Tuesday, May 18, 2021

GITANJALI

 


கீதாஞ்சலி   -   நங்கநல்லூர்   J K  SIVAN 

தாகூர்  




 59    கண்ணும்  கண்ணும்  கலந்து....


 

59.  YES, I know, this is nothing but thy love,
O beloved of my heart-this golden light that dances upon the leaves,
these idle clouds sailing across the sky,
this passing breeze leaving its coolness upon my forehead.
The morning light has flooded my eyes-
this is thy message to my heart.
Thy face is bent from above,
thy eyes look down on my eyes,
and my heart has touched thy feet.


''எனக்குத் தெரியாதாடா  கண்ணா,  இது உன்  ப்ரேமையைத் தவிர வேறில்லை. என் உள்ளத்தைக்  கொள்ளை கொண்டவனே,  இதோ இந்த சிறிய  இளம் பச்சை  இலையின் நுனியைப் பார்.  எப்படி முத்து  முத்தாக  பனிநீர் கொப்புளங்கள்  வட்ட வட்டமாக கண்ணாடிக் கொப்புளங்கங்களாக,  மேலே   அமர்ந்திருக்க  காற்றின் அசைவில்  ஆனந்தமாக  நர்த்தன மாடு கிறது.  சூரியன் ஒளியில் எத்தனை வண்ணம் உண்டோ அதெல்லாம் தங்க  முலாம் சேர்த்து, இலவசமாக அவை  பெற்று   வண்ணங்களைச் சேர்த்து  உலகத்திற்கு  தருகிறது.      

மேலே அண்ணாந்து பார்க்கிறேன்.  வானில்  சோம்பேறி மேகங்கள்  கூட்டமாக  மெதுவாக  எந்த ஒரு இலக்கும்
இல்லாமல்  காற்று ஆட்டி  வைத்த படி நகர்கின்றன.

மேகங்கள் காக்கை  போல் கருப்பாக இருந்தால் அதன் குணமுமா இருக்கும்? தனித்தே போகாதா? சேர்ந்தல்லவோ நகர்கிறது .

 இதென்ன விந்தை.  சில்லென்று காற்று எங்கிருந்தோ  ஐஸ்பெட்டி திறந்து வைத்து அதிலிருந்து வீசுவது போல்  என் மேல் பட்டாலும்   என் நெற்றியை மட்டும்   சுகமாக  சில்லென்று தடவிக் கொடுக்கிறதே.  இளஞ்சுரியன்  ரத்தச்சிவப்பில் என் கண்களை கூசும்படி செய்கிறானே.   கண்ணா  இதெல்லாமே  என் இதயத்தை மகிழ்விக்க  உன் பிரேமைச் செய்திகளா எனக்கு?

கிருஷ்ணா,   விண்ணிலிருந்து   உன் முகம்  குனிந்து என்னை பார்க்கிறதா?

உன் கண்கள் என் கண்களை சந்திக்கிறதா? நான் அண்ணாந்து மேலே பார்க்கிறேன்  அப்போது  என் இதயம் உன் திருவடிகளைத் தொட்டு  மலர்ந்து மகிழ்கிறதே!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...