Friday, July 22, 2022

SHEERDI BABA

 

மனிதருள் ஒரு தெய்வம் -   #நங்கநல்லூர்_J_K_SIVAN 


விசித்ர  பாபா 

ஷீர்டி  பாபா ஒரு உன்னத, அபூர்வ  ப்ரம்ம ஞானி. அவர் செய்யும் காரியங்களுக்கோ, சொல்லும் வாசகங் களுக்கோ எளிதில் பாமரர்களாகிய  பக்தர்களுக்கும்  நமக்கும் அர்த்தம் புரியாது. ஏதோ பைத்தியம் உளறுகிறது என்று வேண்டுமானால் சொல்லத்  தோன்றும். விமர்சிக்கலாம்.  நாம்  ரயிலில் அமர்ந்து ஓடிக்கொண்டிருந்தாலும் எதிரே ஜன்னலில் தோன்றும் மரங்கள் வீடுகள் எல்லாம் ஓடுகிறது என்று சொல்கிறோமே அதே தான் இது.  அஞ்ஞானம்.

ஷீர்டி பாபா  திடீரென்று ஒருவரை ''எனக்கு  பதிமூன்று ரூபாய்  எட்டணா காசு  கொடு'' என்று பிடுங்குவார். அடுத்த கணமே  யாரோ ஒருவரை, அந்த ஆசாமி  எதிர் பார்க்காத போதே,  கூப்பிட்டு அதை கொடுத்து விடுவார்... ஏன்  எதற்கு?  அப்பறமாவது  சம்பந்தப்பட்டவர்களுக்கு காரணம்  புரியுமோ புரியாதோ?
 
ஒருநாள்  ''கேல்கர், இங்கே வா.  இன்று  குரு பூர்ணிமா இல்லையா. எனக்கு குரு பூஜை பண்ணவேண்டாமா?'' என்றார்.

குரு பூஜை என்றால் என்ன. எப்படி செய்வது?  என்று தெரியாதே.  '' பாபா  குருபூஜா என்றால் என்ன ?'' பட்டென்று கேட்டுவிட்டார் கேல்கர்.

'' குரு யார்  என்று நீ நினைக்கிறாய்?  மடத்தில் மற்றவர்கள் காட்டும்  யாரோ ஒருவர்  இல்லை. தாடி மீசை, ஜடாமுடி முனிவர்களும் காவி வேட்டி  சன்யாசிகளும் குரு இல்லை . பகவான் தான் குரு. புரிகிறதா?  அது தான்  ப்ரம்மா.  அவர் தான் விஷ்ணு. அதுவே  மகேஸ்வரன்.  பரம்பொருள், பரமாத்மா என்கிறார்களே  அது தான் அது.  அதற்கு தான்  நமஸ்காரம் பூஜை  எல்லாம்.  உண்மையான குரு என்பவன் நான்  சொன்ன மூன்று தெய்வங்களின், திரிமூர்த்திகளின் உருவும் ஒன்றானவன்.  சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் மூன்றையும்  கண் காணிப்பவன். இதிலிருந்து புரியவில்லையா?   பகவான் தான் குரு''  என்றார்  பாபா.

''பாபாஜி,  அப்படியென்றால்   நான்  பிரம்மா  விஷ்ணு  ருத்ரனை வழிபடவேண்டுமா, பூஜிக்கவேண்டுமா? ''
கேல்கர் அப்பாவியாக கேட்டார்.

பாபாவுக்கு  கோபம் வந்துவிட்டது. குரல் உயர்ந்தது. ''ஹே  சைத்தான்,  நான் இங்கிருக்கிறேனே. என்னைப்  பூஜை  செய் , வணங்கு'' என்று கத்தினார் பாபா.  கேல்கர் மற்றும் அருகிலிருந் தோர்கள்  பாபாவின்  பேச்சி லிருந்து அவரது சக்தி என்ன என்று புரிந்துகொண்டார்கள்.

நாளாக ஆக  ஷீர்டியின் மஹத்வம் எங்கும்  பரவ ஆரம்பித்தது.  பக்தர்கள் கூட்டம் பெருகியது.  ஸாதே , பாபா வுடன்  இருப்பவர்.  அவரது அணுக்க தொண்டர்.   ஸாதே யை பக்தர்களுக்கு பிடிக்கவில்லை.  அவர் மீது பக்தர்களுக்கு கோபம் வெறுப்பு உண்டாவதற்கு காரணம் பாபாவிற்கு  பக்தர்கள் அளிக்கும் காணிக்  கைகளை ஒரு உண்டியலில் வசூலித்து அதை கோயில் கட்ட உபயோகிக்க எண்ணினார்.  இந்த கால கட்டத் தில் ஒரு  அதிர்ச்சி.

யாரோ கொடுத்த வெள்ளி த்தேர், வெள்ளி குதிரைகள் ஸாதேயின்  கண்காணிப்பில் இருந்தபோது திருடு போய்விட்டது.   இந்த திருட்டில் ஸாதேவுக்கும்  ஏதோ ஒரு பங்கு இருக்கும் என்று சந்தேகம் எழுந்தது. தனி யாக அவர்  பிரயாணம் செய்யும்போது அவரை கோடாலியால் வெட்ட  ஒரு சிலர்  திட்டம் போட்டார்கள். இந்த விஷயம் காற்றில் கசிந்து ஸாதேயின் மாமாவுக்கு தெரிந்து விட்டது.

''ஸாதே,   இனி நீ இங்கு இருப்பது ஆபத்து. உன் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஷீர்டியிலிருந்து போய்விடு என்று அறிவுரை சொன்னார்.  நீ  எங்கிருந்தாலும் ஷீர்டி பாபாவை மனதார வேண்டிக்கொள்.  உடனே இங்கிருந்து வெளியேறு''   என்றார் மாமா.    பாபாவைப் பிரிய மனமில்லாமல் ஸாதே  ஷீர்டியை விட்டு வெளியேறினார். பாபாவிடம் எதுவும் சொல்லவில்லை.
பாபாவைப்  பொறுத்தவரை  அடிக்கடி  ஸாதேயை  அழைப்பார். அருகில் வரச்சொல்லி ஏதாவது கேட்பார், வேலை  கொடுப்பார்,திட்டுவார்.

''எங்கே  ஸாதேயைக் காணோம்''  என்று  கேட்டார்,  தேடினார்.  ஸாதேயைக்  காணாமல் பாபாவின் சஞ்சலம்  புலப்பட்டது.  பக்தர்களுக்கு  ஸாதேயின்  பிரிவு பாபாவை எப்படி நெகிழ வைத்தது என்று புரிந்தது. ஸாதே  திரும்பி வந்தார். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...