Monday, November 16, 2020

RAMAR TIME

                               ராமர் கால மனிதர்கள்  கிருஷ்ணன் காலத்தில்.....2   J K  SIVAN 


பிருஹத்பலன்  ராமர் வம்சத்தை சேர்ந்தவன்  துவாபர யுகத்தில்  ஜயத்ரதனாக பிறக்கிறான்.   அர்ஜுன் மகன் அபிமன்யு, சக்ரவியூஹத்தை பிளந்து உள்ளே சென்று கௌரவ அதிரதர்களை எதிர்த்து வெளியே திரும்ப வழி அறியாமல் அவர்களால் சூழப்பட்டு, தனியொரு சிறுவனாக  போரிட்டபோது,   ஜயத்ரதனால்  பின்னாலிருந்து தாக்கப்பட்டு  மரணமடைந்தவன். 

இன்னொரு  ராமர் வம்ச அரசன் சுமித்ரன். புராணங்கள் என்ன சொல்கிறது என்றால்,   ராமர் குல  வரிசையில் கடைசி பெயர்  சுமித்ரன். அவனை  நந்த வம்ச அரசன்  மகா பத்ம நந்தன் தோற்கடித்து  மகதம் என்னும் ஊரை தலைநகராக்கினான். அவனை தோற்கடித்து தான்  சந்திர குப்தன் சாணக்கியன் உதவியோடு மௌரிய  சாம்ராஜ்யத்தை உருவாக்கினான்.  சரித்திரத்துக்குள்  நாம்  ஆழமாக போகவேண்டாம்.

ராமரின் இக்ஷ்வாகு வம்சத்தில்  ப்ரஹத் பாலனையும்  சேர்த்து  25 பெயர்கள் தெரிகிறது. கடைசி ஆள்  மேலே சொன்ன சுமித்ரன்.

1. ப்ரஹத்பலன், 2 ப்ரஹத்க்ஷயன், 3. உருக்ஷயன், 4. வத்சவ்யூஹன் , 5. ப்ரதிவ்யோமன், 6. திவாகரன், 7. சகாதேவன்,  8, ப்ரஹதஷ்வா  9.    பானுரதன் 10,  ப்ரதிதஷ்வன்  11.சுப்ரதீகன், 12.மருதேவன் 13. சுநக்ஷத்ரன்,  14, கின்னரன் , 15. அந்தரிக்ஷன்  16. சுவர்ணன்  17. சுமித்ரஅமித்ரஜித்  18.  தர்மின் , 19. க்ரிதஞ்சயன்  20. சஞ்சய மஹாகோசலன்   21. ப்ரஸேனஜித்  22. க்ஷுத்ரகன் 23. குலகன்   24.  சுரதன்  25 சுமித்ரன்.

இதை படிப்பவர்கள்  அது சரி  ப்ரஹத்பலனுக்கு முன்னால்  இருந்தவர்கள் யார்  என்று கேட்டால் ?  அதையும் தேடி அளிக்கிறேன்.  

1. ராமர், 2. குசன் ,3. அதிதி, 4. நிஷாதன் 5. நளன் , 6. நபஸ் , 7. புண்டரீகன், 8. க்ஷேமதன்வன்  9. தேவனிகன் , 10. அஹினாகு  11. பரிபத்ரன். 12. தளன்  13.  உக்தன்  14.  வஜ்ரநாபன் 15. ஷங்கணன் 16. வ்யுஷிதஷ்வன் 17. விஸ்வசஹன்  18. ஹிரண்யநாபன்   19. புஷ்யன்.  20. த்ருவஸந்தி  21.அக்னிவர்ணன்  22.ஷிக்ரன் . 23. மரு . 24. 8.பிரசுஷ்ருதன்  25 சுசந்தி  26, அமர்ஷன்  27.விஷ்ருதவந்தன் 28. ப்ருஹத்பலன். 

இந்த பெயர்களை படித்து தெரிந்துகொள்வதால்  என்ன பயன்  என்றால். கொஞ்ச நேரம்  கொரானா பற்றி நினைக்க நேரமிருக்காதே.

