Monday, May 18, 2020

LALITHA PANCHAKAM

ஆதி சங்கரர்   J K  SIVAN  


                  விடியலில் வணங்குவோம்  விடியட்டும் 

பஞ்சகம் என்றால் ஐந்து. பஞ்ச பாண்டவர், பஞ்சாக்ஷரம் எல்லாம் தெரியுமே.  லலிதாம்பிகை மேல் ஐந்து ஸ்லோகம்.  விடிகாலையில் அவளை மனதில் நிறுத்தி  தொழுவதற்கு சுகமான இந்த ஐந்து ஸ்லோகங்களை தந்தவர்  ஆதி சங்கரர். 

1.  प्रातः स्मरामि ललितावदनारविन्दं
विम्बाधरं पृथुलमौक्तिकशोभिनासम् ।
आकर्णदीर्घनयनं मणिकुण्डलाढ्यं
मन्दस्मितं मृगमदोज्ज्वलभालदेशम् ॥१॥

Praatah Smaraami Lalitaa-Vadana-Aravindam
Vimba-Adharam Prthula-Mauktika-Shobhi-Naasam |
Aakarnna-Diirgha-Nayanam Manni-Kunnddala-[A]addhyam
Manda-Smitam Mrgamado[a-U]jjvala-Bhaala-Desham ||1||
அம்மா  லலிதே, உன் தாமரை மலர் போன்ற அழகிய வதனத்தை காலை எழுந்ததும்  தரிசித்து வணங்குகிறேன் தாயே.  அன்றலர்ந்த தாமரைக்கு  இன்னொரு  பெயர்  தேவி லலிதா திரிபுர சுந்தரியா?சிவந்த அதரங்கள்  மாதுளையா?   நாசியால்  முத்துக்கு அழகா?  முத்து மூக்குத்தியால்  நாசிக்கு அழகா? காது வரை கண் என்று கேட்டிருக்கிறேன்  இப்போது பார்க்கிறேன் தாயே.   விஸா.. ஸா.. ஸா.. லாக்ஷி  முகத்தில் தான் என்ன பாசமிக்க, அன்பில் தோய்த்த  தாயின் புன்சிரிப்பு..    நெற்றியில் கமகமவென்று  மானின் கஸ்தூரி ஜவ்வாது  வாசனை...

प्रातर्भजामि ललिताभुजकल्पवल्लीं
रक्ताङ्गुलीयलसदङ्गुलिपल्लवाढ्याम् ।
माणिक्यहेमवलयाङ्गदशोभमानां
पुण्ड्रेक्षुचापकुसुमेषुसृणिदधानाम् ॥२॥

2.  Praatar-Bhajaami Lalitaa-Bhuja-Kalpavalliim
Rakta-Angguliiya-Lasad-Angguli-Pallava-[A]addhyaam |
Maannikya-Hema-Valaya-Anggada-Shobhamaanaam
Punnddrekssu-Caapa-Kusume[a-I]ssu-Srnni-Dadhaanaam ||2||

கல்பவல்லி  என்று கொடி . நினைத்ததை நிறைவேற்றும் தன்மை வாய்ந்த  செடிகளில் காமதேனு.  அதை போன்ற  அழகிய  மென்மையான கரங்களை உடையவளே   காலையில் நான் வணங்கும்  தேவி லலிதா திரிபுரசுந்தரி.  பிஞ்சு வெண்டைக்காய் என்பதா, அழகிய  பளபளக்கும் முளைவிட்ட சிவந்த விரல்களில்  சிவந்த மோதிரங்கள் அணிந்தவளே.  கரங்களில் தான் எத்தனை அழகிய  கங்கணங்கள் , வளையல்கள், கண்ணைப்பறிக்கும்  நவரத்ன மணிகள்  பதித்த வாகு வளையங்கள்..  அழகுக்கு இனிமை சேர்க்கவென்றே  அம்மா, நீ கரும்பு வில்லை கையிலேந்தி இருக்கிறாயா?  அதற்கு ஏற்ப  மலர்க்கணைகள், அம்புகள்,  அங்குசம் வேறு.    தேவி  அம்பா லலிதா திரிபுரசுந்தரி  உன்னை காலையில் பஜிக்க என்ன புண்யம் செயதிருக்கவேண்டும்.

3.  प्रातर्नमामि ललिताचरणारविन्दं
भक्तेष्टदाननिरतं भवसिन्धुपोतम् ।
पद्मासनादिसुरनायकपूजनीयं
पद्माङ्कुशध्वजसुदर्शनलाञ्छनाढ्यम् ॥३॥

Praatar-Namaami Lalitaa-Caranna-Aravindam
Bhakte[a-I]sstta-Daana-Niratam Bhava-Sindhu-Potam |
Padmaasana-[A]adi-Sura-Naayaka-Puujaniiyam
Padma-Angkusha-Dhvaja-Sudarshana-Laan.chana-[A]addhyam ||3||

பொழுது விடிந்தது.  அருணன் சிவந்து  கிழக்கே  தலை தூக்குகிறான்.  உன் தாமரைத் திருவடி போற்றுகிறேன் அம்பா தேவி லலிதா திரிபுரசுந்தரி.  ஆச்சர்யமாக  இந்த திருவடிகள் துளியும் ஒய்வு ஒழிவு  இல்லாமல்  எத்தனை கோடி பக்தர்களுக்கு அவர்கள் வேண்டியதை வாரி வழங்குகிறது. ,சம்சார சாகரத்தை கடக்கும் படகாக அல்லவோ  செயல்படுகிறது.  நான் மட்டுமா  உன்னை விடிகாலையில் தேடி வந்து வணங்குபவன்? அதோ எனக்கு முன்னே  தாமரை மலர் மேல் அமரும் ப்ரம்மதேவனே  தேவர்கள் சுரர்கள்  புடை சூழ உன் னருள் வேண்டி நிற்கிறார்கள். தாமரை, அங்குசம், கொடி , சுதர்சன சக்ரம்  தாங்கி நிற்கும்  அம்பா தேவி லலிதா திரிபுர சுந்தரி உன்னை விடிகாலையில் வணங்குகிறேன். 

