Saturday, May 28, 2022

SUR DAS

 #ஸூர்_தாஸ்    நங்கநல்லூர்  J K  


ராதே உனக்கு கோபம் ஆகாதடி...


எலியும் பூனையுமாக  இருப்பார்கள்.  ஆனால்  எதற்கெடுத்தாலும்  கணவனின்றி மனைவியால் ஒரு காரியமும் செய்ய முடியாது. கணவனுக்கும்  அவள் இல்லை   யென்றால்  வலது கை  இல்லை. 
அன்பும் கோபமும் நிறைந்தது தான் வாழ்க்கை.  ரெட்டைகள் அவசியம். பகல் இரவு. உஷ்ணம். குளிர்ச்சி .  பிறப்பு இறப்பு..நல்லது கெட்டது. பாபம் புண்யம்.  அதுபோலவே தான்  காதலும் ஊடலும். 
கிருஷ்ணனுக்கு ராதையில்லாமல் ஒரு கணமும் வாழமுடியாது. ராதைக்கு கிருஷ்ணன் மட்டுமே வேண்டும்.  ஒவ்வொரு நாளும் குட்டி குட்டி சண்டை பிணக்கு  வரும். பேசாதிருப்பார்கள். சற்று நேரத்தில்  ஓடிப்போய் பேசுவார்கள். 
''என்னடி இது.  அவன் போகட்டும். வேண்டாம். நந்தகோபன் குமாரனைப் பற்றி நான் நேரம் செலவழிப்பது  தண்டம். எனக்கு சுகம் வேண்டாம். சந்தோஷம் வேண்டாம் என்கிறேன்.. ஆனால் என் உடல் ஏன் இப்படி  தஹிக்கிறது?. சந்திரனின் குளிர் கிரணங்கள் கூட  அதை தணிக்க முடியாமல் இன்னும் உஷ்ணம் அதிகரிக்கிறதே. ஏன்  அவன் முகம் எங்கும் தெரிகிறது? வாசலில், முற்றத்தில், பசு கொட்டகையில், வானத்தில்  பூமியில், மரத்தில், செடியில் மலரில், யமுனை நதிக்கு சென்றால் அங்கே, நீரலை மேல், எவனை வேண்டாமென்றேனோ அவனல்லவா  அவசியம் தேவையாகிவிட்டான்!'' என்கிறாள்  ராதை.
ராதைக்கு தோழி என்ன சொல்கிறாள்?    ஸூர் தாஸு க்கு தெரிந்து தானே சொல்கிறார்: 
'அடியே  ராதே,  போதுமடி  உன்  கர்வம், இந்த பொய்க்  கோபத்தை விடு.  உன்னால் கிருஷ்ணன் மேல் கோபப் படவே முடியாது. பூரண சந்திரன் போல் இருக்கும்  உன் முகம்  ஏன் களையிழந்து ஏதோ தேய்ந்து ஒளியற்ற ஒரு நக்ஷத்ரமாக  சுருங்கிவிட்டது?  நீ  என்ன  ரதி என்று மனதில் எண்ணமா? உன் மீது யாராவது கோபப்படுவார்களா?  உன்னை வேண்டாம்  நீ போ  என்று ஒதுக்குவார்களா?  வேண்டு மென்று அப்படி கிருஷ்ணன் ஒருநாளாவது சொல்வானா ?  ராதே உனக்கு கோபம் ஆகாதடி.    அவன் எவ்வளவு துடிக்கிறான் தெரியுமா, உன்னை பார்க்காமல், பேசாமல்?  அவனோடு பேச விளையாட ஓடி ஆட எத்தனை பேர்  காத்துக்  கொண்டிருக்கிறார்கள்  தெரியுமா உனக்கு?  நீ இடத்தை காலி செய்தால்  அடுத்த கணமே பலர் அதற்கு போட்டி போட்டுக்  கொண்டு வருவார்களே. நஷ்டம் உனக்கு தான் பெண்ணே!. உனக்கு மட்டும் என்று சொல்வதற்கு கிருஷ்ணன் உன் புருஷனா என்ன?
எழுந்திரு பெண்ணே, வாசலில் எட்டிப்பார், அதோ  எதிரே  உள்ள  அந்த புன்னை மரம்  பின்னால் நின்று  கொண்டு நீ எப்போது வெளியே வருவாய் பேசலாம் என்று காத்திருக்கிறான் பார். எழுந்து ஓடு  அவன் காலில் விழு . எல்லாம் மறந்து  போய்விடும் மீண்டும் நீங்கள் இருவரும் விளையாடுவீர்கள். இதயத்தில் இருப்பவர்களை எளிதில் கழட்டி விட முடியாது என்று தெரிந்துகொள். புரிந்து கொள் .

0 my friend—!
1 am wasting away myself
loving that son of Nanda,
the prince of Braj.
It is all so useless.
I threw away all the joys, all the pleasures,
and endured the arrows of Kama.
Even the cool rays of moon
burn my body like fire.
Still, I see him, his face, his vision
in the house, in the courtyard
here and there.
On the banks of Jamuna.
The only desire
that is left in me
is to give up everything,
and specially to renounce my Lord.

O Proud One !
give up your anger.
your face, that was bright as the moon
is now like a faint star.
who would, O friend,
deceive you
intentionally?
Because of your pique
Krishna has no rest
not for a moment.

You are proud, because you think
you are more beautiful
than Kama’s wife Rati,
that Krishna is your husband.

There are women in Braj
scheming to take your place.
O Radha, you don’t see the harm
y ou are doing to yourself.

Surdas says, clever Krishna
is now falling at your feet,
take him and hold him close
to your heart.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...