Monday, January 14, 2019

MARGAZHI VIRUNDHU



''ஆண்டாளுக்கு திருமணம். அவசியம் வரவும்'' - ஜே.கே.சிவன்

என்னுடன் இந்த மார்கழி மாதம் பூரா விடியற்காலை குளிரில் குளித்து நடுங்கி கொண்டு தலையில் குரங்கு குல்லாவோடு, ஆண்டாள் மற்றும் அவள் தோழியர் பின்னே கூடவே ஆயர்பாடிக்கு தொடர்ந்து வந்து, அங்கிருந்து அடிக்கடி தென்கோடியில் வில்லிப்புத்தூருக்கு தாவுவதுமாக இருந்த உங்களுக்கு என்ன விதத்தில் நான் நன்றி தெரிவிக்கமுடியும்? ஆண்டாள் என்ன சொல்கிறாளோ அதையே திருப்பி சொல்வது தான் சாலச்சிறந்தது.

“கண்ணா, இந்த மார்கழி முழுதும் பக்தியோடு உன்னை பாடிய இந்த ஆயர்குடி இடைப் பெண்கள் நாங்கள் உன்னிடம் என்ன கேட்கிறோம்? நீயார்? எங்களைப்போல் இடையர் குலத்தில் பிறந்தவனல்லவா? .அதனால் நாம் எல்லோரும் ஒரே குலம் அன்றோ, ஒரே வித்தியாசம் நமக்குள் என்னவென்றால் நீ ஆண்டான் நான் ஆண்டாள் ஆக இருந்த போதும் உன் அடிமை. எங்களுக்கு நீ அருள வேண்டிய வரம் என்ன தெரியுமா?. இனி எத்தனை எத்தனை பிறவியோ அத்தனையிலும் நீ எங்களில் ஒருவன், நாங்கள் உன்னுடையவர்கள், புரிகிறதா?''

ஒரே வார்த்தையில் இறைவனோடு தன்னைப் பிணைத்து கொண்டு விட்டாள் ஆண்டாள். என்ன பொருத்தம் பாருங்கள்.

"கோதா" என்ற அவள் பெயரே "கோ(விந்)தா '' என்ற அந்த மாயாவியின் பெயருக்குள் அடங்கிவிட்டதே! ஆகவே அவனை வணங்கும்போது நாம் அவளையும் சேர்த்தே தான் வணங்குகிறோம். இந்த 30 பாடல்களையும் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் மகளாக ஆண்டாள் இந்த திருப்பாவையை எழுதவில்லை. தன்னை கிருஷ்ணன் காலத்திற்கே கொண்டு சென்று அன்று அங்கு வாழ்ந்த கோபர்கள் கோபியர்கள் எனப்படும் பசு கன்று மேய்க்கும் ஆயர் குலப் பெண்ணாக பாவித்து மற்ற சிறுமிகளுடன் சேர்ந் து பாவை நோன்பு நோற்றும் கிருஷ்ணனின் அருளைப் பெற்ற சிறுமியாகவே இந்த திருப்பாவை பாசுரங்கள் அமைந்தன. மார்கழி 30வது பாசுரத்தில் தான் ஸ்ரீ ஆண்டாள் இந்த பாசுரங்களை எவர் தப்பின்றி உண்மையான பக்தியோடு இறைவன் மேல் பாசத்தோடு மார்கழி மாதம் பூரா இசைக்கிறார்களோ அவர்கள் அந்த மாதவன் கேசவன் என்றெல்லாம் ஆயிர நாமங்கள் கொண்ட கோவிந்தனின் அருளை, சதுர்புஜ நாராயணனின் ஆசியைப் பெறுவர். குறையொன்றும் இல்லாத கோவிந்தன் தாள் சேர்வர். இது நிச்சயம், உறுதி, நம்பலாம் என்றுமுடிக்கிறாள்.

''திரு'' ப்பாற்கடலில் விளைந்த ''திரு'' அல்லவா அவள் -- ஆண்டாளாக அவதரித்து ''திரு'' ப்பாவை தந்தவள்!!. நம் எண்ணம் முற்றும் அந்த வெண்ணை ''திரு''டன் நீலவண்ணனுக்கே உரித்தாகட்டுமே!!.



இப்போது ஆண்டாள் எப்படி அந்த மதுசூதனனைக் கைப்பிடித்து கணவனாக்கிக் கொண்டதாக கனவு கண்டாள் என்பதை விழித்துக்கொண்டே அவள் கனவை நம் நினைவாக்கி அனுபவிக்கப் போகிறோம்! இது கனவல்ல. நிஜம். காலம் காலமாக ஆண்டாள் திருக்கல்யாணம் ஊரெங்கும் கோலாகலமாக நடைபெறுகிறதே. இது ஒன்றே நிதர்சனம். இனி நாம் ஆண்டாள் கல்யாணத்தில் சந்திக்கப்போகிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...