Wednesday, November 9, 2022

SARASWATHI RIVER



 காணாமல் போனவள்  -  #நங்கநல்லூர்_J_K_SIVAN

 
ஹிந்துக்கள் நமக்கு நதிகள் பெண்கள் மட்டுமல்ல  பாவமகற்றும் புண்ய தீர்த்தங்கள், தெய்வங்கள். சில நதிகளை ஜீவநதிகள் என்கிறோம். என்றும்  வற்றாதவை.  பல கோடி உயிர்களை  உணவளித்து காத்து ரக்ஷிக்கும் மஹோன்னதம் பெற்றவை.
சிந்து நம்மை விட்டு  பாகிஸ்தான் சென்றுவிட்டாள்.  ப்ரம்ம புத்ரா வும் அவ்வாறே, . பிரம்மபுத்ராவின் பெரும்பகுதியும் அவ்வாறே நம்மை கைவிட்டு பிரிந்துவிட்டால்.  நம்மை ரட்சிக்கும் கங்கையை நாம் நண்றி யின்றி சீர்குலைத்தவர்கள். இப்போது கங்கையை  சுத்தமாக்கும் முயற்சி நடக்கிறது.   அதற்காவது  முழுதும் து ஒத்துழைப்போம்.இதெல்லாம்  தெரிந்து தான் ஸரஸ்வதி  முன்னரே   டாடா காட்டி விட்டு  நம் கண் காணாமல் மறைந்து விட்டாள் .
ஸரஸ்வதி  பழம் பெருமை வாய்ந்தவள். வேதகால நதி.  ஒரு காலத்தில் நமக்கு மஹா பெரிய நதியாக  வாழ்வளித்தவள். இன்றும் கண் காணாமல்  கங்கை யமுனையோடு பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் கூடுகிறவள். அவளை அந்தர்வாஹினி என்கிறோம். 
ஐந்தாயிரம் ஆறாயிரம் வருஷத்துக்கு முன்பு  ஸரஸ்வதி நதிக் கரை நாகரீகம் பற்றி நிறைய   ரிக் வேதம், மனு சாஸ்திரங்களில் வேதங்களில் அறிகிறோம். 

ISRO, ONGC, ஆகியோர்  விண்வெளி ஆராய்ச்சி செய்து   ஸரஸ்வதியைத்  தேடி அது இன்றும் இருக்கிறது  உரு மாறி விட்டது  பெயரும் தான் மாறி இப்போது  காகர் ஹக்ரா நதி  என்கிறார்கள். பாதி வடமேற்கு இந்தியா வில்.   மீதி பாகிஸ்தானில் இருக்கிறது.

ஸரஸ்வதி சிந்துவை விடவே   நீளமானவள், பெரியவள். 1500 கிமீ நீளம்   3–15   கி.மீ  அகலம் இருந்தவள். பனி மலையில் உருகி உருவானவள்.    க்ஷத்ரியர்களை வதம்  செய்த பரசுராமன் ஸரஸ்வதியில் நீராடி தான் பாபங்களை தொலைத்தான்.

தொலைந்து போன, காணாமல் மறைந்த   ஸரஸ் வதியை ஹரியானாக்காரர்கள்   தேடிப் பிடித்திரு க்கிறார்கள். ஸரஸ்வதி கொஞ்சம் பூமிக்கடியிலிருந்து  மேலே வெளியே வந்து விட்டாள் . குருக்ஷேத்ரம் நோக்கி ஓடப்போகிறாள்

எத்தனையோ யுகம் ஆகிவிட்டது. ஹரியானா அரசாங்கம் நன்றாக செயல் படுவதை பார்க்கும்போது நாம் அங்கே இல்லையே என்று தோன்றுகிறது.

யமுனாநகரில் தோண்டி காணப்பட்ட ஸரஸ்வதி நதியின் மேல் மூன்று அணைக்கட்டுகள் வரப்போகி
றதாம். அவ்வளவு நீரா?  4000 வருஷத்துக்கு முன்பு  ஸரஸ்வதி நதி வற்றி விட்டது.  எனினும் அதன்  கரையில் தான் ரிக்வேதத்தின் சில பகுதிகள் எழுதப்பட்டன.

ஆராய்ச்சியாளர்கள் பிரயாசைப் பட்டு தேடி  ஸரஸ்வதி நதிப்போக்கை அனுமானித்து யமுனாநகர் ஜில்லாவில், முகலிவாலி கிராமத்தில் தோண்டி எட்டடி ஆழத்தில் ஜலம் வெளியே வர அது தான்  ஸரஸ்வதி என்கிறார்கள். இதற்கென ஹரியானா அரசாங்கம் ஒரு  பெரிய அமைப்பு உண்டாக்கி  பல வல்லுநர்கள் ஸரஸ்வதியின் ஆரம்பகால போக்கை அலசி தோண்டி சரஸ்வதியை மீட்க பாடு படுகிறார்கள், அதை வெளிக் கொணர்ந்து ஒரு அணையும் கட்ட போகிறார்கள். சரஸ்வதியை கண்டுபிடித்து மீட்க  50 கோடி ரூபாய் ஒதுக்கியிருக் கிறார்கள்.

பத்ரிநாத்திலிருந்து 3 கி.மீ  தூரத்தில்  மலைப்பாறை களிடையே  சரஸ்வதி வெளிவருகிறாள். வேகமாக கொதித்து எழுகிறாள். இன்னும் சமவெளியை அடையவில்லை. தூரத்தில்  அலக்நந்தாவுடன் சங்கமிக்கிறாள். அந்த இடத்தை தான் கேசவ ப்ரயாக்  என்கிறோம்.

ஸரஸ்வதி என்றாலே  நிறைய  கொப்புளிக்கும்  புனிதமான  நீரை, அலைகளை,  சுழல்களை  அபரிமிதமாக கொண்டவள் என்று  அர்த்தம்.  ரிக்வேதம் சொல்கிறது.  சரஸ்வதி ஹாரூத் நதியாக  ஆப்கானிஸ் தானில் பேர் மாற்றிக் கொண்டுவிட்டாள். அவளிட மிருந்து பிறந்த உபநதி திரிஷத்வதி. இது ப்ரம்மவர்த்தம் என்றும் ஆரிய வர்த்தம் என்றும்  வேத காலம்  சொல்லும் நமது  தேசத்தில் பரிமளித்தவை.

ஸரஸ்வதியை  நதியாக வணங்கியதைவிட  கல்விக்  கடவுளாக, வாக் தேவியாக  கலைமகளாக  தான் அதிகம் அறிந்து வழி படுகிறோம்.  

யஜுர்வேத வாஜசநேயி சம்ஹிதை (34.11) ஸரஸ்வதியை சிந்து என சொல்கிறது. அப்பவே காணோம் போல் இருக்கிறது"பஞ்ச நதிகள் பாய்ந்து ஓடி வேகமாக சரஸ்வதியை அடைந்து சரஸ்வதி ஐந்து நதிகள் ஆனாள் ''அந்த பிரதேசம் பிற்காலத்தில் பஞ்சாப் .

ஸரஸ்வதியைப்  பற்றி தெரிந்ததை விட தெரியாதது நிறைய இருக்கும் போல அல்லவா தோன்றுகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...