Friday, November 30, 2018

GITANJALI

கீதாஞ்சலி J.K. SIVAN
ரபீந்திரநாத் தாகூர்

கண்ணனை காண்பதெப்போ?

நீ வருவாய் வருவாய் என்று நான் காத்துக்கொண்டே தானே இருக்கிறேன்.
இதில் எனக்கு பகலுமில்லை, இரவுமில்லை. எப்போதும் என்றால் எனக்கு எப்ப்ப்ப்போதுமே தான்.

அப்பாடா .... மெதுவாக அவன் அடிமேல் அடி எடுத்து மெதுவாக நடந்து வருவது இந்த நிசப்தத்தில் கேட்கிறது. ஆம் வந்து விட்டான். இதோ இதோ வருகிறான். வந்துகொண்டே இருக்கிறான்.எப்போதும் வருபவன் தானே.
இன்றா ,நேற்றா, காலையா மாலையா, இரவா பகலா, யுகம் யுகமாக அவன் வருவான். இதோ வருகிறானே.

என் உணர்ச்சிகள் மாறி மாறி வரும். அப்போதெல்லாம் உணர்ச்சிக்கேற்றபடி அவனை பாடுவேன். எந்த உணர்ச்சியில் என் மனம் எப்படியெல்லாம் துணிகிறதோ அப்படியெல்லாம் பாடினாலும் ஒரே வார்த்தை ''அவன் வருகிறான். வருகிறான். இதோ வருகிறான்.'' இது ஒன்றே தான்.
வெயில் காலத்தில் பளிச்சென்று வெளிச்சத்தத்தில், சுள்ளென்று வெயிலில் வியர்த்து கொட்டினாலும் அவன் வருகிறான். அதோ அந்த காட்டுப்பாதையில் மர நிழலில் வந்து கொண்டே இருக்கிறான். எப்போதும் வருவான்.

வெயில் காலத்தில் என்று சொன்னேனா? கொட்டும் மழை காலத்திலும் தான். சீக்கிரமே இருட்டிவிடும். எங்கும் கும்மிருட்டு. இடி விடாமல் இடிக்கட்டுமே. அதனால் என்ன? அவன் என்னைத்தேடி வருகிறான். வந்து கொண்டிருக்கிறான். எப்போதும் வருபவன் வருவான்.

நான் படும் கஷ்டங்களை, பட்ட துயரங்களை நான் எதற்கு லக்ஷியம் பண்ணவேண்டும். அவனது மெத்து மெத்தென்ற காலடிகள் என் இதயத்தில் படும்போது தடவிக் கொடுக்
கும்போது அப்பா, என்ன சுகம், அந்த தங்கமான அவன் காலடி என் இதயத்தை, மனத்தை தொடும்போது என்ன ஆனந்தம். சுகம், சொல்ல வார்த்தை அகப்படவே இல்லையே. என் சந்தோஷம் எங்கும் அவன் காலடி போலவே பளபளக்க ஒளிவீசி ரெக்கை கட்டி பறக்கிறது. ''பாரோ கிருஷ்ணயா.....மா இன்டிகி.... ''

மேலே கண்டதை ரபீந்திரநாத் தாகூரின் ஆங்கில ''கீதாஞ்சலி'' மொழிபெயர்ப்பில் ரசியுங்கள்:

Have you not heard his silent steps? He comes, comes, ever comes.
Every moment and every age, every day and every night he comes, comes, ever comes.
Many a song have I sung in many a mood of mind, but all their notes have always proclaimed, `He comes, comes, ever comes.'
In the fragrant days of sunny April through the forest path he comes, comes, ever comes.
In the rainy gloom of July nights on the thundering chariot of clouds he comes, comes, ever comes.
In sorrow after sorrow it is his steps that press upon my heart, and it is the golden touch of his feet that makes my joy to shine.

_____________________________

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...