Wednesday, November 23, 2022

KRISHNA'S PLAN

 


கண்ணனின் திட்டம்.....-  நங்கநல்லூர்  J K  SIVAN 

கதை எந்த மொழியில் இருந்தால் என்ன?  கதை என்பது  ஒரு உணர்வு. யாரோ ஒருவர்   அனுபவம், அப்படியேயோ அல்லது கொஞ்சம்  திரித்தோ உருவம் பெறுகிறது.  உண்மை கற்பனையோடு சேர்ந்து புது உருவம் பெறும்போது  ஒரே கடலை மாவில் செய்த பஜ்ஜியோ பக்கோடாவோ தான் கவனத்துக்கு வரும்.  ஒரு வெள்ளைக்காரனை  கபாலியாக்கி இதை அளிக்கிறேன்.

டாக்டர் கபாலி ஒரு சிறந்த புற்று நோய்  நிபுணர். அர்ஜண்டாக ஒருநாள்   ஒரு பெரிய மருத்துவ மாநாடு செல்வதற்கு புறப்பட்டார்.  கபாலியின்  புதிய ஆராய்ச்சி மருத்துவ உலகில் பல உயிர்களை காப்பாற்றப்  போகிறது.  உலகமே வியக்கப்  போகிறது.  ஒரு பெரிய உலக அளவு மருத்துவர்கள்  கலந்து கொள்ளும் மாநாட்டில் அழைத்து  கபாலிக்கு  சிறந்த  மரு த்துவ  மேதாவி  பட்டம் கொடுக்கப்  போகிறார்கள். இன்னும்  27 மணி நேரத்தில்  உலகம் அதை அறிந்து  வியக்கப்போகிறது.. சீக்கிரம் போகவேண்டும்.  ''நான் எவ்வளவு உழைத்து பெறுகிறேன் இந்த பட்டம்!.கிருஷ்ணா  எல்லாம் உன் அருளால்...'' மனமார  வணங்கி  புறப்பட்டு  விமானநிலையத்தில் கூட்டத்தில் அமர்ந்திருக்கிறார். இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கிறதே.

துரதிர்ஷ்டம் யாரை விட்டது.  விமானம்  பறந்த  ரெண்டு மணி நேரத்திலே  அதில் கோளாறு.

''விமானத்தில் சிறு கோளாறு.  சற்று நிமிஷத்தில் ஓரிடத்தில்  தரை இறங்கப்போகிறது. பயப்படவேண்டாம்.  ஜாக்கிரதை யாக இறங்குவீர்கள்'.  ஒலிபெருக்கி  அலறியது.

கையில் பெட்டியோடு முகத்தில் கவலையோடு  எங்கோ வட  இந்தியாவில்  ஒரு சிறிய   தற்காலிக விமான அதிகாரியை போய் பார்த்தார்  கபாலி.

''ஒரு மாநாடு போகவேண்டுமே . இப்படி நடுவில் இறங்க  வேண்டியதாகி விட்டதே. எப்படி குறித்த நேரத்தில் இன்னும் பத்து மணி நேரத்துக்குள் அங்கே போய் சேர்வது. வேறு ஏதாவது இங்கிருந்து விமானம் செல்ல வழி உண்டா?

''அப்படி எதுவும் இல்லையே டாக்டர். ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள். இங்கே ஒரு வாடகை கார்  கிடைக்கும். அதில் ஒரு மூன்று நாலு மணி நேரம் பிரயாணம் செயது அடுத்து ஒரு பட்டணம் போனால் அங்கிருந்து சில ஹெலிகாப்டர்கள் குறித்த இடத்துக்கு கொண்டு சேர்க்கும்.''

கபாலி அந்த ஊரிலிருந்து  காரில் பறந்தார். அடாடா   ஒரு பெரும் புயல் எங்கிருந்தோ வந்து குறுக்கிட்டது.

இரவு நேரம்.  போகும் பாதையிலிருந்து வேறு பாதையில் தவறாக கார் பறந்தது.  அடாடா இன்னும் ரெண்டு மணி நேரம்  ஓடி விட்டதே. சரி அவ்வளவு தான் என் அதிர்ஷ்டம்.  எனக்காவது எல்லோர் எதிரிலும் மரியாதை பட்டமாவது ?  எனக்கு அதற்கெல்லாம் கொடுப்பினை இல்லையே. என்ன கிருஷ்ணா இது?  இப்படி ஒரு துரதிர்ஷ்டம் எனக்கு?

புயலைத்  தொடர்ந்து விடாத மழை. வானம் பொத்துக் கொண்டது. முன் பின் அறியாத ஏதோ ஒரு தெருவில் கார் மெதுவாக நுழைந்தது. தெருவெல்லாம் தொப்பம்.  பசி எங்கும் ஒரு வீடு கூட காணோம். கபாலிக்கு களைப்பு. மயக்கம் வரும்போல் இருந்தது. காரை ஓட்டிக்கொண்டே சென்றார்.

ஐயா  எங்கும் இருட்டாக இருக்கிறது. பள்ளம் எது தெரு எது என்று தெரியவில்லை. கொஞ்சம்  மின்சாரம் வரும் வரை எங்காவது சற்று நேரம்  வண்டியை நிறுத்தி  தங்குவோம். வேறே வழியில்லை.உயிரைக் காப்பாற்றிக் கொள்வது முக்கியம்''  -  வண்டியோட்டி இந்தியில் சொன்னது புரிந்தது.

''அப்பாடா  ஒரு  தொத்தல் பழைய வீடு தெரிகிறது. அதி நோக்கிப்  போ'' உள்ளே விளக்கு ஒளி தெரிந்ததும் மூச்சு வந்தது. கொஞ்சம் தண்ணீராவது கேட்கலாம்.

