Sunday, May 9, 2021

ADHI SANKARAR


 

ஆதி சங்கரர்    ---   நங்கநல்லூர்  J K  SIVAN

                         சாதனா   /   உபதேச பஞ்சகம்  - 3

இதுவரை  ஆதி சங்கரரின்  சாதனா பஞ்சகத்தில் ரெண்டு  ஸ்லோகங்கள்  அறிந்து கொண்டோம்.

இன்று மூன்றாவது. இதன் மூலம் மேலும் 8 படிக்கட்டுகள் தாண்டி உயரப்போகிறோம்.  மொத்தம்  40 படிக்கட்டுகள் இன்னும்  16 படிக்கட்டுகள் இருக்கிறது.


वाक्यार्थश्च विचार्यतां श्रुतिशिरः पक्षः समाश्रीयतां
दुस्तर्कात्सुविरम्यतां श्रुतिमतस्तर्कोऽनुसन्धीयताम्‌। 
ब्रह्मास्मीति विभाव्यतामहरहर्गर्वः परित्यज्यतां
देहेऽहंमतिरुझ्यतां बुधजनैर्वादः परित्यज्यताम्‌॥३॥ 

vākyārthaśca vicāryatāṁ śrutiśiraḥ pakṣaḥ samāśrīyatāṁ
dustarkātsuviramyatāṁ śrutimatastarko’nusandhīyatām | 
brahmāsmīti vibhāvyatāmaharahargarvaḥ parityajyatāṁ
dehe’haṁmatirujhyatāṁ budhajanairvādaḥ parityajyatām ||3|| 

வேத சாஸ்திர நூல்களைக்  கற்று அர்த்தம் புரிந்து கொள்ளவேண்டும். ரிஷிகள், கற்றுணர்ந்த மஹான்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை அவர்கள் பார்வையில் உணர  வேண்டும்.  விதண்டா வாதம், குதர்க்கம் உதவாது. ரிஷிகளை விட தனக்கு அதிகம் தெரியும் என்ற கனவில் சிலர் புது அர்த்தங்கள் சொல்லி குழப்புவது பஞ்சமகா பாதகத்தை ஆறாம் மஹா பாதகமாக மாற்றிவிடும். ஆகவே  ஆதி சங்கரரை படிப்  படியாக தருகிறேன்.

17. அருமையான மஹா வாக்கியங்களை அர்த்தத்தோடு உணர்ந்து பலனடைவாய்.
18. வேதங்கள் என்ன சொல்கிறது என்று முதலில் புரிந்து கொள்வோம். அதை உணர்த்த வேத ரிஷிகள் எந்த வார்த்தைகளை உபயோகித்து சொல்லியிருக்கிறார்கள் என்று யோசித்து ருசி.

19. குதிரைக்கு குர்ரம் என்றால் யானைக்கு யர்ரம் தானே -- இது தான்  விதண்டா வாதம்  என்பது.  இது   வேண்டாம்.

20 ரிஷிகள் எதை எவ்வாறு உணர்த்துகிறார்கள் என்பது பற்றி பேசுவோம். அறிந்து கொள்வோம்.,  அவர்கள் சொல்வது அவர்களது சொந்த அனுபவத்தின் அடிப்படியில் என்பதால்  விசேஷமானது. 

21. வேதங்கள் சொல்லும் தர்க்கம் என்ன ?அவற்றின் உட்பொருள் என்ன ? என்று மட்டுமே அறிந்து கொண்டு பின் போற்றுவோம். கற்றவர்களோடு விவாதம் வேண்டாம்.

22. நான் தான் ப்ரம்மம் என்ற எண்ணம் மனதில் வேர் விடட்டும்.

23. வேத வழியில் நடந்து, ஒவ்வொருநாளும், கர்வம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு நீங்கட்டும். அகம்பாவம் ஆபத்தானது.

24. தேஹாத்ம புத்தி வேண்டாம்.

''அடே , கிருஷ்ணமுர்த்தி '' என்று யாராவது கத்தினால் உடம்பை திருப்பி யார் கூப்பிட்டது என்று பார்க்கிறோமே, அந்த உடம்புக்கு அது இருக்கும் வரை கிருஷ்ணமூர்த்தி என்று தான் பெயர். எல்லோரும் அப்படி கூப்பிட்டால் அது நாம் என்று நினைக்கிறோமே அது தான் தப்பு. இந்த உடல் அந்த பெயரை தனது என்று நம்பி அதை கடைசியில் இழந்து ''பாடி'' body ஆகிறது. நான் உண்மையில் இந்த உடலாகிய கிருஷ்ணமூர்த்தி இல்லை. எனக்கு யாரோ வைத்த ஒரு அடை யாளம் இந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற பெயர். அது நான் இல்லை. நான் உண்மையில் பெயரில்லாத ஒரு ஆசாமி. உள்ளே இருப்பவன். ஆத்மா என்று அவனை ஞாபகம் வைத்துக் கொள்'' - என்கிறார் சங்கரர்.


தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...