Monday, May 23, 2022

RAMANA MAHARSHI

#ரமண_ மஹரிஷி -  நங்கநல்லூர்   J K  SIVAN 

சூரி நாகம்மாவின் லெட்டர். 



ஸ்கந்தாஸ்ரம விஜயம் 


 இதற்கு தேதியா  முக்கியம்?  1945ல் ஒரு நாள் எழுதப்பட்ட   ஒரு ருசிகர தெலுங்கு லெட்டரின் சாராம்சம்:

இன்றைக்கு ஆஸ்ரமத்தில் ஒரு   பேச்சு அடிபட்டது.  நாளைக்கு காலை பகவான் ரமணர் ஸ்கந்தாஸ்ரமம் செல்வதற்காக கரடுமுரடு பாறைகளை தாவி மலை ஏறுவார். நல்ல நாள். பக்தர்களும் கூட செல்வார்கள். எல்லோருக்கும் அங்கே தான் போஜனம். அவரவர் எங்கோ தொலை தூரம் செல்வதுபோல் மூட்டை முடிச்சு எல்லாம் தயார் பண்ணிக்   கொண்டிருந் தார்கள். பகவான் எதையும் நினைவில் கொண்டவராக தோன்றவில்லை. வழக்கம்போல் அமைதியாக கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்



''சுவாமி வாருங்கள் ஸ்கந்தாஸ்ரமம் செல்லலாம்''    என்றால் அப்படியே எழுந்து கிளம்பிவிடுவார். எங்கும் போக  வேண்டாம் என்றால் அப்படியே அமர்ந்துவிடுவார். அவருக்கு எதற்கு முன் ஏற்பாடு? கையில் ஒரு கமண்டலம். கைத்தடி, அரையில் கோவணம். மேலே ஒரு துண்டு. இது தான் அவர் ஆஸ்தி. சொத்து எல்லாமே.



பொழுது விடிந்தது.   காலையில் வழக்கம்போல வேத பாராயணங்கள்  முடிந்தது. பகவான் ஸ்னானம் பண்ணியாகி விட்டது. காலை உணவும் அருந்தினார். மலை ஏற கிளம்பிவிட்டார். சிவபெருமானுக்கு நந்தி போல் உறுதுணையாக கூட இருந்து பகவான் ரமணருக்கு உதவுவது எப்போதும் ரங்கசாமி தான்.  பூர்வ  ஜென்ம புண்யசாலி.  மலையில் சௌகரி யமாக பகவான் ஏற குறுக்கு வழியில் ஸ்கந்தாஸ்ரமத்துக்கு  போகும்  பாதையை  அவனுக்கு நன்றாக  தெரியும். ஏதோ ஆர்வமாக தனது வீட்டுக்கு ஒருவர் போவது போல் பகவான் ஸ்கந்தாஸ்ரமத்துக்கு கிளம்பினார். பக்தர்கள் பலர் முன்னரே நடந்து வழியை சரி பார்த்துக்கொண்டு  சென்றார்கள்.



என்னோடு பகவானின் சதோதரி அலமேலு  நடந்தாள்.  மீதி பேர் சிலரும்   எங்களோடு  பகவான் பின்னால் நடந்தோம்.  ஸ்கந்தாஸ்ரமம்   கூரைக் கட்டிடம் .  அதன்  எதிரே மரங்களின் நிழலில் பகவான் அமர்ந்தார். ஸ்கந்தாஸ்ரமம் அப்போது எப்படி இருந்தது என்றால் நைமிசாரண்ய ரிஷிகள் சொல்வார்களே அதுபோல்,  அதேமாதிரி   பத்ரிகாஸ்ரமம் புராணங்களில் எப்படி இருந்தது என்பார்களோ அப்படியே  தான்  எனக்கு  காட்சி  அளித்தது.  சுற்றிலும் வனம் .   எண்ணற்ற பறவைகள், எங்கோ மலை  மீதிருந்து சிலுசிலு வென்று ஒரு அருவி ஓடும் சப்தம்.. விலங்குகள் பல வித குரல்களில் கத்தியது.   ரொம்ப ரம்யமான சூழ்நிலை. ரிஷி  குமாரர்கள் சாமவேதம் பாராயணம் பண்ணுவது போல் பக்ஷிகள் குரல் செவிக்கு இனிமையாக இருந்தது. பகவான் ஸ்கந்தாஸ்ரமத்தில் இன்று இருப்பார் என்று தெரிந்த  எண்ணற்ற பக்தர்கள்  அங்கே  முன்னதாக வந்திருந்து  குழுமி இருந்தார்கள். வெளி மாநிலங்களில் இருந்து வண்டிகளில் வந்து மலை ஏறி டாக்டர்கள், என்ஜினீயர்கள், வக்கீல்கள், நீதிபதிகள், ஆசிரியர்கள், புலவர்கள், கலை நிபுணர்கள், பாடகர்கள், ஆண்களும் பெண்களுமாக, ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி  எல்லோரும்  ஒரே குடும்பத்தினராக   காணப்பட்டனர். பகவானை சுற்றி எல்லோரும் தரையில் அமர்ந்தார்கள். அவர் மீதே  அனைவரின்  பார்வையும்  கவனமும் இருந்தது.  


