Sunday, July 31, 2022

RAMA'S BIRTH

 ராமன் எப்போ பிறந்தான்? #நங்கநல்லூர்_J_K_SIVAN

நேற்று காலை என்ன கலர் சட்டை போட்டிருந்தேன்? மத்தியானம் என்ன சாப்பிட்டேன்? இதெல்லாமே ஞாபகத்தில் இருக்காதபோது, பலர் இரவும் பகலும் மண்டையைக் குடைந்துகொண்டு ராமர் கிருஷ்ணன், பிறந்த நாளை நேரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஜோசியர்கள் மற்றும் சரித்திர வல்லுநர்கள் எண்ணற்ற ஆராய்வுகள் நடத்தி அற்புதமாக அந்த தேதி நேரத்திடை எல்லாம் கணித்து இருக்கிறார்கள். அதன்படி, ஸ்ரீ ராமநவமி ஜனவரி 10, 5114 BC அதாவது இன்றைக்கு 7128 வருஷங்களுக்கு முன்னர். ராமன் பிறந்த நேரம் ராத்திரி 12.30 க்கு.
காலம் மாறி விட்டது. நாம் ராமநவமியை சித்திரை மாதம் அதாவது ஆங்கில மாதம் ஏப்ரலில் ஏதோ ஒரு பஞ்சாங்கம் காட்டும் நாளில் கொண்டாடு கிறோம்.
சக்தி வாய்ந்த விண் நோக்கும் கருவிகளை பூதக் கண்ணாடிகளை எல்லாம் உபயோகித்து, பட்நகர் என்கிற சரித்திர நிபுணர் கண்டுபிடித்த உண்மை களை சொல்கிறார். ''அதி சக்தி வாய்ந்த விண்வெளி ஆராய்ச்சி இயந்திரங்களையும் கணினி உபகரணங் களையும் உபயோகித்து பார்த்ததில் ராமன் பிறந்த நாள் அன்று இருந்த கிரகங்களின் நிலை பாடுகள் சரியாக ராத்திரி 1230 க்கு கிமு 5114 ஜனவரி 10 அன்று ராமன் உதித்ததை துல்லியமாக நிருபணம் செய்கின்றன.
அந்த நாளிலிருந்து மெல்ல நகர்ந்து 25 வருஷங்க ளைப் பரிசோதித்ததில் ராமாயணத்தில் வரும் நிகழ்ச்சிகளின் தேதிகள், நேரங்கள் சரியாக பொருந்துகிறது. மேலும் நகர்ந்து விண்வெளி ஆராய்ச்சியை தொடர்ந்ததில் ராமரின் வனவாசம் 13 வது வருஷம், 10வது மாதத்தில் அமாவாசை அன்று சூரிய க்ரஹணம் நடந்தது தெரிகிறது. அன்றைய (அதாவது 7.10. 5077 BC ) ஆகாயத்தில் தோன்றிய கிரகங்கள், நக்ஷத்ரங்களை ஆராய்ந்தபோது ராமயணத்தில் சொன்னது வாஸ்தவம் என்று அறியப் படுகிறது. அடுத்து வந்த ரெண்டு க்ரஹணங்களையும் சரியாகக் கணக்கிட்டு ராமாயணத்தில்ஸ் வால்மீகி முனிவர் எந்த உபகரணமும் இல்லாமல் கண்டு பிடித்துச் சொல்லியது சரி என்கிறது.
ராமனின் தூதனாக ஹனுமான் இலங்கையில் சீதையை சந்தித்தது என்றைக்கு?, என்று கூட சொல்ல முடிகிறது. அது 12th September, 5076 BC என்கிறார்கள்.
இதை எதற்காக சொல்கிறேன் என்றால் ராமாயணம் புருடா இல்லை. பட்நகர் போன்றோர் பலர் சோதித்து,
ஆராய்ந்து கண்டறிந்து ஒப்புக்கொண்ட உண்மை நிகழ்வு தான் ராமாயணம். ஒவ்வொரு கால கட்டத்திலும் வால்மீகி கூறும் நாள், நேரம் காலம் எல்லாமே ஆதார பூர்வமாக இருக்கிறது..”
அப்படியும் சிலர் அது தப்பு, இது தவறு என்று சில சம்பவங்களையும் கால கட்டத்தையும் தங்களது கணக்குகளோடு சில புஸ்தக பிரகாரம் எதிர்ப்பதோ, மாறுபடுவதோ தவிர்க்கமுடியாதது. ஆனால் நமக்கு என்ன சந்தோஷம் என்றால், ஏதோ ஒன்று இருந்ததை ஒப்புக்கொண்டு தானே அது அப்படி யில்லை என்கிறார்கள். அதுவே போதும்.
''ராமா, எந்த புஸ்தகம் எது வேண்டுமானாலும் சொல்லட்டுமடா. நீ என்றுமே கோடானுகோடி மனசு புஸ்தகங்களில் நிலையாக இருக்கிறாய். அன்றாடம் அவைகளில் எங்களோடு உலவுகிறாய். அது போதும்.
ராமன் பல ஆயிரம் வருஷங்களுக்கு முன், ஏன் மில்லியன் வருஷங்களுக்கு முன்னால் த்ரேதா யுகத்தில் பிறந்தான். ஸ்ரீமத் பாகவத புராணம் ராமனை திரேதா யுக ராஜா என்கிறது. ( பா.பு.. 9.10.51). த்ரேதாயுகம் 1,200,000 வருஷங்கள் கொண்டது. அதற்கு மேலும் கூட இருக்கலாம்.
பின்னர் கிருஷ்ணன் இருந்த த்வாபர யுகம் 864,000 வருஷங்களைக் கொண்டிருந்தது. படித்தால் உங்களுக்கும் எழுதும்போது எனக்கும் கூட, தலை சுத்துகிறது. எப்படி கணக்கு போடுகிறார்கள்? வாயு புராணம் இதை சொல்கிறது. இதை யார் பரிசோதித்து ஆராய்ச்சி செய்து சொல்ல முடியும்.?
ஒரு விஷயத்தை மட்டும் சொல்கிறேன். வாயுபுராணத்தில் (70.47-48- published by Motilal Banarsidass) ராவணனது வாழ்க்கையை விவரிக்கிறது. ராவணனின் தவ வலிமை குன்றியபோது தான் அவன் தசரதன் மகன் ராமனை சந்தித்தான். இது 24வது த்ரேதா யுகத்தில் நடந்த ராம- ராவண யுத்தம் பற்றியும் அதில் ராவணனும் அவனைச் சார்ந்தவர்களும் அழிந்ததை சொல்கிறது.:
tretayuge chaturvinshe ravanastapasah kshayat
ramam dasharathim prapya saganah kshayamiyavan
நான் மேலே குறிப்பிட்ட விண்வெளி நக்ஷத்திர க்ரஹ ஆராய்ச்சி ராமன் த்ரேதா யுகத்தை சேர்ந்தவன் என்று காட்டுகிறது. மத்ஸ்ய புராணம் (47/240,243-246) மகாவிஷ்ணுவின் அவதாரங்களை குறிப்பிடு கையில் பகவான் ராமனாக அவதரித்தது 24வது திரேதா யுகத்தில் என்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...