Monday, July 4, 2022

pesum deivam

 பேசும் தெய்வம்    - நங்கநல்லூர்  J.K. SIVAN  


பெரியவா போற்றிய  ''மன்னார்குடி பெரியவா''   - நங்கநல்லூர்  J.K. SIVAN

மஹா பெரியவா என்றால்  சின்ன குழந்தைக்கு கூட  தெரியும்  அது உம்மாச்சி தாத்தா என்று அவர்  படத்தை காட்டி கன்னத்தில் போட்டுக்கொள்ளும்.  

 காஞ்சி பெரிவா , பெரியவா,  பெரிய பெரியவா, பரமாச்சார்யா, உம்மாச்சி தாத்தா, தாத்தா உம்மாச்சி இன்னும் எத்தனையோ   பேர் அவருக்கு.  அப்படிப்பட்ட  ''மஹா பெரியவா''  இன்னொருத்தரை  மரியாதை யோடு  ''பெரியவா'' என்று தான் எப்போதும் குறிப்பிடு வார்.யார் அது?

ஒருவரை ''பெரியவா’ என்னும்போது  அவர்   கல்வி கேள்விகளில், வித்வத்தில்,  அன்பில் பண்பில் , தெய்வீ
கத் தில், ஆன்மீகத்தில்,  தவத்தில், தியானத்தில்  சிறந்தவராக இருக்கவேண்டும். இதெல்லாமும்,  இதைவிட இன்னமும்  இன்னமும் கூட  அதிக  சக்தி கொண்டவராக இருப்பதால் தான் காஞ்சி பரமாச்சா ரியாரை நாம் '' மஹா பெரியவா '' என்கிறோம்.    

அப்படிப்பட்ட  மஹா பெரியவாளே, இன்னொருவரை ''மன்னார்குடி பெரியவா'' என்று சொல்லும்போது.. எவ்வளவு மரியாதைக் குரியவர்  மன்னார்குடி, மஹா மஹோபாத்யாய தியாகராஜ மஹி ராஜு சாஸ்திரிகள் (28.5.1815- 4.3.1903) தான் மன்னார்குடி பெரியவா.  பாரத் வாஜ வம்ச வேத வியாசர்.    அடையபலம் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் குடும்பம். திருவாரூர் கூத்தம்பாடி கிராமத் தவர். அம்மா: மரகதவல்லி ஜானகி அம்மாள் அப்பா: மார்க்க ஸஹாய  தீக்ஷிதர்.    

மன்னார்குடியில் முதல் அக்ரஹாரத்தில் குருகுலம் அமைத்து ஆயிரக்கணக்கான வித்யார்த்தி களுக்கு வேத சாஸ்திரம், அனுஷ்டானம் கிரந்தம் எல்லாம் கற்பித்தவர்.  வெளிமாநில   மாணவர்கள் வந்து  கல்வி கற்றார்கள்.  எல்லோருக்கும்  அன்னதானம், வஸ்த்ர தானம் அளிக்க  அநேகர் உதவினார்கள்.  மன்னார்குடி பெரியவா  பாடம் கற்பிப்பதில் ரொம்ப  ஸ்ட்ரிக்ட் . கண்டிப்பு.  கோபிப்பார். அதே சமயம் புரியவில்லை என்றால்  திரும்ப திரும்ப சொல்லித் தருவார்.

தினமும்   வடக்கே நடந்து கைலாசநாதர் கோவில் அருகே தான் காவேரி ஸ்நானம். சிஷ்யர்கள் தெற்கே மீனாட்சி அம்மன் ஆலய படித்துறையில் ஸ்னானம் செய்வார்கள்.  ஒரு  சிஷ்யன் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் (ஐவரும்  மஹா பெரியவாளுக்கு  குரு)  ஒரு  தடவை தர்க்கத்தில் விடை சொன்னதை அவமரியாதை, கர்வம் என்று எடுத்துக்கொண்டு தண்டிக்க  குரு  குலத்தை விட்டு அனுப்பினார். கிருஷ்ண சாஸ்திரி வெளியே சென்று ராமாயண ப்ரவசனங்கள் நடத்தினார்.

இதர சிஷ்யர்கள் மூலம் கிருஷ்ணசாஸ்திரியின் பிரசங்கங்கள் நன்றாக இருப்பதாக கேள்விப் பட்டு தனது சிஷ்யனின் பிரசங்கத்தை நேரில் சென்று கேட்ட  மன்னார்குடி பெரியவா மகிழ்ந்தார். ராமனின் கல்யாண குணங்களை பற்றி பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் கடல் மடை திறந்தாற்போல் பேசிக்கொண்டிருந்தார். அன்று ''ராமனின் பொறுமை'' பற்றி பிரசங்கம். ''என் கண்ணை திறந்துவிட்டது கிருஷ்ணன் பேச்சு '' என்று அதிசயித்தார்  மன்னார்
குடி பெரியவா. பிரசங்கம் முடிந்து கிருஷ்ண சாஸ்திரி
கள் தனது குருவந்திருந்ததை அறிந்து அவரை நமஸ்கரித்து பவ்யமாக கைகட்டி நின்றார்.

