Thursday, May 6, 2021

geethanjali

 


கீதாஞ்சலி   --    நங்கநல்லூர்  J K  SIVAN  ---
தாகூர்

                                         
53.  நந்தகமே  ஆனந்தம்

 
53. Beautiful is thy wristlet, decked with stars and cunningly wrought in myriad-coloured jewels.
But more beautiful to me thy sword with its curve of lightning like the outspread wings of the divine bird of Vishnu,
perfectly poised in the angry red light of the sunset.
It quivers like the one last response of life in ecstasy of pain at the final stroke of death;
it shines like the pure flame of being burning up earthly sense with one fierce flash.
Beautiful is thy wristlet, decked with starry gems;
but thy sword, O lord of thunder, is wrought with uttermost beauty, terrible to behold or think of.


கண்ணா, உன் மணிக்கட்டில் அணிந்திருக்கும் காப்பு, வர்ணஜாலங்களை கொப்புளிக்கும் ஒளிவீசும் கற்கள் பதித்ததாக இருக்கிறதே. அழகான நக்ஷத்ரங்களா அவை? உன் அழகுக்கு அழகூட்டுகிறதே.

ஆனால் எனக்கென்னவோ உன் வாள் ஒன்றே என் மனதை மயக்குகிறது.
ஆஹா என்ன அழகான வளைவு அதன் நுனியில், கூர்மை, தீட்டப்பட்ட அதன் முனை மின்னல் போலவோ கண்ணை குருடாக்குகிறது. மஹா விஷ்ணுவின் கருடன் ரெக்கை விரித்து பறக்கும்போது தோன்றும் அதே அழகு.
இந்த மாலை வெயில், பொன்னிறத்தில், எல்லாமே தங்கமாக முலாம் பூசப்பட் டிருக்கிறதே, அப்போது உன் வாளின் ஒளி அந்தி வான கோப  சிவப்புக்கு ஈடு அல்லவோ?

மரண காலத்தில் வலியில் வாழ்க்கை முடியும் முன்னே, உயிர் நீங்குமுன் உடல் ஊசலாடி நடுங்குமே அது போல் அல்லவோ உன் கூரிய வாள் முனை துடிக்கிறது. அக்னிப்  பிழம்பு போல் உலக பந்தத்தை ஒரு மின்னல் வெட்டாக எரிக்கும் சக்தி கொண்டது போல்  தோன்றுகிறதே.

உன் மணிக்கட்டு காப்பு அழகு தானடா கிருஷ்ணா. நக்ஷத்ர நவமணிகள் ஜொலிக்க கண்ணைப்பறிக்கிறது. இருந்தாலும், எனக்கு, ஹே மேகராஜா, உன் வாள் தான் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு, நினைத்தாலே கதி கலங்க வைக்கும் கம்பீரம், அழகு, கூர்மை, ஒளிமயம்....


தாகூர்  ஆச்சர்யமாக  விஷ்ணுவின்   வாள்  நந்தகத்தைப் பற்றி சொல்கிறாரே.  அதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்கிறேன். அக்னி புராணத்தில் ஒரு விவரம்:  

விஷ்ணுவை சங்கு சக்ரதாரியாக தான் நாம் பார்க்கிறோம்.  அவரை வாளொடு  பார்ப்பது அபூர்வம். கல்கி அவதாரத்தில் மட்டும் தான் குதிரைமேல் வாள்  ஏந்தி வருகிறது போல் படங்கள் உள்ளன. 

ஒருமுறை ப்ரம்மா  கங்கை கரையில் ஒரு யாகம் நடத்த  அருகே உயரமான  மேரு மலையில் மேல் தவமிருக்கிறார்.  அதை தடுக்க, அழிக்க  லோஹா சூரன் எனும் சக்தி வாய்ந்த அசுரன் வருகிறான்.  தவமிருக்கும் ப்ரம்மாவின் உடலிலிருந்து ஒரு உருவம் கிளம்புகிறது.  அது பிரம்மாவை வணங்கி நின்றது.  தேவர்கள் மகிழ்ந்து அந்த உருவத்தை ஒரு கூரிய  வாளாக மாற்றினார்கள். அதன் பெயர் நந்தகம் . அந்த சக்தி வாய்ந்த வாளை  யார் எடுத்து கையாளுவது ?  எனவே  விஷ்ணு வை வேண்டி னார்கள் தேவர்கள். மஹா விஷ்ணு  கந்தகத்தை எடுத்து உயர்த்தி பிடித்து  தர்மத்தை காப்பாற்ற  லோஹா சுரனை எதிர்த்தார். கடும் யுத்தம் நடந்தது.  அசுரனுக்கு 1000  கரங்கள். அத்தனையிலும் ஆயுதங்கள். கரிய  வைரம் பாய்ந்த  உறுதியான  மேகம்போல் நின்றான்.  கடைசியில் விஷ்ணுவின்  கூரிய  வாள் கந்தகம் லோஹாசுரனை பிளந்து கொன்றது.  வாள்  மீண்டும்  மானுட உருவம் பூண்டது.   பிரமனின் யாகம் நிறைவேறியது. தேவர்கள் நலம் பெற்றார்கள்.  நந்தகம்  மஹாவிஷ்ணுவின் வாளாக மாறியது. .  ஒரு சில விஷ்ணு சிலைகளில்  அவர்  நந்தகி யாக நிற்பதை காணலாம்.




 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...