பஜ்ஜி, போண்டா பக்கோடா, பிட்ஸா  எல்லாத்துக்கு  பை பை  சொல்லுங்க.

சார்  நீங்க சொல்றதை யோசித்து பார்த்தால் சரின்னு தோணுது.
மார்க்க பந்து,  இது உங்க வாழ்க்கை, உங்க  உயிர்.  அதை நீங்க தான் பாதுகாக்கணும். 

  6. வைசியர்க்கு அழகு வளர்பொருள் ஈட்டல் - குன்றாத செல்வத்தை சேர்ப்பதே வைச்யர்க்கு அழகு6. வைசியர்க்கு அழகு வளர்பொருள் ஈட்டல் - குன்றாத செல்வத்தை சேர்ப்பதே வைச்யர்க்கு அழகு
அதிவீரராமா,  இப்போது வைசியர்கள் மட்டுமே  வியாபாரம் செய்து பொருள் ஈடுபவர்கள் இல்லை. காலம் மாறிவிட்டதால் எல்லோருமே வியாபாரிகள் தான்.   அசல் முதலீடு பலருக்கு  ஏமாற்றுவது . உனக்கு பாவம் இதெல்லாம் தெரியாது. போய்  பழையது சாப்பிடு.

7. உழவர்க்கு அழகு  ஏர்   உழுது ஊண் விரும்பல் - விவசாயம் செய்து உண்பதே உழவர்க்கு அழகுல்  உழவர்கள் இப்போது விவரமானவர்கள். விவசாயம் இளைத்து போய் விட்டது. விலை நிலங்கள் வீட்டுமனையாகும் நிலை பரிதாபமாக இருக்கிறது. ஒரு நாட்டில் விவசாயத்தை தொழிலாக தேர்ந்தெடுத்த மக்கள், விவசாயிகள், உழவர் என்று எடுத்துக் கொள்வோம், அவர்களுக்கு எது அழகு என்றால் நன்றாக பயிரிட்டு, நல்ல பயிர்களை விளைத்து உணவு தயாரித்து அந்த சுவையான உணவை உற்றார் மற்றோருடன் சேர்ந்து ரசித்து ருசித்து சாப்பிடுவது. இந்தியா  ஒரு விவசாய நாடு என்று போற்றப்பட்ட காலம் மலையேறி விட்டது.  இப்படிச் சொன்னால்  இப்போது உணவு கிடைக்காது அடி  கிடைக்க நிறைய வாய்ப்பு உண்டு அதிவீர ராம பாண்டியா. உன் காலம் வேறு நாங்கள் வாழும் காலம் வேறு. உணவுப்பண்டங்களிலே கலப்படம் செய்து ஒன்றுக்கு மூன்று மடங்கு விலை வைத்து விற்பதைத்தான் நாம் வாங்கி உண்ணவேண்டும். இதில் ஓசியில் வேறு சாப்பாடு போட எவருக்கு மனசு உண்டு?

''
8. மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல் - வரப்போவதை முன்கூட்டியே ஆராய்ந்து உரைப்பதே மந்திரிக்கு அழகு

அ .வீ.ரா.பாண்டியா, உன் எழுத்தில்  சொற்பிழை இருக்கிறது.   வரப்போவதை அறிந்து அல்ல.  எங்கிருந்து யாரிடமிருந்து என்ன பொருள், எவ்வளவு எப்போது வரும் என்று உணர்ந்து   வரும்படியை பெற்று,   கரெக்ட்டாக ''மாட்டாமல் '' வீட்டில், சாக்கடையில், பள்ளியில், கல்லூரியில் மோட்டார் ஷெட்டில் ஒளித்து வைப்பது

9. தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை - அஞ்சாமையும், வீரமுமே தளபதிக்கு அழகு.
எந்த தளபதியை சொல்கிறாய் நீ?  வடக்கே  வடகிழக்கே, வடமேற்கே, தளபதிகள் நீ சொல்கிறபடி எங்களது  புண்யம் ஆண்மையோடு, அஞ்சாமையுடன்  போராடி நாட்டின் எல்லையை பாதுகாக்கிறார்கள்.
உயிரை திரணமாக மதிக்கும் தைர்யம், ஆண்மை இதெல்லாம் தான். இப்போது பெண் கூட சேனைக்கு அதிபதியாக இருக்க முடியும். நீ சொல்வதெல்லாம்  இப்போது அவ்வளவாக பொறுந்தாது மன்னா.


10. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் - விருந்தினரோடு உண்பதே உணவிற்கு அழகு.

.'' கோபாலா, உனக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு பொடிமாஸ், கத்திரிக்காய் பிட்லை, சேனைக்கிழங்கு சிப்ஸ் டிபன் பாக்சில் வைத்திருக்கிறேன். யாருக்கும் கொடுத்துவிட்டு பேமாளமாக பட்டினி கிடக்காதே நீ மட்டுமே சாப்பிடு '' என்று பள்ளிக்கு செல்லும் சிறுவரிடம் சொல்லித்தரும் தாய்கள் நிரம்பி விட்டார்கள். உணவை சமைப்பதற்கு அழகே அதை ருசியாக நிறைய பண்ணி எல்லோருடனும் சேர்ந்து பகிர்ந்து உண்ணுதல் என்கிறாயே பாண்டியா.  இனி  உன்னை படிக்காமல் இருந்து விடட்டுமா?
 
11. பெண்டிற்கு அழகு எதிர் பேசாதிருத்தல் - எதிர்த்துப் பேசாமலிருப்பதே பெண்களுக்கு அழகு
'கணவன் கோபமாக ஏதாவது திட்டினால் கூட அவனுக்கு உபச்சாரம், சிச்ருஷை செயது சிரித்த முகமாக,    எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசாமல் இருப்பது தான் பெண்களுக்கு அழகு என்கிறான் பாண்டியன்.

''பாண்டியா, உனக்கு எத்தனை மனைவி? எல்லோருமே அப்படி தானா ? நீ இங்கே வந்தால் கூட இதெல்லாம் பற்றி வாய் திறக்காதே. ஒரு பிடி பிடித்து விடுவார்கள் உன்னை எம் கால பெண்கள்.


12. குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல் - கணவனைப் பார்த்துக் கொள்வதே குடும்பப் பெண்ணுக்கு அழகு
' ஒரு நல்ல குலஸ்திரீயானவள் தனது கணவனை பற்றி, அவனது நலத்தை பற்றியே அவன் சந்தோஷத்தை பற்றியே சதா சர்வ காலமும் சிந்தித்து அவனை முகம் கோணாமல் பாதுகாத்து வளர்ப்பவள்  - எங்கே  தைர்யம்  இருந்தால்  இங்கே வந்து  எங்கள் பட்டி மன்றத்தில்  இப்படி  பேசிப்பார். .

''போய்யா, இதற்கெல்லாம் அர்த்தம் வேறு சொல்லி என்னை மாட்டி வைக்க பார்க்கிறாயா? எனக்கு இன்னும் சிறிதுகாலம் சந்தோஷமாக வாழ விருப்பம்.

14. அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல் - கல்வி பயின்று, ஆய்ந்தறிந்த அறிஞர்க்கு அழகு அடக்கமாக இருப்பது.

செம்மை'' - ஏழையாக இருந்தாலும், ஏழ்மை தன்னை, தன் குடும்பத்தை, சோதித்தாலும், எந்த தவறான காரியங்கள் செய்யாமலும் ஒழுக்கம் மீறாமலும், யோசிக்காமல், வரும்படிக்கு தக்கவாறு, விரலுக்கு தகுந்த வீக்கத்தோடு வாழ்வது தான் ஏழைகளுக்கு அழகு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...