4.  प्रातः स्तुवे परशिवां ललितां भवानीं
त्रय्यन्तवेद्यविभवां करुणानवद्याम् ।
विश्वस्य सृष्टिविलयस्थितिहेतुभूतां
विद्येश्वरीं निगमवाङ्मनसातिदूराम् ॥४॥

Praatah Stuve Para-Shivaam Lalitaam Bhavaaniim
Trayyanta-Vedya-Vibhavaam Karunnaa-[A]navadyaam |
Vishvasya Srsstti-Vilaya-Sthiti-Hetu-Bhuutaam
Vidyeshvariim Nigama-Vaang-Manasa-Ati-Duuraam ||4||

எப்போதுமே  விடிகாலை புத்துணர்ச்சியோடு செயல்பட உதவும் நேரம். இந்த சுகமான நேரத்தில்  தேவி லலிதா பவனி உன்னை எண்ணி என் மனம் பொங்கி வழிகிறது. எண்ணம் மனம் இதற்கெல்லாம் எட்டாதவளே. வேதாந்த  ஞானம்  இருந்தால்  தான்   கொஞ்சமாவது உன்  கம்பீரம், இரக்கம், புனிதம் எல்லாம் புரிபடும் என்று தோன்றுகிறது.  சிருஷ்டி, ஸ்திதி, லயம் , எனும் முத்தொழில்களையும் புரியும் தாயே, தெய்வமே , பிரபஞ்ச  காரணி,  வேதங்களும் அறியமுடியாதவளே,  வார்த்தைக்கு அப்பாற்பட்டவளே, மனதில் எல்லையற்று அறியப்படுபவளே, அம்பா, தேவி லலிதா திரிபுரசுந்தரி தாயே  உன்னை விடிகாலையில் வணங்குகிறேன்.

5. प्रातर्वदामि ललिते तव पुण्यनाम
कामेश्वरीति कमलेति महेश्वरीति ।
श्रीशाम्भवीति जगतां जननी परेति
वाग्देवतेति वचसा त्रिपुरेश्वरीति ॥५॥

Praatar-Vadaami Lalite Tava Punnya-Naama
Kaameshvari-Iti Kamale[a-I]ti Maheshvarii-[I]ti |
Shrii-Shaambhavii-[I]ti Jagataam Jananii Pare[a-I]ti
Vaagdevate[a-I]ti Vacasaa Tripureshvarii-[I]ti ||5||

உள்ளும் புறமும் அமைதி நிறைந்த சூழ்நிலையில் விடிகாலையில் அம்பே, தேவி லலிதா திரிபுரசுந்தரி உனது நாமங்களை நாவினிக்க  உச்சரிக்கிறேன்.   காமேஸ்வரி, கமலா, மஹேஸ்வரி, ஸ்ரீ சாம்பவி, ஜகத் ஜனனி, பரா, வாழுதேவி, திரிபுரேஸ்வரி ........  எவ்வளவோ  இன்னும்......

यः श्लोकपञ्चकमिदं ललिताम्बिकायाः
सौभाग्यदं सुललितं पठति प्रभाते ।
तस्मै ददाति ललिता झटिति प्रसन्ना
विद्यां श्रियं विमलसौख्यमनन्तकीर्तिम् ॥६॥

Yah Shloka-Pan.cakam-Idam Lalitaa-[A]mbikaayaah
Saubhaagya-Dam Sulalitam Patthati Prabhaate |
Tasmai Dadaati Lalitaa Jhattiti Prasannaa
Vidyaam Shriyam Vimala-Saukhyam-Ananta-Kiirtim ||6||

நண்பர்களே, அம்பாளின் புகழ் பாடும் இந்த ஐந்து ஸ்லோகங்களை விடாது விடிகாலை மனம் ஒருமித்து சொல்லுங்கள்.  நல்ல காலம் பிறக்கும், வீட்டிலே அடைபட்டிருக்க வேண்டாம். முன் போல் செயல்படுவோம்,    ஆனால் இனிமேல் கொஞ்சம் சுத்தம் சுகாதாரத்தோடு,   தொடாமல் மேலே படாமல் கரம் கூப்பி வணங்கி வாழ்த்தியவாறு. வெளியே  அதிகம் சுற்றாமல், வீட்டு உணவோடு...., .
அம்பாள் இப்படி வணங்கும் பக்தனுக்கு  செல்வத்துட் சிறந்த செல்வமான  வித்யை, ஞானம்,பொருள் வளம், பரிபூர்ண சந்தோஷம், நிலையான புகழ் பெருமை  எல்லாம் தர காத்திருக்கிறாள். நாம் தான் நெருங்க வில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...