Sunday, November 29, 2020

my first land purchase

நானும்  நில  சொந்தக்காரன்.. J K  SIVAN 

இப்போது நினைத்துப்பார்த்தாலும்  சிரிப்பாக இருக்கிறது. அப்போது  என்  பரிதாப  நிலையை பார்த்திருக்கவேண்டும்.   ஒருவர்  பாக்கி  இல்லாமல்  நான்  செய்த காரியத்துக்கு என்னை அர்ச்சனை செய்யாதவர்கள் உலகத்திலேயே  கிடையாது. 

''தலை கொழுப்பு.  நாலு காசு சம்பாதிக்கிறோம் என்கிற கர்வம்.  (நான்  என்ன பிர்லாவா, டாடாவா ?) .  கர்வம்,  தான்தோன்றி தனம் .  சொந்த புத்தியும்  கிடையாது. சொல் பேச்சும் கேட்கறதில்லை.'' இதெல்லாம் நான் பெற்ற  இலவச  பட்டங்கள், விருதுகள்.   நான் என்ன அப்படி செய்துவிட்டேன்?

''சிவா, நீ பண்ணது மடத்தனம். மனிஷன் இருப்பானா  அங்கே?''

நான் பதிலே சொல்லவில்லை. ஒருவேளை எல்லோரும் சொல்வது சரியோ. நான் உண்மை யில் கடைந்தெடுத்த மடையனோ?  அவசர குடுக்கையோ?''

''ஒரு வார்த்தை என்கிட்டே கேட்டிருந்தா நான் சொல்லியிருப்பேனோல்லியோ?   பஞ்சாபகேசன் ஆதுரமாக என் தலையைத்  தடவினார்.  ஈனஸ்வரத்தில் பதில் சொன்னேன். 

''இல்லே  என் பிரென்ட்  சொன்னான். நல்ல இடமா இருக்கு. வாங்கிடுன்னு. வாங்கிட்டேன். இன்னும் முழுசா பணம் கொடுக்கல் லியே.  மூன்று இன்ஸ்டால்மெண்ட் லே தறேன்னுதானே  சொல்லிருக்கேன்.  வேணா இந்த முதல் இன்ஸ்டால்மென்டுக்கு தலை முழுகிடுறேன்.

''மறுபடியும் அவசரப்படாதே.  வாங்கிறது தான் வாங்கினியே.  சரி  எங்கே இருக்குன்னு  அந்த  இடத்தை போய் பார்த்தியா. ?''

''எங்கிருக்குன்னே தெரியாதே''

''பின்னே  எப்படி செலக்ட் பண்ணே?''

''என் அத்திம்பேர் சொன்னார்.   அவர்  அங்கேயே  வீடு கட்டிண்டு போய்ட்டார்.  இங்கே எல்லாம் நல்ல இடம் இருக்கு. நிறைய பேர் வந்து பார்த்துட் டு போறா. விலை ஏறினாலும் ஏறும். நீ  வாங்கற தா இருந்தா சீக்கிரம் வாங்கிடு ''ன்னு  சொன்னது  எனக்கு  மனசிலே தச்சிடுத்து.''

''அப்புறம்?''

''என்  சொந்தக்காரன் ஒருத்தன் ஏற்கனவே வாங்கி இருக்கான். இன்னும் வீடு கட்டலே . அவனை அவன் ஆபிஸ்லே போய் பார்த்து கேட்டேன்.  

என்ன சொன்னான்.?''

''இப்போதைக்கு  அங்கே வந்து தங்கி ஆபிஸ் போறது உனக்கு கொஞ்சம்  சௌகரியமா  இல்லன்னு பார்த்தாலும்  எப்படியும   சாதாரண மா ரெண்டு  மணிநேரம் முன்னா லேயே கிளம்பினா பத்துமணிக்கு  ஆபிஸ் போய் சேரலாம். மழைக்காலத்துலே கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்.  என்ன பண்ணமுடியும்.  ஒரு சௌகர்யத்தை பார்த்தா இன்னொன்னு இருக்காது.  எங்கேயும் அப்படித்தானே''.  பீஷ்மர்  மாதிரி உபதேசம் பண்ணினார்.  எனக்கு அவர் சொல்றது வாஸ்தவம்  தானே  என்று பட்டது.  

