Friday, January 25, 2019

MORAL STORY




கடவுள் தந்த பரிசு J.K. SIVAN

பாண்டி துரைக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது. சே என்ன உலகம், எனக்கு ஒரு வேலையும் கிடைக்க மாட்டேன் என்கிறதே. இந்த கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? அப்படி என்றால் ஏன் என் குறை அவர் காதில் விழவில்லை? எனக்கு உதவ ஓடி வரவில்லையே. நேற்று கூட ஒரு கதை கேட்டேன். ஒரு பிரசங்கி கடவுள் நமக்கு எல்லாம் கொடுப்பவர் என்கிறார் என் விஷயத்தில் அப்படி ஒன்றும் காணோமே.

பாண்டித்துரை தாடி வளர்த்துக்கொண்டு காவி அணிந்து கொண்டு ஒரு குருவை தேடி அலைந்தான். ஒரு நாள் காலை அவன் வசித்த கொட்டாம்பட்டி கிராமத்துக்கு ஒரு சந்நியாசி வந்தார். எல்லோரும் அவர் பெரிய ஞானி.கேட்டதெல்லாம் ஆருள்பவர் என்கிறார்கள். பாண்டி அவரை தேடி சென்றான். அவரை தனியாக பிடிக்க முடியவில்லை. எப்போதும் யாராவது அவரை சூழ்ந்த வண்ணம் இருந்தார்கள். முதியவர். முகத்தில் தேஜஸ் தெரிந்தது.

அன்று சாயந்திரம் அவரை தனிமையில் சந்திக்க முடிந்தது. அவரிடம் தனது குறைகளை சொல்லி அழுதான். சாமியார் அவனுக்கு அறிவுரைகள் சொன்னார்.

''சரி அப்பனே கடைசியாக உன் குறை என்ன என்று சுருக்கமாக சொல்லு. ''

''இந்த கிருஷ்ணன் பாரபக்ஷம் உள்ளவன் என்று தெரிகிறது சுவாமி. எத்தனையோ பேரை லக்ஷாதி பதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் ஆக்குகிறான். எனக்கு மட்டும் ஒன்றுமே கொடுக்கவில்லையே. ''

''சரி என்னை சில பேர் சிலது வேண்டும், நிறைய பணம் தருகிறேன் என்று சொ
ல்கிறார்கள். அதை உன்னிடம் அறிவிக்கிறேன். நீ தந்து அவர்களிடமிருந்து வேண்டிய பணம் பெற்று சந்தோஷமாக இருக்கிறாயா?''

''சரி சுவாமி. சொல்லுங்கள்''

ஒரு பக்தன் மனைவிக்கு ஒரு கை தேவை. உன்னிடம் இரண்டு கை இருக்கிறதே ஒன்றை தருகிறாயா ஒரு லக்ஷம் ரூபாய் தருவார்களாம்.

முதல் தடவையாக ஆசையாக தன் இரு கைககளையும் தடவிப் பார்த்துக்கொண்டான் பாண்டி. ''இல்லை சுவாமி என்னால் தர இயலாது.''

ஒரு கால் தேவையான ஒருவர் அட்ரஸ் இருக்கிறது எவருக்காவது ஒரு காலை கொடுக்கிறாயா ஐந்து லக்ஷம் தருவார்.

''ஐயோ என் காலை நான் தரமுடியாது சுவாமி.''
நீ எதை கேட்டாலும் கொடுக்கிறேன், வீடு, வாசல், கார், பேங்கில் நிறைய பணம், எல்லாம் தர ஒருவர் தயார். உன் இரு கண்களை கொடுக்கிறாயா''

''போதும் சுவாமி, நான் உலகத்துல இருக்கிற அத்தனை பணம் கொடுத்தாலும் என் கண்களை தரமாட்டேன். ''

''அப்போ என்ன சொல்றே நீ. ஒரு பைசாவும் நீ கொடுக்காமல் உனக்கு இவ்வளவு விலை உயர்ந்த பொருள்களை பகவான் கிருஷ்ணன் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் கூட உனக்கு நன்றி இல்லையே உனக்கு. அவரை குறை சொல்றியே'' அவர் கொடுத்ததை சரியாக உபயோகிக்க உனக்கு தெரியவில்லை என்றால் அவர் என்ன செய்வார். போய் அவரை நினைத்து நன்றாக உழைத்து சந்தோஷம் தேடு. உனக்காக அது காத்துக்கொண்டிருக்கிறது.



நல்லவன் கெட்டவன் எல்லோருக்கும் பகவான் பாரபக்ஷம் கொஞ்சமும் இன்றி, அருமையான இந்த சொத்துக்களை கொடுத்திருக்கிறார். நன்றி கூறி நாம் அவற்றை நல்லபடியாக ஜாக்கிரதையாக நமக்கும் பிறக்கும் பயன்படுமாறு உபயோகிக்க வேண்டாமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...