Thursday, May 6, 2021

VARIYAR STORY


 உண்மை சரி தானே!!   --  நங்கநல்லூர்   J K SIVAN                  

நமக்கு  சாமியார்களை  நிறைய  தெரியும்.   அவர்கள் மற்றவர்களிடமிருந்து  தம்மை  வேறு படுத்திக்க காட்டிக்  கொள் பவர்கள்.  நான் கூடத்தான் நிறைய  வேதாந்தம்   சிந்திக்கி றேன்,பேசுகிறேன், எழுதுகிறேன், நான்  சாமியாரில்லையா?  சாமியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்கள்  தான் சாமியார்கள்.   நான் அவர்களில் ஒருவன் தானே!!. 

ஆனால் நாம் காணும் சாமியார்கள் எப்படி இருக்கவேண்டும் என்று  எதிர்பார்க்கிறோம் ? 

ஜடாமுடியோடு, தாடி மீசையோடு, அல்லது மழுங்க   மொட்டையோடு, காவியோடு,  கையில் தடியோ, கொம்போ, உடம்பு பூரா  விபூதி அல்லது நாமம், மணிமாலைகள்,   உடம்பு   பூரா  ருத்ராக்ஷங்கள்  அணிந்திருக்க வேண்டும்.   கூட யாராவது ரெண்டு பேராவது வேண்டும்.  சுவாமி  சுவாமி  குருநாதா  என்று நாலு பேர்  கேட்க  அவர்கள்   ஒலிக்க வேண்டும்.  எல்லோரும் விழுந்து வணங்க அவர் ஆசிர்வதிப்பதை பார்த்து  நாம் மதிக்கிறோம்.

என் பதிவில்  இன்று  வருபவர்  ஒரு சாதாரண மான   அமைதியான சாமியார்.  யோகி. ஒவ்வொரு ஊராகச் சென்று  ஒரு வேளை  மட்டும்  யார்  எது கொடுக்கிறார்களோ அதை ஒரு முறை   புசிப்பவர்.   ரொம்ப  பேசவே மாட்டார்.  பேசினால் அதில் பொய்  இருக்கவே இருக்காது.  

ஒருநாள் ஒரு ஊருக்குச் சென்றபோது   யாரிடமோ

“இந்த ஊரில்   பொய் பேசாதவர் யாராவது உண்டா?  என்று கேட்டபோது சுப்ரமணிய முதலியார் வீட்டை காட்டினார்கள்.

''அதோ   அந்த  மாடி  வீட்டு  முதலியார்  நல்லவர், சாது.   சிவனடியார் பக்தர்.  லக்ஷாதிபதி.   நான்கு பிள்ளைகள்''

முதலியார்  வீட்டுக்கு யோகி சென்றதும்  உட்கார்ந்திருந்த  முதலியார் உடனே எழுந்தார். ஓடி வந்து ஞானி முன்  விழுந்து வணங்கினார்.  அவரை ஆசனத்தில்  அமர்த்தி, 

” ஐயா, இங்கு உணவு அருந்தவேண்டும் '' 
என  வேண்டினார். அவருடைய அன்பு, பணிவு, அடக்கம் முதலிய நற்குணங்களைக் கண்டதும்  யோகிக்கு  பிடித்துவிட்டது.  ஆனால் அவர் உண்மையாளரா என்று சோதித்து விட்டு அப்புறம்  உணவு அருந்தலாம் என்று எண்ணினார்.   பேச்சு கொடுத்தார். 

“ முதலியார்  உங்களிடம் எவ்வளவு செல்வம் உண்டு?”

“சுவாமி! இருபத்து இரண்டாயிரம் ரூபாய் உண்டு”

குழந்தைகள் எத்தனை பேர்?”
“சுவாமி! ஒரே புதல்வன் தான்”
“உமக்கு வயது என்ன?”
“சுவாமி! எனக்கு வயது மூன்று வருஷம் ஐந்து மாதம் ஏழு நாள் பதினாறரை மணி”

சாமியாருக்கு கோபம் வந்தது. இவரைப் போய்   பொய்  பேசாதவர்  என்கிறார்களே?''. 
எனவே கோபத்தோடு  பேசினார்:

“முதலியார்வாள், எதற்கு  ஒன்றுமில்லாத விஷயத்துக்கு புளுகுகிறீர்கள்.  நீர் பேசுவ தெல்லாம்  நம்பும்படியாக இல்லையே.  இங்கு நான்  உணவு பூசித்தால், அது என்  தவத்தை அழித்து  என் குணத்தை மாற்றிவிடும்.   நான் பொய்  சொல்கிறவர்கள் வீட்டில் புசிப்பதில்லை.''  சாமியார்  எழுந்தார். 

முதலியார்    சாமியார் காலில் விழுந்து, “ சாமி,   நான் பொய் பேசவில்லை.  சத்தியம் சொல்கின் றேன். சற்று நிதானமாக ஆராய்ந்து பார்த்து உண்மை உணரவேண்டும்''  என்று சொல்லி   தனது  வரவு செலவு கணக்கு   புத்தகத்தை  எடுத்துக் காட்டினார்.

அதில் இருப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்தது.

“முதலியார்,  உங்கள்  கணக்குப் புத்தகமே   '' உமது சொத்து ஒரு லட்சம் ரூபாய் என்று  காட்டும்போது எப்படி  நீங்கள் என்னிடம்   22,000  ரூபாய்  என்று  பொய் சொன்னீர்கள் ?