''நீங்க எதுக்கு அங்கே போய்  வாங்கினேள் ?' என்று  நான்  ரொம்ப  சாமர்த்தியசாலி மாதிரி  அவரை கேட்டேன்.

''ஆபிஸ்லே  நாலைஞ்சு பேர் மொத்தமாக  விலை பேசி  வாங்கினா. ஒரு பிளாட் இருக்குன்னு என் பக்கத்து சீட் காரன் தொளை ச்சான்.  நான்   அவன் கிட்டே  ரெண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கி யிருந்தேன்.  அவன் பேச்சை தட்டமுடி யல்லே. கடனுக்கு தான்  மாசா மாசம் கட்றேன் ''

சரி எல்லோரும்  ஏன்  நிலத்தை பார்க்காமல் வாங்கினாய் என்று கேட்கிறார்களே தப்பு என்று  சொல்கிறார்களே என்பதால்   என் ''நிலத்தை '' பார்க்க ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டேன்.  நான்  அப்போது  மைலாப்பூர்  வாசி. 

 பரங்கிமலை ரயில்வே நிலையத்தில் இறங்கி தெற்கு நோக்கி நடந்தேன்.  வயல்கள் .  சோடா கடை துரைசாமி எங்கிருக்கிறார் என்று தெரிய வில்லை. அவர் தான் எனக்கு விற்றவர்.  அவர் சொன்ன அட்ரஸ் தவிர மற்றதெல்லாம் கண்டு பிடிக்க முடிந்தது.  ரெண்டு மணி நேரத்திற்கு பிறகு,  பத்து பன்னிரண்டு பேர் தவறாக அடையாளம் காட்டிய இடம் எல்லாம் அலைந்து  துரைசாமியை  ரயில்வே கேட் அருகே சைக்கி ளில் நிற்கும்போது   பிடித்தேன். அவர் சைக்கிளில் பின்னால்  அமர்ந்தேன். மிதித்துக்கொண்டு வயல் வழியே எங்கெங்கெல்லாமோ வளைந்து வளைந்து சென்றார்.  கொஞ்சம் தெற்கே சென்றால் ஆப்பிரிக்கா வரும்போல் இருந்தது.  மனித சஞ்சாரமே  இல்லாத கண்ணுக்கெட்டிய  தூரம்  வரை  மரங்கள், தோப்புகள், பனை மரங்கள், குட்டைகள், வரப்புகள் , வயல்கள் இடையே  சைக்கிள் நின்றது.  

''இங்கேயா ?''

''இல்லே  சைக்கிள் பஞ்சர்.   கோபாலு வீட்டில் போய் ஒட்டிக்கொண்டு போகலாம்.  கோபாலு வீடு  உச்சி வெயில் வேளையில் கிடைத்து அவன் வந்து பஞ்சர் ஒட்டின  பிறகு  இருவரும் நடந்தே போனோம்.  என் செருப்புக்கு என்னை  பிடிக்க வில்லையா  நான் சென்ற இடம் பிடிக்க வில்லை யோ தெரியவில்லை.   அறுந்தது. அதை ஏற்கன வே ரெண்டு மூன்று தடவை தைத்தாகிவிட்டது. தலையை சுற்றி  ஏதோ ஒரு நிலத்தில் விசிறி எறிந்துவிட்டு வெறும் காலில் நடந்தால் எங்கு பார்த்தாலும்  நெருஞ்சி  முள் காலை பஞ்சர் செய்கிறது.  நிறைய நடந்தபிறகு   ஒரு இடத்தில் நின்றார்  துரைசாமி.  எதிரே  விச்ராந்தியாக ரெண்டு மூன்று எருமைகள் ஒரு குட்டையில்  சேற்றைக்குழம்பை சந்தனமாக  பூசிக்கொண்டு  அரைக்கண் மூடி  குளித்துக்ண்டிருந்தன.  

''சிவன் சார்,   அதோ தெரியுதா,   நான் அடையா ளம் சொன்ன அந்த ஒத்தை பனைமரம்?

'' எனக்கு  பல  பனைமரங்கள் தெரிந்தன  அதில் எதை தனியாக பார்ப்பது.  
''எந்த ஒத்தை பனைமரம்?. ?
'' கருவேல  முள் புதர் பக்கத்திலே குட்டி  ஈச்ச மரம் பின்னாலே  பாருங்க .''