''அப்பா கிருஷ்ணா, இன்னிக்கு என் கண்ணை திறந்துட்டேடா.  அடடா,   ஸ்ரீ ராமனின்  பத்தி நீ பேசினது அற்புதம். அதுவும் பொறுமையைப் பத்தி . அபாரம்.  அபாரம்.  நீ ஒரு மஹாநுபாவன். எத்தனையோ ஜனங்களுக்கு நீ உன்னதமான சந்தோஷத்தை  தரப்போறே. நாளையிலேர்ந்து மறுபடியும் வா. உனக்கு நிறைய  நான்  இன்னும் சொல்லித்தரணும்''

இந்த நிகழ்ச்சி  மன்னார்குடி பெரியவாளை மாற்றி அவரிடம் இருந்த இயற்கையான  கோப குணம்  மாயமாக மறைந்து விட்டது. இரக்க குணம், அமைதி, பொறுமை உள்ளவராக்கி விட்டது..

1864ல் அப்பாவுக்கு சோமயாகம் பண்ணினார். அப்பா சொல்படி அப்பாவின் சகோதரர் அப்பய்ய தீக்ஷிதர் பிள்ளை நீலகண்ட சாஸ்திரியை தத்து எடுத்துக் கொண்டார். இருவருமாக  குருகுலம்  நிர்வாகம் செய்தார்கள். . பல சந்யாசிகள் கூட வந்து மாணவர் களாக சேர்ந்து வேத சாஸ்திரம் கற்றார்கள். அந்த
குருகுலம் பிற்காலத்தில் சங்கர  மடமாகியது. இதற்குதவியவர் வேறு யாருமில்லை. நமது  பரமாச்சாரியார் தான். அந்த குருகுலத்தில் உருவான மஹான்கள் சிலர் பெயர்களை சொல்கிறேன்:

பைங்காநாடு கணபதி சாஸ்திரி, 
நடுக்காவேரி ஸ்ரீனிவாச சாஸ்திரி, 
சுந்தர சாஸ்திரி, 
கோஷ்டிபுரம் ஹரிஹர சாஸ்திரி,
 திருப்பதி வேங்கடசுப்ரமண்ய சாஸ்திரி.
 மல்லாரி ராமகிருஷ்ண சாஸ்திரி,
பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி, 
காசி ப்ரஹ்மானந்த ஸ்வாமிகள், 
பாலக்ரிஷ்ணானந்த ஸ்வாமிகள்
ராம க்ரிஷ்ணானந்த ஸ்வாமிகள், 
மஹாதேவ ஸ்வாமிகள், 
தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள்,
மகாராஷ்டிரா ஸ்வாமிகள், 
சச்சிதானந்த ஸ்வாமிகள் , தென்னாங்குளம் வைஷ்ணவ, நீலகண்ட சாஸ்திரி,
 யஞஸ்வாமி சாஸ்திரி, 
சுத்தமல்லி ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள் யதீந்திராள்.  

இவர்களில்  யாரையாவது விவரமாக உங்களுக்கு தெரிந்தால், அவர்கள் குடும்பத்தில் வழி வந்தவர்களாக இருந்தால் தாராளமாக எனக்கு அவர்களை பற்றி படங்கள், விவரங்கள் அனுப்புங்கள் எல்லோருக்கும் அறிவிக்கிறேன்.  நிறையபேருக்கு இவர்களைப்  பற்றி தெரியவேண்டும். இந்த  மகான்களை  நாம் எல்லோரும் அறியவேண்டாமா? 

மன்னார்குடி பெரியவா தனது  தாத்தாவிடம் சாமவேதம் கற்றார். அப்பாவிடம் காவ்யம், நாடகம் எல்லாம் கற்றார். பதினைந்து வயதில் ஸம்ஸ்க்ரிதத்தில் எழுத படிக்க, பேச, கவிகள் இயற்ற திறமை பெற்றார். ஸ்ரீ நாராயண சரஸ்வதியிடம் மேற்படிப்பு. ஸ்வயம்பிரகாச யதி களிடம் வேதாந்தம். மேல காவேரி சின்னண்ணா தீக்ஷிதரிடம் மஹா பாஷ்யம் கும்பகோணம் ஸ்ரீ ரகுநாத சாஸ்திரிகளிடம் மீமாம்சம் பாடம் பெற்றார்.

1887ல் பிரிட்டிஷ் ராணி விக்டோரியாவின் தங்கவிழா. மஹாமஹோபாத்யாய பட்டம் கொடுக்க ராஜு சாஸ் திரிகள் பேர் தேர்வு ஆனது. டில்லிக்கு கூப்பிட்டார்கள். தனது நித்ய கர்மா நுஷ்டா னம் , பூஜைகள் தடை படக் கூடாது என்று ''டெல்லி எல்லாம் நான் போகமாட்டேன் எனக்கு பட்டம் வேண்டாம்''  என்று சொல்லிவிட்டார்.   

இந்திய கவர்னர் ஜெனெரல் தஞ்சாவூர் கலெக்டரை அழைத்து அவர் நேரில் வீட்டுக்கே  வந்து பட்டத்தை அளித்ததால் பெற்றுக்கொண்டார்.

இன்னும் நிறைய வரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...