காரை நிறுத்தி கதவைத் தட்ட ஒரு கிழவி கதவைத்  திறந்தாள்.

''உங்கள் வீட்டில் போன்  இருக்கிறதா  அர்ஜண்டாக போன் பேசவேண்டும்.''

''எங்கிட்ட அந்த வசதி எல்லாம் இல்லையே. உள்ளே வாருங்கள். கொஞ்சம் சூடாக ஆகாரம் இருக்கிறது தருகிறேன். இளைப்பாருங்கள்.'' 

''மிதுனபூர்  எங்கே இருக்கிறது, எவ்வளவு தூரம்?

போக  வேண்டிய  இடத்துக்கு கிழவி  வழி சொன்னாள். நீங்கள் சாப்பிடுங்கள். நான் கொஞ்சம் பிரார்த்தனை செய்ய வேண்டும்'' என்றாள்  கிழவி.

சூடாக அவள் கொடுத்த ஆகாரத்தை விழுங்கி கொண்டே  டாக்டர் கபாலி அவளைப்  பார்த்தார்  . தரையில் விழுந்து வணங்கிய கிழவியின் எதிரே ஒரு தொட்டில். அசையாமல் அதில் ஒரு குழந்தை. முகத்தில் கவலையோடுஅந்த கிழவி தொடர்ந்து ப்ரார்த்தித்துக்கொண்டு இருந்தாள் .

'என்னம்மா  கவலை உங்களுக்கு?''
''என் பிரார்த்தனையை கிருஷ்ணன் நிறைவேற்றுவான் என்று நம்புகிறேன்''
'என்ன துன்பம் என்று சொல்லுங்கள் என்னால் முடிந்தால் உதவுகிறேன்'' டாக்டர் கபாலி  மனம் திறந்து நன்றியில்  சொன்னார்.
''கிருஷ்ணன் என் பிரார்த்தனை எல்லாம் நிறைவேற்றிவிட்டான். இன்னும் ஒன்று தான் பாக்கி. ஏன் அதை மட்டும் இன்னும்  நிறைவேற்றவில்லை என்று ஆச்சர்யப்படுகிறேன்''  என்றாள்  கிழவி.

''அது என்ன என்று என்னிடம் சொல்லலாமா'  என்று கெஞ்சினார் கபாலி
''இந்த தொட்டிலில் அசையாமல் இருப்பவன் என் பேர  குழந்தை கோபாலன். அவன் தாய் தந்தை இருவருமே ஒரு  கார் விபத்தில் நிமிஷத்தில் மறைந்து விட்டார்கள். ஏதோ ஒரு புற்றுநோய் இந்த குழந்தைக்கு. எல்லா டாக்டர்களும் கைவிட்டு விட்டார்கள்.  யாரோ ஒரு  டாக்டர் எங்கோ இருக்கிறாராம். அவர் தான் கடைசி நம்பிக்கை. அவர் தான் இந்த நோயை குணப்படுத்துவதில் நிபுணராம் . அவரை என்னைப்   போன்ற ஏழை எப்படி எங்கே போய் பார்த்து என் ஒரே வாரிசு இந்த உயிரை காப்பாற்றுவது?  கிருஷ்ணன் வழி காட்டுவான் என்ற நம்பிக்கை இன்னும் போகவில்லை.  விடாமல் அவனை தொழுது வேண்டிக்கொண்டு இந்த பேரக்குழந்தையை காப்பாற்ற சரணடைந்து கொண்டே இருக்கிறேன்.'' அழுது கொண்டே  கிழவி சொன்னாள் .
கபாலி சிலையாக நின்றார். கண்ணில் மழை.
''ஆஹா, நான்  புற்றுநோய் நிபுணன்.  எனக்கு மேதாவி பட்டம். கிளம்பினேன். விமானம் கோளாறு. போக முடியவில்லை. அப்படியும் தொடர்ந்து முயன்றேன். புயல், மழை, இரவில் பாதை மாறியது தெரியாது. வெகு தூரம் இங்கே வந்துவிட்டேன்.''
காரணம் ?
கிழவியின் பிரார்த்தனை.
''அம்மா கவலை படாதீர்கள்.  உங்கள் குழந்தையை காப்பாற்ற நான் முயல்வேன் . நான் தான் நீங்கள் தேடிய அந்த டாக்டர் 'கபாலி '
கிழவியின் இரு கரங்கள் சிரத்துக்கு சென்றன. '' கிருஷ்ணா. உன்னை  இந்த  முட்டாள் புரிந்து கொள்ளாமல் போய்விட்டேன். நீ  என் பாக்கி ஒரு பிரார்த்தனையையா  நிறைவேற்றிக்  கொண்டிருந்தாய்.   எந்த  சிறந்த  புற்று நோய் டாக்டர் என்  குழந்தையை காப்பாற்ற முடியுமோ அவரைக் கொண்டு வந்து இங்கே நிறுத்தியிருக்கிறாய்......நான் புரிந்து கொள்ளவே இல்லையே''
டாக்டர்  அந்த குழந்தையை மறுநாள் காலை அடுத்த பெரிய பட்டணத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்து தானே  அதற்கு வைத்தியம் செயது சிலநாட்களில் அது குணமடைந்து என்பது எல்லா சினிமாக்களிலும் வரும் கடைசி சுபம் சுபம் சுபம் காட்சி. அதற்குள்  டாக்டர்  தான் புதிதாக  கண்டுபிடித்த வைத்திய முறையில்  ஒரு சிறு குழந்தையின் புற்று நோய் குணமாகியது என்று உலகமுழுதும்  பத்ரிகைகள் கபாலியின் போட்டோவை பிரசுரித்தது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...