“சுவாமி! ஒரு லட்ச ரூபாய் பெட்டியில் உள்ளது  என்றாலும்  பெட்டியில் உள்ள பணம் எனதாகு மா?  இதோ பாருங்கள்,  நான் செய்த தருமக் கணக்கில் இதுவரை   22,000 ரூபாய் தான்   செல வழிந் துள்ளது.   தருமம் புரிந்த பணம்தானே என்னுடையது? இப்போதே   நான் இறந்தால்   பெட்டியில் உள்ள  இந்த லக்ஷ ரூபாய்  என்னுடன் வராதே.  என்னோடு வருவது நான் செய்த தருமம்  ஒன்று தானே அது 22000 ரூபாய் தானே. அது தான் என் சொத்து.” என்று சொன்னேன்.

சாமியார்  ''ஆஹா  என்று  சந்தோஷமாக தலையாட்டினார்.  பிறகு    '

'முதலியார்  உங்களுக்கு   நாலு  பிள்ளைகள் இருக்கும்போது ஏன்  ஒன்று  என்று சொன்னீர்?.

''சுவாமி! எனக்குப் பிறந்தது 4  பிள்ளைகள் உண்மையில் ஒருவன் தான் என் பிள்ளை ''

''முதலியார்  என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?

“சுவாமி! இதோ  விளக்குகிறேன்.    முதலியார்   '' ''அப்பா  மகனே  கனே! நடேசா ” என  கூப்பிட் டார்.

 ''அப்பா  நான்   சீட்டு விளையாடுகிறேன், கொஞ்ச
நேரம் கழித்து வருகிறேன்''  என்று  பதில் வந்தது.

“மகனே!  வடிவேலா.''..என முதலியார் குரல் கொடுத்தார். 

“ஏன் இப்படிக் கத்தறே ,  வாயை மூடிக்கொண் டிரு” என்று  ஒரு குரல்  பதிலாக வந்தது.

“என் மகனே! சிவராஜா  என்று  ஒரு குரல் கொடுத் தார்   முதலியார். 

''சும்மா கிடா   உனக்குப் புத்தி இருக்கிறதா? உன்னோடு பேச என்னால் ஆகாது. பூமிக்குச் சுமையாக ஏன் இன்னும் இருக்கிறாய்? போய்த்  தொலை ” என்று  கோபமாக ஒருவன் கத்துவது காதில் விழுந்தது

.''அப்பா   குமரேசா '' என்று  ஒரு முறை  முதலியார் கூப்பிட்ட அடுத்த கணமே  ஒரு பையன்  ஓடிவந்தான்.  அப்பா  முதலியாரையும்  எதிரே இருந்த சாமியாரையும்  தொழுது வணங்கி னான்.  

''அப்பா  இவருக்கு   பால்  பழம் கொண்டு வரட்டு மா? என்று கேட்டு உபசரித்தான்.   தானாகவே  ஒரு விசிறியை எடுத்து   சாமியாருக்கும்  அப்பாவுக்கும் விசிறினான் 

முதலியார்  சாமியாரிடம்  “ சுவாமி! அந்த மூவரும் என் புதல்வர்களா?  என் கருத்துக்கு முரண் ஆனவர் கள் என் பிள்ளைகளா? போன பிறப்பிற்  நான் செய்த  பாபங்களின்  உருவங்கள்.   இவன் ஒருவன் தான் என் பிள்ளை” என்று  கருதுவதால்  எனக்கு  ஒரு பிள்ளை என்றேன்.

''முதலியார்  எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.   ஏன்  உன் வயது  விஷயத்தில்  நம்பும் படியாக  சொல்ல வில்லை? ''

“சுவாமி!    ஒவ்வொரு நாளும்  நான்   ஒன்றரை மணி நேரம்தான் வழிபாடு செய்கின்றேன். மிகுதி நேரம் எல்லாம் வயிற்றுக்காகவும் குடும்பத்து க்காகவும் உழைக்கின்றேன்.  இறைவனைப் பற்றி நினைக்காத பேசாத நாள் எல்லாம், பிறவா நாள் தானே? இறைவனைப் பூசிக்கும் நேரம்தான் எனக்குச் சொந்தம். அடியேனுக்கு இந்த உடம்பு பிறந்து அறுபது ஆண்டுகள் ஆயின. ஐந்து வயதிலிருந்து பூசிக்கின்றேன். நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரம் பூசை செய்கின்றேன். அந்தவகையாகப் பார்த்தால், 30,112.  1/2 ணி நேரம் ஆகின்றது. ஆகவே அடியேன் பிறந்து அறுபது ஆண்டுகள் ஆனாலும்,    நான்  ''பிறந்த நாள் ''எனக்குச் சொந்தமான   வயது திட்டமாக   3 வருஷம், 5 மாதம்  7 நாள்   16 1/2 மணி  நேரம் தானே'' சரியா  ஐயா?

முதலியார்  நீங்கள் சொன்னது  அப்பட்டமான உண்மை. நான் தான் புரிந்து கொள்ள தவறி விட்டேன்.

  1.தருமம் செய்த பணம் தான் ஒருவனுக்கு  சொந்தம்
2.தாய் தந்தை  கருத்தை அநுசரிக்கின்றவனே மகன்
3. இறைவனுக்கு  அளித்த  பூசை செய்த நேரமே  ஒருவனின்  நேரம்  என்பதை நிதர்சனமான  உண்மையைப் பேசிய  உங்கள்  வீட்டில் உணவு உண்பதில்  நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று   வாழ்த்தினார்  சாமியார்.

இந்த கதையை ஒரு நிகழ்ச்சியில் சொன்னவர்  திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...