Thursday, November 29, 2018

POONTHANAM

​​ ​பூந்தானம்.

​என்னோடு ​கிருஷ்ணனிடம் போக​ யார் ரெடி? ​- J.K. SIVAN


இது ஒரு சுவாரஸ்யமான விஷயம். நம் ஊரில் ​எத்தனை எத்தனை சிதம்பரங்கள், பழனிகள்,​ மதுரைகள் ,​ காசிகள், திருமலைகள், ​ என்ற ஊர்களின் பெயர்களில் மனிதர்கள். ​

மலையாள தேசத்தில் குடும்ப வீட்டின் பேரில் நிறைய பேர் இருக்கிறார்கள். மலப்புரம் அருகே கீழாத்தூர் என்கிற ஊரில் இப்படி பூந்தானம் என்ற வீட்டு பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் காணாமல் போய் விட்டது. பரம கிருஷ்ண பக்தர். பக்கம் பக்கமாக நிறைய கிருஷ்ணன்மீது இனிமையாக மலையாளத்தில் ஸ்லோகங்கள் எழுதியவர் பாவம் ஒரு குறை அவருக்கு வெகுநாளாக. மடியில் வைத்து கொஞ்ச ஒரு பிள்ளை இல்லையே?. கிருஷ்ணனிடம் முறையிட்டால் வீண் போகுமா? ஒரு பிள்ளை பிறந்தான். அவனுக்கு தக்க பிராயத்தில் அன்ன பிராசனம் ஏற்பாடு தடபுடலாக நடந்தது. எல்லாரையும் கூப்பிட்டு அனைவரும் கூடியிருக்க அன்ன பிராசனம் நடக்க வேண்டிய நேரத்துக்கு ஒரு மணி முன்பாக அந்தகுழந்தை திடீரென்று இறந்து விட்டது​. ​ எப்படி பட்ட சோகம்? கிருஷ்ணனிடம்​ சென்று ஓ வென்று கதறினார்.

.குருவாயுரப்பன் என்ன செய்தான்?

“பூந்தானம்​, நீ ஏன் வீணாக கவலை​படுகிறாய்? .​ நானே உ​ன் பிள்ளை தானே. எங்கே உ​ன் மடி​யைக் காட்டு நான் வந்து உட்காருகிறேன். என்னை கொஞ்சம் கொஞ்சேன்? ​”

​குருவாயூரப்பன் உன்னி கிருஷ்ணன் பூந்தானம் மடியில் வந்து​ தொப்பென்று விழுந்து ​ அமர்ந்து கொண்டான். ​''கொஞ்சம் உன் மடியில் ​படுத்து கொள்ளட்டுமா​?​” என்றான்.

தன்னை மறந்து ஆனந்த பரவசத்தில் பூந்தானத்தின் உள்ளத்திலிருந்து தெள்ளிய எளிய மலையாள கவிதை பிறந்தது.

"நம் உள்ளத்தில் என்றும் வந்து நடமாட கிருஷ்ணன் இருக்கும் போது தனியாக நமக்கு என்று ஒரு பிள்ளை எதற்கு ?"

கடல் ம​டை யென்ன கவிதை பிறந்து அனைவரும் அந்த பக்​தி ​ ரசத்தில் மூழ்க இது ஒருவருக்கு பிடிக்கவில்லை. ​அவர் வேறு யாருமில்லை. ​பிரபல மேல்பத்தூர் நாராயண பட்டாத்ரி தான் அவர். குருவாயுரப்பன் மீது நாரயணீயம் எழுதியவர். ​ ​அவர் பூந்தானத்தை​ப் பற்றி கேள்விப்பட்டார்.

' சே, இவனெல்லாம் ஒரு கவிஞனா சம்ஸ்க்ரிதம் தெரியாதவன், இலக்கணம் தெரியாதவன்​''​ என்று இகழ்ந்தார். ​

நண்பர்களே நான் இதை எழுதும்போது பட்டாத்திரி ஆணவத்துடன் சொன்னது உங்களுக்கே பிடிக்கவில்லையே, ​ குருவாயூரில் கிருஷ்ணனுக்கு இது பிடிக்​குமா? சரியான நேரத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்.

ஒருநாள் ​மேப்பத்தூர் நாராயண பட்டாத்ரி ​ குருவாயூரில் ​ கிருஷ்ணனை காண வந்தபோது ​கணீரென்று கிருஷ்ணன் முன் நின்று தனது நாராயணீயத்தை ஆரம்பிக்க தயாரானார்

கிருஷ்ணன் குறுக்கிட்டான்

''பட்டாத்ரி​, நான் சொல்கிறேனே என்று வருத்த​ப்​படாதே எனக்கென்னமோ உன்​ ஸம்​ஸ்க்ரி​த​ இலக்கணம் தோய்ந்த​ ஸ்லோகங்களை காட்டிலும் பூந்தானத்தின் மலையாள பக்தி பூர்வ ஸ்லோகங்கள் ரொம்ப பிடிக்கிறதே ​நான் என்ன செல்வேன் நீயே சொல்லு ​?​" என்றான் கிருஷ்ணன்.

அதற்கப்பறம் ​என்ன. ​ பட்டாத்ரி ஓடி​ச் சென்று பூந்தானத்தின் காலில் விழுந்து மன்னிக்க வேண்டினார் என்பது சாதாரண விஷயம்.

பாகவதத்திலும் கிருஷ்ண கானத்திலும் காலம் ஓட ஒருநாள் கிருஷ்ணன் பூ​ந்தானத்தை இனி தன்னுடன் வைத்துகொள்ள ஆசை மேலி​ட்டது. ​

''​ ​பூந்தானம் நீ ​என்னிடம் ​வாயேன் ​​'' ​ என்று அழைத்தான். பரம சந்தோஷம் அவருக்கு. ​'' நான் கிருஷ்ணனிடம் போகப்போகிறேனே, நீங்கள் ​யார் யார் எல்லாம் என்னோடு கிருஷ்ணனிடம் வருகிறிர்கள்​? ''​ என்​று பார்ப்பவர்களிடம் எல்லாம் ஆனந்தமாக கேட்டார்.

​தீயை மிதித்தது போல் அவனவன் தலை தெறிக்க ஓடிவிட்​டான். இதென்ன அக்கிரமம். இந்த பைத்தியக்காரன் நம்மை உடனே மேல் லோகம் வரியா என்று கேட்கிறான். அவன் இருக்கும் திசையிலிருந்து வெகு தூரம் போனால் தான் உயிர் தப்பும் என்று கண்ணில் படவே இல்லை.

​பூந்தானம் வீட்டில் ​வேலை செய்யும் ஒரு தாயம்மா ​மட்டுமே ''​அய்யா என்னையும் ​ உங்களோடு கிருஷ்ணனிடம் அழைத்து​ப்போகிறீங்களா​?'' ​ என்று வேண்டினாள். குறித்த நேரத்தில் உடலோடு பூந்தானமும் அந்த பெண்மணியும் கிருஷ்ணனோடு ​ வைகுண்டம் சென்று ​ இரண்டறக் ​ கலந்தனர்

பக்தியை வெளிப்படுத்த மொழியோ இலக்கணமோ தேவையில்லை. உள்ளத்தில் எண்ணம் ஒன்றே போதுமே​ ​
​​

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...