Monday, May 25, 2020

CURRENT ADVICE





நாட்டு நடப்பு J K SIVAN
வெற்றி வேற்கை எழுத உட்க்கார்ந்தேன். டெலிபோன் கால்
''யாரு ?
மார்கபந்து ஸார்
.ஓ நல்ல இருக்கீங்களா? எங்கே இருக்கீங்க?
''பெங்களூர் லே மாட்டிக்கிட்டு ரெண்டு மாசமா திண்டாடறேன். வீட்டுக்கு அங்கே வரமுடியலே.''
'ரோட்டிலேயா இருக்கீங்க. உங்க பொண்ணு வீட்டில தானே. அப்புறம் என்ன புலம்பல்?
'' எங்கேயும் போகமுடியாத ஸார் ?''
எதுக்கு போவணும்?'
''இந்த கொரோனா வந்தாலும் வந்தது எல்லோரை யும் பைத்தியமாக்கிடுச்சி. வீட்டுப்படி தாண்டி காலை வெச்சு ரெண்டு மாசமாச்சு. ஒருத்தர்னா ஒருத்தர் வரவும் கூடாது. வீட்டிலே எதை பொங்கி போட்டாலும் அது தான். ருசி பார்த்து சாப்பிட்டு மாசம் ரெண்டாச்சு. என்னசார் பண்றது ''
மார்கபந்து போனில் அழுதார்.
''இதோ பாருங்க மார்கபந்து. இதெல்லாம் யாருக்காக செய்றீங்க. யோசிச்சு பாருங்க
''கண்ணுக்கு தெரியாத கிருமி ஒன்னு சுத்திக்கிட்டு அலையுது எவனை பிடிக்கலாம்னுட்டு. கடவுள் மாதிரி எந்த ரூபத்தில் யார் மூலமா எது மூலமா வருதுன்னுட்டு தெரியாது. வந்தாலும் 10-15நாள் கழிச்சு தான் தெரியுமாம். அதுக்குள்ளே நம்ம கிட்டேருந்து நூறு இருநூறு பேருக்கு நாம பரப்பி இருப்போம். இது எல்லாம் வேண்டாமே என்று தான். சர்வ ஜாக்கிரதையாக சுத்த பத்தமா வாயை மூக்கை மூடி இருக்கிற இடத்திலேயே கிட னு விட்டிருக்கு.
ஜனங்க தானாகவே உணரமாட்டாங்க என்பதற்காக அரசாங்கம் போலீஸ் எல்லாம் கொஞ்சம் கண்டிப்பா இருக்காங்க. யாருக்காக?
அப்படியும் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே தானே வருது. இன்னும் மருந்து கண்டுபிடிச்ச பாடில்லே. வராம இருக்கிறதுக்கு வேணா ஆயிரம் ஐடியா.
''இன்னும் எத்தனை நாளுக்கு சார் இப்படி கிடக்கணும் ?? ''
மார்கபந்து, வாழ் நாள் பூரா அரசாங்கம் உங்களை பூட்டி வைக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமா தளர்த்தி விடறாங்க. உங்களுக்கு கொரோனா ன்னா என்னா ன்னு லக்ஷம் தடவை எடுத்து படிச்சு படிச்சு சொல்லியாச்சு.
ஏன் ஒருத்தர் மேலே படக்கூடாது, கை கொடுக்க கூடாது, வெளியே சுத்தக்கூடாது, சாப்பிடக்கூடாது கைகால் கழுவணும், கவசம் போட்டுக்கணும்னு புரிய வைச்சாச்சு.
நிறைய ஜனங்க இருக்கிற தேசம். நாம் தான் ஜாக்கிரதையா இது புரிஞ்சுகிட்டு நம்மை நாமே காப்பாத்திக்கணும்.
இங்கே ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு கிடையாது. ஒண்ணும் மேலேயும் படாவிட்டால் தான் வாழ்வு. இத எல்லாரும் தெரிஞ்சுக்கணும்''
.
'' இப்படியே நாம செஞ்சிக்கிட்டு இருக்கணுமா சார்?''
''என்னங்க சார் மார்கபந்து குழந்தை மாதிரி கேக்கறீங்க. இது எல்லாம் நம்மகிட்டே வராம இருக்க பாதுகாப்பு. ''வாணாம் நானும் என் குடும்பமும் கஷ்டப்படறோம் னு'' உங்களை உடமுடியாது. உங்களோடு போற விஷயம் இல்லே இது. ஊருக்கே இல்லை அபாயம்?
அதனாலே எல்லோரும் இன்னும் ரொம்ப நாளைக்கு இப்படியே நடந்தோம் என்றால் மருந்தும் வரும், அதுக்குள்ளே இந்த கிருமி பரவலும் ஒழியும்.
''இன்னும் எத்தனை நாளு இப்படி இருக்கணும் னு நினைக்கறீங்க.?'
''நான் என்ன டாக்டரா, அவங்களாலேயே உங்க கேள்விக்கு பதில் சொல்லமுடியாது.
சனி பகவான் பிடிச்சாலே ஏழரை வருஷம் பொருத்துக்கறோம். கஷ்டப்படறோம். எத்தனை நாளுன்னு கேக்கறீங்க? எத்தனை மாசம்னு கேளுங்க ஒரு ஏழு எட்டு மாசம் போதும்னு தோணுது.''
நம்ம பழைய காலத்தவங்களே பாருங்க. வீடு வாசல் மெழுகி சாணம் தெளித்து. -- அதான் சாணி தான் பெஸ்ட் சானிடைஸர் . வெளியே போய்வந்தா கால் கை முகம் எல்லாம் கழுவிட்டு. செருப்பை வாசலிலேயே வச்சுட்டு உள்ளே நுழையணும். அன்னன்னிக்கு போட்டுக்கிட்ட துணியை யார் மேலேயும் படமா நினைக்கணும். மடி ன்னு பேர் வச்சு இதெல்லாம் பண்ணாங்க.
மிளகு லவங்கம் நெல்லி இதெல்லாம் ரொம்ப உபயோகிக்கணும். பழைய ஆகாரம் எல்லாம் மீறாம குறைச்சு வடிச்சு, சமையல் பண்ணி பழசை குறைக்கணும். பிரிட்ஜெலே வைச்சு போன மாச சாம்பார் எல்லாம் வேண்டாம் . உணவை வீணடிக்க கூடாது. அப்பப்போ தேவைக்கேற்ப செயதுக்கணும்.
வெளியே விற்பதை உபயோகிக்காமல், பொது இடங்களுக்கு கும்பலா இருக்கிற இடம் போகவேண்டாம். பாத்திரங்கள் கனமா இருந்தால் கிருமி தங்காது. அந்த காலத்திலே யே வெண்கலப்பானை, குண்டான் , பித்தளை பாத்திரம் உபயோகிச்சாங்க. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் லே கப்பு ன்னு கிருமி ஒட்டிக்குமாம்.பால் தயத்திற் மோர், வெண்ணை, நெய் கூடவே சேர்த்துக்கணும்.
ருசி பார்த்து வெளியே விக்கிற மிளகா பஜ்ஜி, போண்டா பக்கோடா, பிட்ஸா எல்லாத்துக்கும் பை பை சொல்லுங்க.
சார் நீங்க சொல்றதை யோசித்து பார்த்தால் சரின்னு தோணுது.
மார்க்க பந்து, இது உங்க வாழ்க்கை, உங்க உயிர். அதை நீங்க தான் பாதுகாக்கணும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...