 மேலே மர நிழல்களுக்கும் அப்பால் மேகங்கள் குடை பிடித் தது போல் இருந்தது. தென்றல் காற்று வெண்சாமரம் வீசியது.


பக்தர்கள் சிலர்   அங்கிருந்த அனைவருக்கும்  தாங்கள் கொண்டு வந்திருந்த  சிற்றுண்டிஇனிப்புகள் எல்லாம் வழங்கி னார்கள். நிறைய பூரி கூட்டு  காலை  ஆகாரமாக உள்ளே சென்றது


மாலையில்  அந்தி  வேளையில்  பகவான் திரும்ப  கீழே  ஆஸ்ரமம் நோக்கி   நடந்தார். அனைவரும் பின்னால் தொடர்ந்தார்கள். சந்தியா கால வேத பாராயணங்கள் ஆஸ்ரமத்தில் ஆரம்பித்தன. பகவான் அமைதியாக அசையாமல் உட்கார்ந்தி ருந்தார்.  மகரிஷிக்கு  எப்போதும்   எங்கோ சிந்தனை.  கண்கள்  எங்கோ தூரத்தில் எதையோ நோக்கியவாறு இருக்கும்.  முகத்தில் அரும்பு புன்னகை. யார் யாரோ போட்டோக்கள் எடுத்தார்கள். சிலர் கேட்ட கேள்விகளுக்கு   பதில் சொன்னார். பதில் கூடுமானவரையில்  ஓரிரு வார்த்தைகளில் தான் இருக்கும்.. 



கீழே  ரமணாஸ்ரமத்தில்   மகரிஷி உட்கார்ந்திருந்தது எனக்கு  யாரோ ஒரு பெரிய மஹாராஜா தர்பாரில் இருப்பது போல் தோன்றியது.  . காற்று பலமாக வீசவே, ஒரு சில பக்தர்கள் ஒரு துப்பட்டாவை முகம் மட்டும் தெரியும்படியாக அவர் மேல் போர்த்தினார்கள். ''


மௌன வியாக்கியானம் '' மெளனமாக  உபதேசம்  தொடர்ந்தது. எண்ணற்றவர் மனதில் எழுந்த வி


னாக்கள் தானாகவே மனதில் 
விடை பெற்றன. சாப்பாடு நேரம். எல்லோருக்கும் புளியோதரை தயிர் சாதம் வழங்கப்பட்டது. எல்லோர் மத்தியிலும் தரையில் அமர்ந்து பகவானும் உண்டார். 



வழக்கமாக  அவர்  உட்காரும் சோபாவை   வெராண்டாவில் கொண்டு வைத்தார்கள். வெராண்டாவில் க்ராதிக் கம்பிகள் போட்டு மடக்கி வைத்திருந்ததால்  அருகே யாரும் போகமுடியாது. எல்லோரும் நகர்ந்து நகர்ந்து அருகே வந்து அமர்ந்தார்கள். பக்கத்தில் ஒரு சிறு அறை . அதில் நானும் அலமேலுவும் . அதன் ஜன்னல் வழியாக பகவான் தெரிவார். பகவான் குட்டி குட்டிக்  கதைகள் சொல்வார். சில சமயம் அருணாச்சல மலையில் தனது அனுபவங்களை ஞாபகப்படுத்தி சொல்வார். நிறைய சிறுத்தைகள், குரங்குகள் சர்ப்பங்கள்   மயில் கூட்டங்கள் அணில் குடும்பங்கள், கீரிப்பிள்ளை, தன்னோடு நெருங்கி பழகியதை எல்லாம்  சொல்வார். அவரது அம்மா  ஆஸ்ரமத்துக்கு  வந்ததைப் பற்றி சொல்வார். ஸ்கந்தாஸ்ரமம் கட்டுமானம் வேலைகள் நடந்துகொண்டிருந்தது . அவ்வப்போது அதைப்  பற்றி செய்தி வரும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...