Tuesday, May 11, 2021

PESUM DEIVAM


மஹாமஹோபாத்யாய ஸ்ரீ பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள்

   ----- நங்கநல்லூர்   J  K   SIVAN  ----

*ஸ்ரீ மஹாபெரியவாளுக்கு பால்யத்தில் பாடம் சொல்லிக்  கொடுத்தவர்கள்  சில வேத வித்துக்கள்.  சாஸ்திரங்களில் கரை கண்டவர்கள். முக்யமாக  மன்னார்குடி பெரியவா.   அவரது  பிரதம சிஷ்யர், பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள்.

மன்னார்குடி பெரியவாளுக்கு பிறகு கும்பகோணம் அத்வைத  சபாவின் அத்யக்ஷராக இருந்தவர்)*

''யஸயாந்தருஜ்வலதி திவ்யபரார்த்ததத்வமஜ ஞானரூபதிமிரம் பரிமார்ஜ்ஜயந்தம்
தம பாஸ்கரம் குருவரம் ஸகலாகமார்த்த போதப்ரதம் கணபதிம் மனஸா ஸ்மாராமி''  எனும் ஸ்லோகத்தின் அர்த்தம்:

எவருடைய உள்ளத்தில் பரமார்த்த தத்துவம் ஒளி வீசுகிறதோ, அறியாமை இருளைப் போக்குபவராக வும் ஒளிவிளக்கின்   திரு உருவமாகவும் குரு சிரேஷ்டர் ஆகவும் வேதங்கள்  உணர்த்தும்  அறிவுச் செல்வத்
தைக்  கொடுப்ப வருமாக இருக்கின்ற அந்த கணபதியை உள்ளத்தில் எண்ணுகிறேன்.

இந்தப் பிறப்பில் ஈஸ்வரனுடைய கருணையினால்தான் மனிதப் பிறவி பெறுகிறான்.   ரொம்பவும் உயர்ந்த பிறவி. அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது அல்லவா.   இவ்விதம்   பிறந்தும்  எல்லோரும் அறிவுச்  செல்வத்தை வளர்த்தவர்களாக ஆவது இல்லை. பிறவிப்பயன் அடைவதற்காக முயற்சியும் 
எல்லோராலும்
செய்யப்படுவதும் இல்லை.

பகவத் கீதை இப்படிச் சொல்லுகிறது:
மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்ச்சித் யததி ஸித்தயே
யததாமபி ஸித்தானாம் கஸ்ச்சின்மாம் வேத்தி தத்வத :

ஆயிரம் மனிதர்களில் யாரோ ஒருவன் தான் அறிவைத் தேட முயற்சி செய்கிறான். அப்படி முயற்சி
செய்பவர் களில் யாரோ ஒருவன் தான் என்னை உண்மையில் தெரிந்துகொள்கிறான். அறிவாளி
 களாக உள்ள மனிதரில் எல்லோரும் எல்லாம் அறிந்த புலவனாக ஆவது இல்லை. எல்லாம் அறிந்த புலவர்களுக்குள்ளேயும் மஹா புருஷர்கள் குறைவுதான். மஹாபுருஷர்களின் சேவையானது பாக்கியம் உள்ளவர்களுக்குத்தான் கிடைக்கிறது.

துர்லபம் த்ரயமேவைதத் தைவானுகிரஹ ஹேதுகம்
மனுஷயத்வம் முமுக்ஷுத்வம் மஹாபுருஷ ஸம்ஸ்ரய:

என்று ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களும் கூறியிருக்கிறார்.

அப்படிப்பட்ட  மஹாமஹோபாத்யாய ஸ்ரீ பைங்காநாடு கணபதி சாஸ்திரி என்ற மஹான், பொதுமக்களைத் தனது அறிவொளியால் அருள் பாலிப்பதற்கு (அதாவது எல்லோரையும் அறிவாளிகளாகச் செய்வதற்கு )
இந்த பாரத நாட்டில் பிறந்து மஹாபுருஷர் ஆனார் என்பது  நூல்கள் சொல்லும் உண்மை.  அவரைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மன்னார்குடிக்கு அருகில் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில்
துலஜேந்திரபுரம் என்ற பைங்காநாடு கிராமம் இருக்கிறது. அந்த ஊரில் 28.4.1871  அன்று  ஸ்ரீ  கணபதி சாஸ்திரிகள் பிறந்தார். அவர் பிறப்பால் அந்த  சின்ன கிராமம்  உலகப்புகழ்  பெருமை அடைந்தது. இவருடைய  அப்பா  ஸ்ரீ   சுப்ரமணிய சாஸ்திரிகள், யஜுர் வேத பண்டிதர். பழுத்த சிவ பக்தர்.  அம்மாவின் பெயர்  ஸ்ரீமதி  
 சீதாலெட்சுமி.  பக்தி  ஈஸ்வரார்த்த  காரியங்களில் நிறைய  ஈடுபாடும் சிறந்த பக்தி, உத்தம  குணநலன்களும் உடையவர். வேத விற்பன்னரான திரு அனந்தராம சாஸ்திரிகள் அவருடைய பாட்டனார் .
.
கணபதி சாஸ்திரி   அவருடைய  அம்மா வழி தாத்தா   சுவாமிநாத சாஸ்திரிகளிடம்  வேத பெற்றார்.  வி 
சொல்லித் தரப்பட்டது. இப்பெரியவர், வேதாரண்யத்தில் தமது பள்ளியில் தலைமை ஆசிரியராக
இருந்தார்.

1879-ம் ஆண்டில், கர்பாஷ்டம வயதில் உபநயனம் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு முறைப்படி  
வேதாத்ய
யனம் செய்து பைங்காநாடு வெங்கடேச சாஸ்திரிகள் மூலம் காவிய, இலக்கிய, அலங்காரம் படித்தார். *ஸ்ரீ வாக் தேவி, கணபதி சாஸ்திரிகளை இளம் வயதிலேயே ஆட்கொண்டு அருள் செய்து விட்டார். 

தன் பதினாறாவது வயதிலேயே 'கடாக்ஷ சதகம் ' என்னும் பக்தி ரசம் ததும்பும் ஸ்தோத்திரம் எழுதினார். அம்பாள்  அனுக்கிரஹம்  இல்லாமல் இது முடியாதே.   கணபதி சாஸ்திரிகளின்  முதல்  நூல் இது.  

அப்புறம் தான்   மஹாமஹோபாத்யாய ப்ரம்மஸ்ரீ தியாகராஜமகி என்ற ராஜு சாஸ்திரிகளிடம் சிஷ்யராக சேர்ந்தார்.   இந்த ராஜு சாஸ்திரிகள் தான்  மஹா பெரியவாளால்   ''மன்னார்குடி பெரியவா''  என்று போற்றப்பட்ட   அவருடைய முதல்  குரு. 

கணபதி சாஸ்திரிகள்   ஸ்ரீ   ராஜு சாஸ்திரிகளிடம்  தர்க்க, வியாகரண, மீமாம்ஸா, போன்ற வேதாந்த
 சாஸ்திரங்கள் எல்லாம் கற்று, கல்வி, கேள்வி அறிவில் உயர்வு பெற்றார். மன்னார்குடி பெரியவா ராஜு சாஸ்திரிகளை பற்றி முன்பே எழுதி இருந்தாலும் அடுத்த பதிவில் அவரைப் பற்றி மீண்டும் சொல்கிறேன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...