ராமாயண  கால  புஷ்பக விமானங்கள்  தான்  பின்னர் நமது ஏரோபிளேன்களின்  எள்ளுத்தாத்தாவுக்கு கொள்ளுத்தாத்தா...

சர்வ சக்தி வாய்ந்த ப்ரம்மாஸ்திரங்கள் தான் பின்னர் அணுகுண்டாக வேறு பிறவி எடுத்தன.  ஒரு அஸ்திரத்தை  செலுத்தியதும்  எங்கும் புகை மண்டலமாகி, அநேகர் மயங்கி விழுந்து பல ஆயிரம் யானை குதைரைகள் எல்லாம் விழுந்து மாண்டன   என்றால்  கிட்டத்தட்ட  ஹிரோஷிமா  நாகசாகி மாதிரி அல்லவா இருக்கிறது?  ஒரு ஆயுதத்தை வீசினான்  அடுத்த கணமே அந்த ஆயுதம் விருஷ்ணி  அந்தக குலத்தையே  அழித்தது எனும்போது அணுகுண்டு வயிற்றில் வளரும்  சிசு அதன்சந்ததியையும்  பாதித்ததில் என்ன ஆச்சர்யம்.

மொஹஞ்சதாரோ  ஹாரப்பா புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள்  பல உடல்கள் கைகோர்த்துக்கொண்டு தெருக்களில் விழுந்து கிடந்ததை  அடையாளம் கண்டார்கள். எலும்புக்கூடுகள்  எங்கும்  நிறைந்திருந்ததாம்.
பல்லாயிரக்கணக்கான  வருஷங்களுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்.  அங்கங்கே  விழுந்து கிடந்ததை பார்த்தால் ஏதோ திடீரென்று ஒரு ஆபத்து அவர்களைக் கொண்டிருக்கிறது. அது தான்  அஸ்திரம் செய்த வேலை. ஏன்  உடல்கள் அழுகவில்லை, ஏன்  பிணங்களை மிருகங்கள் தின்ன வில்லை? 

கங்கையிலிருந்து  ராஜ்மஹல் குன்றுகள் வரை உள்ள இடைபிரதேசங்களில்  அக்னி விளையாடியிருக்கிறது. எல்லாமே எரிந்து பொசுங்கிய நிலையில்.  சுவர்கள்,  மலைப்பகுதிகள் எல்லாமே விரிந்து பிளந்து எறிந்த நிலையில் என்பதால்  அங்கே  எரிமலைக்கே வாய்ப்பு இல்லாவிட்டாலும்  ஏதோ அக்னி அஸ்திரம் செய்த வேலையாக இருக்கலாம்.  சிந்து சமவெளி இப்போது தார் பாலைவனமாகியதற்கு காரணம் அங்கே உள்ள சாம்பல் மண் அடையாளம் சொல்கிறது.  பல  அக்னி அஸ்திரங்கள் அங்கே  தமது சுய ரூபத்தை காட்டி யுள்ளது. இதே கதைதான்  ராஜஸ்தான்  மூன்று சதுரமைல் விஸ்தீரணத்துக்கு   ஜோத்பூர் தெற்கே 10  மைல்  தூரத்தில்.    அங்கே  குடியிருப்பு வசதிக்கு  கட்டிடங்கள் கட்ட முயற்சி.  ஆனால்  மண் பரிசோதனை செய்தபோது அங்கே  அணுசக்தி பிரயோகம் நடந்திருக்கிறது. புற்றுநோய், குழந்தைகள் பிறக்காது என்று தெரிகிறதாம். விஞ்ஞானிகள் கூற்றுப்படி  அங்கே  8000 முதல் 12000 வருஷம் முன்பு  பெரும்  அணு சேதம் நடந்து கட்டிடங்கள் சாம்பலாகி   லக்ஷக்கணக்கானோர்  மாண்டதாக தெரிகிறதாம்.

நமது முன்னோர்  ஆக்கவும்  தெரிந்து அழிக்கவும் தெரிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். 
​​

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...