Thursday, November 10, 2022

MORNING PRAYER

 


விடிகாலையில் ஒரு குட்டி பிரார்த்தனை. 
நங்கநல்லூர்  J K  SIVAN 

நமக்கு பிடித்த  சினிமாப்பாட்டை  உடனே  மனப்பாடம் பண்ணி பாடுகிறோம்.  ''வாழக்கா தோப்பில்  வாடா மச்சான்....
அதைக்காட்டிலும்  சின்னதாக  ஒரு அற்புத  ஸ்லோகம் இருக்கிறது. அதை தினமும்  படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது சொல்லும்போது மனம் இனிக்கும்.
சில பேருக்கு  ப்ரம்ம முஹூர்த்தம் காலை  7.30 மணிக்கு மேலே  இருந்தாலும் பரவாயில்லை. கண் விழித்ததும்  இரு கைககளையும் விரித்து முகத்திற்கு நேராக பிடித்து  சொல்லவேண்டிய ஸ்லோகம் இது.
எதற்காக?
அது தானே  அன்று துவங்கும் முதல் பிரார்த்தனை.

कराग्रे वसते लक्ष्मीः करमध्ये सरस्वती ।
करमूले तु गोविन्दः प्रभाते करदर्शनम् ॥

karāgre vasate lakṣmīḥ karamadhye sarasvatī ।
karamūle tu govindaḥ prabhāte karadarśanam ॥

கராக்ரே வசதி  லக்ஷ்மி  கர மத்யே  ஸரஸ்வதி  
கர  மூலே து கோவிந்தா ப்ரபாதே கர தர்சனம் 

லட்சுமி சரஸ்வதி தேவிகளையம்  நாராயணனையும்  வணங்கும் ஸ்லோகம் இது.  நமது விரித்த கரங்களின்   மேல் பாகம், விரல்கள் பகுதிகளில் லக்ஷ்மி  தேவி வாசம் செயகிறாள்.  கையின் மத்ய பாகத்தில் சரஸ்வதி தேவி  குடியிருக்கிறாள்.
கையின் கீழ் பாகத்தில்  பகவான் விஷ்ணு, கோவிந்தன் இருந்து நம்மை காக்கிறான். 

கட்டாயம் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக்கொடுங்கள்.என் அன்பு வேண்டுகோள். 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...