Thursday, November 1, 2018

SILENCE

                         மோனமே  ஞானம் -  J.K. SIVAN

சுந்தர ராவிடம்  ஒரு பழக்கம்.  நாம் எது சொன்னாலும்  ''அது அப்படியெல்லாம் இல்லை''  என்று தான் உடனே ஆரம்பிப்பார். சரி வேறு எப்படி என்று நாம் அவரை பேசாவிட்டால்  நாம் எதை சொல்கிறோமோ அதையே அப்படி திருப்பி சொல்வார்.'' 
ஆகவே  அவரைக் கண்டபோதெல்லாம்  நான் அவரையே பேச விடுவது வழக்கமாயிற்று.  மௌனம் ரொம்ப உதவும். இன்று மௌனத்தை பற்றியே  சற்று சத்தமாக  சொல்கிறேன்

மௌனம் சர்வார்த்த சாதகம்.  அதாவது  மோனம் ஒன்றே சகலத்தையும் பெறும் ஒரு வழி.  நாலு பேருக்கு நடுவே  ரொம்ப

 பேசாமல் அமுக்கமாக ஒரு ஆசாமி இருந்தால் அவனை அதிகமாக படித்தவன், அநேக விஷயங்கள் தெரிந்தவன், எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு வாய் திறவாமல் இருக்கிறான் என்று தான்  எல்லோரும் கருதுவார்கள். மதிப்பார்கள்.அவன்   ''ராபணா''  என்று வாயைத் திறந்தால்  தானே சாயம் வெளுக்கும்.

மௌனம் உடம்புக்கு நல்லது. ஆரோக்யமானது.

அதிக சப்தம் ( 30 decibel க்கு மேல்) இருந்தால் ரத்த அழுத்தம், கவலை, மூச்சு திணறல், நரம்பு தளர்ச்சி வந்துவிடும்.  மாவு மெஷின், மிளகாய், சீயக்காய் பொடி அரைக்கும்  ஆசாமிகள் ரகசியம் பேச முடியாது, கேட்கவும்  முடியாது. அவர்கள் உலகம் ஓ
சையானது. 

மௌனமாக  நமது பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் எளிது.  ரத்த அழுத்தம்,  பெருமூச்சு, ஆத்திரமே  இருக்காதே . மனது  என்கிற பாட்டெரிக்கு  ரீ-சார்ஜ்  இந்த மௌனம் தான்.

வெளியில் இருப்பதை விட  வம்பும் கூச்சலும் ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் நமக்கு உள்ளே தான் ரொம்ப  ரொம்ப அதிகம். அதை குறைப்பது மௌனம் ஒன்றே. கதைவை சாத்திவிட்டு  ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து உள்ளே  நடக்கும் வேடிக்கைகளை கூர்ந்து கவனித்தால்,  வகுப்பறையில் கணக்கு வாத்தியாரைப் பார்த்த பையன்கள் போல் உள்ளே எல்லாமே தானாகவே  'கப் சிப்'.

ஒட்டமும் ஆட்டமும், விரட்டலும் துரத்தலும்  கொண்ட  அன்றாட  மனித இயந்திரங்கள்  ஒரு நாளைக்கு  ஒரு தரமாவது  ஒரு பத்து நிமிஷம் அமைதியாக  அமர்ந்து கண் மூடி  மௌனமாக  உள்ளே  நோக்கினால்  புத்துணர்ச்சி பெறலாம். இயந்திரன் மனித இதயன் ஆகலாம்.

மௌனம்  வியாதிகளை கிட்டே சேர்க்காது.
மௌனம் மூளை வேலை சீராக செய்ய  உதவுகிறது. நல்ல முடிவுகள், நல்ல எண்ணங்கள்  உற்பத்தி செய்கிறது.
உடலின் சக்தி விரயமாகாததால்  இளமையோடு இருக்கலாமே  தம்பி.
மன அழுத்தம் (stress)  ரத்தத்தில்  கொலஸ்ட்ரால், அட்ரீனலின் அளவுகள் குறைய மௌனம் பெரிதும் உதவுகிறது. ஒரு அரைமணி வாய் பேசாமல் இதை தினமும் சம்பாதிக்கலாமே. வாழ்க்கைப் பாதையையே  வேறு  ஒருநல்ல சுறுக்கு வழியாக மாறிவிடும்.  வீட்டில் சண்டையே இருக்காது. நல்ல சாப்பாடு விரும்பி போடுவார்கள். உபசரிப்பார்கள்.

நமது உடலில் நல்ல ஹார்மோன்கள்  பெருக  மௌனம் ரொம்ப உதவுகிறதாம். நமது வயிறு, இதய பகுதிகள் நன்றாக வேலை செய்வதால்  ரத்த ஒட்டம்  அழகாக தமனிகள், சிரைகள் வழியாக  உள்ளே சுற்றிவர  டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வேண்டாம்.

மௌனம்  காசு கொடுத்து வாங்கவேண்டாம்.
உடலுக்கு தூக்கம் இன்றியமையாதது போல  உள்ளத்துக்கு  மௌனம் அவசியம்.
மௌனமாக இருப்பவன் ரகசியத்தை வெளியிட்டு OVM  (ஓட்டை வாய் மாரி முத்து) என்று பேர் வாங்கமாட்டான். அவனால்  எவருக்குமே சிக்கலே வராதே. அவனுக்கும் வர வழியே இல்லை. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...