கிட்டே போன போது  வெடுக்கென்று சட்டையை பிடித்து இழுத்தார்  துரைசாமி.   கீழே பாக்கமாட் டிங்களா ?''

ஒரு மஞ்சள் கட்டம் போட்ட தோலோடு  பளபள வென்று  ஒரு நீளமான   பாம்பு என்னை லக்ஷியம் செய்யாமல்  என்னை கடந்து சென்றதில் என் இதயம் நின்று விடும்போல் ஆகிவிட்டது.

சில வாத்து கூட்டங்கள் ஓட  ஒரு இடத்தை காட்டி னார் .  ரெண்டு கருங்கல் நட்டு இருந்தது. வேறு ஒன்றும் வித்யாசமாக இல்லை.  இதிலிருந்து  ரெண்டாவது பிளாட். நல்ல இடம். உங்களுக்கு  அதிர்ஷ்டம் சார்.  கார்னெர் பிளாட்டுக்கு அடுத்தது. பல சௌகர்யங்கள் அதாலே..''

''என்ன  அதிர்ஷ்டம் ?''   ஈனஸ்வரமாக புரியாமல்   கேட்டேன்.
பக்கத்திலே  கோவில் வருது.  அங்கே பார்க் வருது.''
எல்லாமே மரம் செடிகொடியாக  ''பார்க்காக'' வே  இருந்ததால்  தனியாக  ஒரு  பார்க்கில் எனக்கு நாட்டமில்லை.

தூரத்தில்  நங்கநல்லூர் பிள்ளையார் கோவில் சின்னதாக தெரிந்தது.  அது தான் அந்த ஊர் முதல் கோவில். ( சமீபத்தில் விமரிசையாக  ஒரு கும்பாபிஷேகம் நடந்ததே.)

நான் இருக்கும் இடத்தில் இருந்து  மூன்று  நாலு கி.மீ. தூரத்தில்  மீனம்பாக்கத்திலிருந்து வெள்ளை
யாக  மின்சார ரயில் பீச் நோக்கி ஓடியது.    பார்த்துக் கொண்டே இருக்கும்போதே எதிர் திசையில் தாம்பரம் நோக்கி ஒன்று  அதே வேகத்தில் ஓடியது. நடு நடுவே   நிறைய இடைவெளி விட்டு  அங்கங்கு  சில சிறிய  வீடுகளே  பல தினுசுகளில், அமைதி யாக  இருந்தன.

தெற்கே தூரத்தில்  பல்லாவரம்  திரிசூலம்  மலைப்பாறைகள் .  தெற்கே தலையை சுழட்டி பார்த்தேன்.  மலைகள்  மரங்களைத் தவிர  வேறு ஒன்றும் இல்லை. .

கிட்டத்தட்ட  ஐம்பது வருஷங்களுக்கு முன்  நங்கநல்லூரில் நான்  ஓர் பிளாட் ஓனர்.  
ஒண்ணரை க்ரௌண்ட்  ரெண்டாயிரம் ரூபாய்.. அடேயப்பா?  இவ்வளவு விலையா ?  எதுக்கு  இவ்வளவு ஜாஸ்தி? என்று நான் செய்த  மஹா பாதக செயலுக்கு தான் முதல் பாராவில் எனக்கு  அர்ச்சனை.   அந்த ரெண்டாயிரம் என் நண்பர்கள் உருவாக்களில் சிலர்  கொடுத்து உதவியது.  எல்லோர் கடனும் நான் அடைத்துவிட்டேன். நன்றிக்கடனை இன்றும் என்றும் அடைக்க முடியாது.

ஒரு சின்ன  இணைப்பு செயதி: 
அப்போது நான் முட்டாள்  என்று சொன்னவர்கள் ஒருவர் பாக்கியில்லாமல்  நாங்கள் தான் பா  முட்டாள்கள்  வாங்காமல் விட்டுவிட்டோம்.  நீ கொடுத்த ரெண்டாயிரத்துக்கு இப்போ ரெண்டு  கோடிக்கு மேல் கொடுக்க  எங்கே ப்பா போறது.? 

ஆமாம்  வாஸ்தவம்  நான்  அப்போது முட்டாளாக  இல்லாமலிருந்தால்  இப்போது முட்டாள் என்று நிரூபித்து இருப்பேன். வீடு  கட்டின மஹாபாரத ராமாயணத்தை அப்புறம் சொல்கிறேன்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...